Skip to main content

திருவேளைக்காரன் வகுப்பு

திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு - திருவேளைக்காரன் வகுப்பு


ஆன பய பத்தி வழிபாடு பெறு முத்தி

அதுவாக நிகழ் பக்த ஜனவாரக்காரனும் 


ஆரம் அது உரித்த கனி காரணம் முதற்று அமைய

நாருடன் உணக்கைபரி தீமைக்காரனும் 


ஆகமம் விளைத்த கில லோகமு நொடிப் பளவில்

ஆசையொடு சுற்றுமதி வேகக்காரனும் 


ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிய

அநுபூதியடை வித்ததொரு பார்வைக்காரனும் 


ஆடலைவு பட்டமரர் நாடது பிழைக்க

அமராவதி புரக்குமடல் ஆண்மைக்காரனும் 


ஆடகவி சித்ரகன கோபுர முகப்பில்

அருணாபுரியில் நிற்கும் அடையாளக்காரனும் 


ஆயிர முகத்து நதி பாலனும் அத்தடிமை

யானவர் தொடுத்த கவி மாலைக்காரனும் 


ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசு

மாதிமுடி வற்ற திருநாமக்காரனும் 


யான் எனதெனச் சருவும் ஈன சமயத்தவரும்

யாரும் உணர்தற்கு அரிய நேர்மைக்காரனும் 


யாது நிலை யற்றலையும் ஏழு பிறவிக் கடலை

ஏறவிடு நற்கருணை யோடக்காரனும் 


ஏரகம் இடைக்கழிசி இராமலை திருப்பழநி

ஏரணி செருத்தணியில் வாசக்காரனும் 


ஏழையின் இரட்டை வினை யாயதொருடற் 

சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும் 


யாமளை மணக்கும் அகசாமளை மணிக்குயிலை

யாயென அழைத்துருகு நேயக்காரனும் 


ஏதமற நிச்சய மனோலய விளக்கொளியும்

யாக முனிவர்க்குரிய காவற்காரனும் 


ஈரிரு மருப்புடைய சோனை மதவெற்பிவரும்

யானை அளவிற்றுவளும் ஆசைக்காரனும் 


ஏடவிழ் கடப்பமலர் கூதள முடிக்கும்

இளையோனும் அறிவிற் பெரிய மேன்மைக்காரனும் 


வானவர் பொருட்டு மகவானது பொருட்டுமலர்

வாவியில் உதித்தமுக மாயக்காரனும் 


வாரண பதிக்கு உதவு நாரணனு உவக்கு

மருமானும் அயனைக் கறுவு கோபக்காரனும் 


வாழியென நித்த மறவாது பரவிற் சரண

வாரிசம் அளிக்கும் உபகாரக்காரனும் 


மாடமதில் சுற்றிய திரிகூடகிரியிற் கதிர்செய்

மாநகரியிற் கடவுள் ஆயக்காரனும் 


வாளெயிற துற்ற பகுவாய் தொறு நெருப்புமிழும்

வாசுகி எடுத்து உதறும் வாசிக்காரனும் 


வாளகிரியைத் தனது தாளிலிடியப்பொருது

வாகை புனை குக்குடப தாகைக்காரனும் 


மாசிலு உயிருக்கு உயிர் மாசில் உணர்வுக்கு குணர்வும்

வானில் அணுவுக்கு அணுவு உபாயக்காரனும் 


வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்படம

காடவியில் நிற்பத ஓர் சகாயக்காரனும் 


மீனவனு மிக்க புலவோரு முறை பொற் பலகை

மீது அமர் தமிழ் திரவிய விநோதக்காரனும் 


வேரி மது மத்த மதி தாதகி கிடுக்கைபுனை

வேணியர் துதிப்பத ஒரு கேள்விக்காரனும் 


வேல துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டு உருவ

வேலை உறவிட்ட தனி வேலைக்காரனும் 


மீனுலவு கிர்த்திகைக்கு மாரனு நினைக்கும் அவர்

வீடுபெற வைத்தருள் உதாரக்காரனும் 


மேனையரி வைக்குரிய பேரனும் மதித்த திறல்

வீரனும் அரக்கர் குல சூறைக்காரனும் 


வேதியர் வெறுக்கையும் அநாதிபர வஸ்துவும்

விசாகனும் விகற்ப வெகு ரூபக்காரனும் 


வேடுவர் புனத்தில் உருமாறி முனி சொற்ப்படி

வியாகுல மனத்தின் ஒடு போம் விற்காரனும் 


மேவிய புனத்தி தணில் ஓவியம் எனத் திகழு

மேதகு குறத்தி திரு வேளைக் காரனே. 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...