Skip to main content

விஷ்ணு ஸூக்தம் விளக்கம்

Source: https://ramanisblog.in/2014/04/15/விஷ்ணு-ஸூக்தம்-அர்த்தம்-2/

ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .

ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .

அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .


ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் 

யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி 

யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ் த்ரேதோரு’காயோ .

விஷ்ணோ - விஷ்ணுவின், 

நுகம் வீர்யாணி - சிறப்பு மிக்க செயல்களை, 

ப்ரவோசம் - போற்றுவோம் .

ய:  - எவர், யார், 

பார்த்திவானி ரஜாம்சி - இப்புவியையும், அதனில் உள்ள அனைத்தையும், 

விமமே - வெளிப்படுத்தினாரோ, (உருவாக்கினாரோ),

ய ;-யார், எவர், 

உத்தரம் - மேலுள்ள, 

சதஸ்தம் - விண்ணுலகை, 

அஸ்கபாய - தாங்கி உள்ளாரோ, 

த்ரேதா - (தனது) மூவடியால், 

விசக்ரமாண: அளந்தாரோ, 

உருகாய - போற்றித் துதிக்கப் படுகிறாரோ,

யார் இப்புவியையும், மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து, தாங்குகின்ராரோ, 

மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ, பெரியோரால் போற்றப்படுகிராரோ, அந்த விஷ்ணுவின் சீரிய செயல்களைப் போற்றுவோம் .

2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’

ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

விஷ்ணோ -விஷ்ணுவின், 

ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய், 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய், 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள், 

விஷ்ணோ –விஷ்ணுவின்,

ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.

விஷ்ணோ -விஷ்ணுவின், 

த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.

வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய், 

விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,

த்வா -உன்னை (வணங்குகிறேன் ).

யக்ய சாலையின் மேல் விட்டமே ! நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .

பின் புறமாக இருக்கிறாய். வாயிற் கால்களே !

 

நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள். 

கயிறே! நீ,  அவரது நாடிகளாக இருக்கிறாய் .

முடிச்சுக்களே !

நீங்கள்,  அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .


3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | 

னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |

உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | 

விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |


யத்ர -எங்கு,  எங்கெல்லாம்,

தேவயவ -தேவர்கள், 

மதந்தி -மகிழ்கிறார்களோ, 

நர :-மனிதர்கள், 

ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ, 

உருக்ரமஸ்ய -விஷ்ணுவின், 

ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ, (இருப்பிடமோ ),

விஷ்ணோ -விஷ்ணுவின், 

பரமே பதே -உயர்ந்த, அனைத்திற்கும் மேலான திருவடியில், 

மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ, 

ததஸ்ய -அங்கே,

அச்யாம் -அடைவேனாக.

4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | 

ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |

யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | 

அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா”|

பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | 

ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |


எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ, எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ, 

எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ, 

அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,

 

கிரிஷ்டா -மலை மீது,

குசர -திரிகின்ற, 

பீமக : மிருக ;-பெரிய யானை, 

யஸ்ய -யாருடைய, 

உருஷு, த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள், 

விஸ்வா -அனைத்து, 

புவனானி -உலகங்களும், 

அதிஷியந்தி -அடங்குகின்றனவோ, 

-விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை, 

வீர்யாய -சிறப்பிற்காக, 

ஸ்தவதே -போற்றுவோம் .

தனுவா -அத்திருமேனி, 

மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .

தே -அதன் (உமது ),

மஹித்வம் -சிறப்புகளை, 

அனு அச்னுவந்தி -அறிய முடியாது .


மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும், 

தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது

செயல் சிறத்திற்காக போற்றுவோம் .

இறைவனே !

உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .

உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .


5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .

தே -உமது, 


ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி, 

உபே -இரண்டை, 

வித்ம-அறிவோம் (நாங்கள் )

விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !

த்வம் -நீர் மட்டுமே, 

பரமஸ்ய -உயர்ந்த,  மேலான உலகை,

வித்சே –அறிவீர்,

ஏஷ -இந்த, 

ப்ருத்வீம் -புவியில், 

விஷ்ணு -விஷ்ணு, 

விசக்ரமே -நடந்து, 

ஏதாம் -அதனை, 

க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு, 

மனுஷே –மனிதர்களுக்கு,

ததஸ்யன் -கொடுத்துள்ளார் .

விஷ்ணுவே !

 

நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .

ஒளி மிக்க திருமாலே !

நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .

நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .

6.த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | 

ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | 

விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | 

த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||


கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள், 

அஸ்ய -அவரில், 

த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .

