Source: https://ramanisblog.in/2014/04/15/விஷ்ணு-ஸூக்தம்-அர்த்தம்-2/
ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .
ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .
அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .
ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம்
யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி
யோ அஸ்க’பாயதுத்த’ரக்ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ் த்ரேதோரு’காயோ .
விஷ்ணோ - விஷ்ணுவின்,
நுகம் வீர்யாணி - சிறப்பு மிக்க செயல்களை,
ப்ரவோசம் - போற்றுவோம் .
ய: - எவர், யார்,
பார்த்திவானி ரஜாம்சி - இப்புவியையும், அதனில் உள்ள அனைத்தையும்,
விமமே - வெளிப்படுத்தினாரோ, (உருவாக்கினாரோ),
ய ;-யார், எவர்,
உத்தரம் - மேலுள்ள,
சதஸ்தம் - விண்ணுலகை,
அஸ்கபாய - தாங்கி உள்ளாரோ,
த்ரேதா - (தனது) மூவடியால்,
விசக்ரமாண: அளந்தாரோ,
உருகாய - போற்றித் துதிக்கப் படுகிறாரோ,
யார் இப்புவியையும், மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து, தாங்குகின்ராரோ,
மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ, பெரியோரால் போற்றப்படுகிராரோ, அந்த விஷ்ணுவின் சீரிய செயல்களைப் போற்றுவோம் .
2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’
ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||
விஷ்ணோ -விஷ்ணுவின்,
ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய்,
விஷ்ணோ -விஷ்ணுவின்,
பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய்,
விஷ்ணோ -விஷ்ணுவின்,
ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள்,
விஷ்ணோ –விஷ்ணுவின்,
ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.
விஷ்ணோ -விஷ்ணுவின்,
த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.
வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய்,
விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,
த்வா -உன்னை (வணங்குகிறேன் ).
யக்ய சாலையின் மேல் விட்டமே ! நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .
பின் புறமாக இருக்கிறாய். வாயிற் கால்களே !
நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள்.
கயிறே! நீ, அவரது நாடிகளாக இருக்கிறாய் .
முடிச்சுக்களே !
நீங்கள், அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .
3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் |
னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |
உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா |
விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |
யத்ர -எங்கு, எங்கெல்லாம்,
தேவயவ -தேவர்கள்,
மதந்தி -மகிழ்கிறார்களோ,
நர :-மனிதர்கள்,
ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ,
உருக்ரமஸ்ய -விஷ்ணுவின்,
ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ, (இருப்பிடமோ ),
விஷ்ணோ -விஷ்ணுவின்,
பரமே பதே -உயர்ந்த, அனைத்திற்கும் மேலான திருவடியில்,
மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ,
ததஸ்ய -அங்கே,
அச்யாம் -அடைவேனாக.
4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய |
ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |
யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு |
அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா”|
பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான |
ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |
எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ, எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ,
எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ,
அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,
கிரிஷ்டா -மலை மீது,
குசர -திரிகின்ற,
பீமக : மிருக ;-பெரிய யானை,
யஸ்ய -யாருடைய,
உருஷு, த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள்,
விஸ்வா -அனைத்து,
புவனானி -உலகங்களும்,
அதிஷியந்தி -அடங்குகின்றனவோ,
-விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை,
வீர்யாய -சிறப்பிற்காக,
ஸ்தவதே -போற்றுவோம் .
தனுவா -அத்திருமேனி,
மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .
தே -அதன் (உமது ),
மஹித்வம் -சிறப்புகளை,
அனு அச்னுவந்தி -அறிய முடியாது .
மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும்,
தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது
செயல் சிறத்திற்காக போற்றுவோம் .
இறைவனே !
உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .
உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .
5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .
தே -உமது,
ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி,
உபே -இரண்டை,
வித்ம-அறிவோம் (நாங்கள் )
விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !
த்வம் -நீர் மட்டுமே,
பரமஸ்ய -உயர்ந்த, மேலான உலகை,
வித்சே –அறிவீர்,
ஏஷ -இந்த,
ப்ருத்வீம் -புவியில்,
விஷ்ணு -விஷ்ணு,
விசக்ரமே -நடந்து,
ஏதாம் -அதனை,
க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு,
மனுஷே –மனிதர்களுக்கு,
ததஸ்யன் -கொடுத்துள்ளார் .
