Skip to main content

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

 திருச்சிற்றம்பலம்

அ௫ளியவர் : சுந்தரர்

திருமுறை : ஏழாம் திருமுறை

பண் : நட்டராகம்

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : குருகாவூர் வெள்ளடை


இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்

முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1


ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்

காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்

மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2


பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்

ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே

காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்

வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3


வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை

அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்

மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4


வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே

அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்

விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5


பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்

மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே

விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.6


போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை

நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்

சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட

வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.7


மலக்கில்நின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்

சலச்சல மிடுக்குடைய தருமனார் தமர்என்னைக்

கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே

விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.8


படுவிப்பாய் உனக்கேஆள் பலரையும் பணியாமே

தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே

கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே

விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.9


வளங்கனி பொழில்மல்கு வயல் அணிந் தழகாய

விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை

இளங்கிளை ஆரூரன் வனப்பகையவள் அப்பன்

உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 7.29.10


– திருச்சிற்றம்பலம் –

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...