Skip to main content

புருஷ ஸூக்தம் தமிழில் ஜடாயு

 (ரிக். பத்தாவது மண்டலம், 90வது சூக்தம்)


ஆயிரம் சிரங்கள் கொண்டோன் புருஷன்

ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்

புவியெங்கும் பரந்து

நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.  (1)


இவை அனைத்தும் புருஷனே

முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்

அழிவற்ற பெருநிலையின் தலைவன் அவன்

பருவுலகு கடந்தோன். (2)


ஈதனைத்தும் அவனது மகிமையே

இதனினும் பெரியோன் புருஷன்

தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்

அழிவற்றது முக்கால் பாகம்

அதுவே ஒளியுலகு. (3)


மேற்சென்றனன் முக்கால் பாகத்துப் புருஷன்

அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும் இங்கு

திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன்

அசையும் அசையாப் பொருளனைத்திலும். (4)


அவனிடத்தினின்று விராட் பிறந்தது

விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக) பிறந்தான் புருஷன்

பிறந்தவன் முன்னும் பின்னுமாய்

புவியெங்கும் நிறைந்தான். (5)


புருஷனே ஆகுதியாக

வேள்வி செய்தனர் தேவர்கள்

வசந்தம் நெய்யாக

கோடை விறகாக

சரத்காலம் அவியுணவாக

ஒரு வேள்வி. (6)


ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்

அவன் மீது நீர் தெளித்தனர்

நேர்வழியினர் ரிஷிகள் கூடி

வேட்டனர் தேவர்கள். (7)


அனைத்தும் எரிந்த அவ்வேள்வி

அதனின்று திரண்டது நெய்கலந்த ஊண்.

உருவாகின

காற்றால் ஆன உயிர்கள்

வனமிருகங்கள்

கிராமத்து விலங்குகள். (8)


அனைத்தும் எரிந்த அவ்வேள்வி

அதனின்று பிறந்தன ரிக்குகள் சாமகீதங்கள்

பிறந்தன சந்தங்கள்

பிறந்தன யஜுர் மந்திரங்கள். (9)


அதனின்று பிறந்தன பரிகள்

இருவரிசைப் பல் மிருகங்கள்

அதனின்று பிறந்தன பசுக்கள்

வெள்ளாடுகள் செம்மறிகள். (10)


புருஷனை வகிர்ந்த போது

கற்பித்தது எவ்வடிவில்?

முகம் எது கை எது?

தொடை எது கால் எது? (11)


பிராமணன் முகமானான்

கைகள் அரசன்

தொடைகள் வைசியன்

பாதங்களில் சூத்திரன் தோன்றினான். (12)


மனத்தினின்று சந்திரன் பிறந்தான்

விழிகளில் கதிரோன்

முகத்தில் இந்திரன் அக்னி

மூச்சில் பிறந்தது காற்று. (13)


கொப்பூழில் உதித்தது விண்வெளி

சிரத்தினின்று விரிந்தது ஆகாயம்

பாதங்களினின்று பூமி

செவிகளினின்று திசைகள்

அவ்வாறே உருவெடுத்தன

உலகங்கள் அனைத்தும். (14)


ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி

மூவேழு சமித்துக்கள் கொண்டு

வேள்வி சமைக்கும் தேவர்கள்

புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர். (15)


வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்

அவையே முதல் தர்மங்கள் ஆயின.

முன்னோர் நேர்வழியினர் தேவர்கள் வாழ்

மேன்மை உலகடைவர்

அந்த (தர்மவழிச் செல்லும்) பெரியோர். (16)

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...