Skip to main content

ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

ஞான கணேசா சரணம் சரணம்

ஞான ஸ்கந்தா சரணம் சரணம்

ஞான சத்குரு சரணம் சரணம்

ஞானானந்தா சரணம் சரணம்


காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம்

பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால்

சேர்க்கும் நவரத்தின மாலையினைக்

காக்கும் கணநாயக வாரணமே !


வைரம்

கற்றும் தெளியார் காடேக்கதியாய்

கண்மூடி நெடுங்கன வானதவம்

பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம்

பெருகும் பிழையேன் பேசத்தகுமோ

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்

பகைவர்க்கு எமனாக எடுத்தவளே

வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!


நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக் கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒலிக்குவையே சரணம்

நீலத் திருமேனியிலே நினைவாய்

நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக் குமரி வருவாய் வருவாய்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!


முத்து

முத்தே வரும் முத்தொழிலார் றிடவே

முன்னின்றருளும் முதல்வீ சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாசினியே சரணம்

தத்தேறிய நான் தனயன் தாய் நீ

சாகாதவரம் தரவே வருவாய்

மத்தேறு ததிகினை வாழ்வுடையேன்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!


பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம்

அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர்

தேம்பொழிலாமிது செய்தவலாரோ

எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால்

மந்திர வேதமயப்பொருள் ஆனால்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!


மாணிக்கம்

காணக்கிடையாக் கதியானவளே

கருதக்கிடையா கலையானவளே

பூணக்கிடையா பொளிவானவளே

புனையக்கிடையா புதுமைதவளே

நாணித்திருநாமம் நின் துதியும்

நவிலாதவரை நாடாதவளே

மாணிக்கவொளி கதிரே வருவாய்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!


மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்

மதுரித பதமே சரணம் சரணம்

ஸுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்

அரஹர சிவேன் அடியவற்குழும

அவரருள் பெற அருளமுதே சரணம்

வறனவா நிதியே சரணம் சரணம்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!


கோமேதகம்

பூமேவியனான் புரியும் செயல்கள்

போன்றாப்பயனும் குன்றாவரமும்

தீமேல் இடினும் ஜெயசக்தி என

திடமாய் அடியேன் மொழியும் திறமும்

கோமேதகமே குளிர்வா நிலமே

குழல்வாய் மொழியே வருவாய் வருவாய்

மாமேருவிலே வளர் கோகிலமே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!


பத்மராகம்

ரஞ்சனி நந்தனை அங்கனி பதும

ராக விகாசினி யாபினி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணி

சாம்பவி சந்திர கலாதரி ராணி

அஞ்சனா மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி

மஞ்சுள‌ மேரு ஸ்ருங்க நிவாரிணி

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!


வைடூர்யம்


வலையோத்தவினை கலையோத்த மனம்

மருளப் பறையா ரொளியோத்தவிதால்

நிலையர்ரோளிஎன் முடியத்தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அலையர்ரசைவர் ரணிபூதிபெரும்

அடியார் முடிவாழ் வைடூரியமே

மலைத்துவஜன் மகளே வருவாய்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!


இப்பாடலின் பலன்


எவர் எத்தினமும் இசைவாய் லலிதா

நவரத்தினமாலை நவின்றிடுவார்

அவர் அற்புதசக்தி எல்லாம் அடைவார்

சிவரத்தினமாய் திகழ்வாரவரே!!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...