ஏதாம் -இந்த, 

ஊருஷிதம் -பூமியை, 

சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக, 

சகார -செய்துள்ளார் .

சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய, 

ஏஷு -இந்த, 

ப்ருத்வீம் -பூமியை, 

தேவ -தேவனான விஷ்ணு, 

மகித்மா -தந்து பெருமையால், 

த்ரி -மும்முறை, 

விசக்ரமே–அளந்துள்ளார் .

தவ -உமது, 

ஸ : ஸ்தவீயான் -சிறந்த, மேலான பெருமை, 

பிரவிஷ்ணு -விஷ்ணு, 

அஸ்து -உள்ளது .

து –மேலும்,

ஏஷம் ஹி -இதுவே, 

அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின், 

நாம -பெயர்.

பணிவு மிகுந்த மக்கள், அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .

இப்பூமியை,  அவர்,  இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .

எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .

மஹா விஷ்ணுவே !

உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .

இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .

7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |

இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே ||


ய ;-எந்த, 

ப்ருதிவ்யா -பூமியின், 

சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும், 

விசக்ரமே -நடந்தாரோ, 

அத -அந்த பூமியின், 

தேவா -தேவர்கள், 

ந -நம்மை, 

அவந்து -காக்கட்டும் .

விஷ்ணு -விஷ்ணு, 

இதம் விசக்ரமே -நடந்தபோது, 

பதம்-தமது திருவடிகளை, 

திரேதா -மும்முறை, 

நிதேத -வைத்தார் .

அஸ்ய -அவரது, 

பாம்சுரே -பாத தூசியால், 

ஸமூட -மூடப்பட்டது .


8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |

விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

விஷ்ணு -விஷ்ணு, 

கோபா -அனைத்தையும் காப்பவரும், 

அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும், 

த்ரீணி பதா -மூவடிகளால், 

விசக்ரமே -அளந்து, 

அத -இங்கே, 

தர்மாணி -தர்மங்களை, 

தாரயன் -நிலை நிறுத்தினார் .

இந்த்ரஸ்ய -இந்திரனனின், 

யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான, 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

கர்மாணி -செயல்களை, 

பச்யத -பாருங்கள்.

யத : அவற்றின் மூலம், 

வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை, 

பஸ்பசே -வெளிப்படுத்தினார் .

விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .

தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .

இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .

அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .

9.தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | 

திவீவசக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ 

ஜாக்றுவாக்‍ம்ஸஸ்ஸமி’ன்ததே | 


விஷ்ணோர்யத்ப’ரமம் பதம் 

ஆததம் – பரந்து  விரிந்த, 

திவி இவ -வானம் போல், 

சஷு -கண்களை உடையவர்கள், 

ஸூரய -ரிஷிகள், 

தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின், 

பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை, 

ஸதா -எப்பொழுதும், 

பஸ்யந்தி -காண்கிறார்கள் .

விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும், 

விபன்யவ -முனிவர்களும், 

ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான, 

யத் -இவர்களே, 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை, 

ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .

விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள், விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை

,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும், முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான

இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .


பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

பர்யாப்த்யா -அளவற்ற, 

அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும், 

ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும், 

அதிராத்ரம் – அதிராத்ரம்,

உத்தம -சிறந்த, 

மஹ -உயர்ந்த யாகம், 

பவதி- ஆகிறது .

தென் -அந்த யாகத்தால், 

ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .

ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

சர்வம் ஏவ -அனைத்தும், 

ஆப்னோதி -அடையப்பெருகின்றன .

ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .

எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்காப் புகழ் பெறுவதற்கும், அதிராத்ரம் என்னும் யாகமே

மேலான யாஹம் ஆகும் .

அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .

அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

அனைத்தும் அடையப் படுகிறது .

அனைத்தும் வளம் பெறுகின்றன .

விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.

ஓம் தத் ஸத்

ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் 

யஃ பார்தி’வானி 

விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ | 

ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | 

ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ | 

யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | 

அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |

பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | 

ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||

உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | 

பரமஸ்ய’ வித்ஸே | 

விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | 

க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் | 

த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | 

ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | 

த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | 

விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | 

ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | 

த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||

அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | 

ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ | 

இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | 

ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே || த

்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | 

ததோ தர்மா’ணி தாரயன்’ | 

விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | 

இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | 

திவீவசக்ஷுராத’தம் | 

தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸஸ்ஸமி’ன்ததே | 

விஷ்ணோர்யத்ப’ரமம் பதம் | 

பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...