விஷ்ணுவே !
நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .
ஒளி மிக்க திருமாலே !
நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .
நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .
6.த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ |
ஊருக்ஷிதிக்ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் |
விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் |
த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||
கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள்,
அஸ்ய -அவரில்,
த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .
ஏதாம் -இந்த,
ஊருஷிதம் -பூமியை,
சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக,
சகார -செய்துள்ளார் .
சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய,
ஏஷு -இந்த,
ப்ருத்வீம் -பூமியை,
தேவ -தேவனான விஷ்ணு,
மகித்மா -தந்து பெருமையால்,
த்ரி -மும்முறை,
விசக்ரமே–அளந்துள்ளார் .
தவ -உமது,
ஸ : ஸ்தவீயான் -சிறந்த, மேலான பெருமை,
பிரவிஷ்ணு -விஷ்ணு,
அஸ்து -உள்ளது .
து –மேலும்,
ஏஷம் ஹி -இதுவே,
அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின்,
நாம -பெயர்.
பணிவு மிகுந்த மக்கள், அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .
இப்பூமியை, அவர், இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .
எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .
மஹா விஷ்ணுவே !
உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .
இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .
7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |
இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்ம் ஸுரே ||
ய ;-எந்த,
ப்ருதிவ்யா -பூமியின்,
சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும்,
விசக்ரமே -நடந்தாரோ,
அத -அந்த பூமியின்,
தேவா -தேவர்கள்,
ந -நம்மை,
அவந்து -காக்கட்டும் .
விஷ்ணு -விஷ்ணு,
இதம் விசக்ரமே -நடந்தபோது,
பதம்-தமது திருவடிகளை,
திரேதா -மும்முறை,
நிதேத -வைத்தார் .
அஸ்ய -அவரது,
பாம்சுரே -பாத தூசியால்,
ஸமூட -மூடப்பட்டது .
8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |
விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||
விஷ்ணு -விஷ்ணு,
கோபா -அனைத்தையும் காப்பவரும்,
அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும்,
த்ரீணி பதா -மூவடிகளால்,
விசக்ரமே -அளந்து,
அத -இங்கே,
தர்மாணி -தர்மங்களை,
தாரயன் -நிலை நிறுத்தினார் .
இந்த்ரஸ்ய -இந்திரனனின்,
யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான,
விஷ்ணோ -விஷ்ணுவின்,
கர்மாணி -செயல்களை,
பச்யத -பாருங்கள்.
யத : அவற்றின் மூலம்,
வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை,
பஸ்பசே -வெளிப்படுத்தினார் .
விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .
தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .
இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .
அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .
9.தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ |
திவீவசக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ விபன்யவோ’
ஜாக்றுவாக்ம்ஸஸ்ஸமி’ன்ததே |
விஷ்ணோர்யத்ப’ரமம் பதம்
ஆததம் – பரந்து விரிந்த,
திவி இவ -வானம் போல்,
சஷு -கண்களை உடையவர்கள்,
ஸூரய -ரிஷிகள்,
தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின்,
பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை,
ஸதா -எப்பொழுதும்,
பஸ்யந்தி -காண்கிறார்கள் .
விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும்,
விபன்யவ -முனிவர்களும்,
ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான,
யத் -இவர்களே,
விஷ்ணோ -விஷ்ணுவின்,
யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை,
ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .
விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள், விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை
,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும், முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான
இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .
பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோஉதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||
பர்யாப்த்யா -அளவற்ற,
அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும்,
ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும்,
அதிராத்ரம் – அதிராத்ரம்,
உத்தம -சிறந்த,
மஹ -உயர்ந்த யாகம்,
பவதி- ஆகிறது .
தென் -அந்த யாகத்தால்,
ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .
ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .
சர்வம் ஏவ -அனைத்தும்,
ஆப்னோதி -அடையப்பெருகின்றன .
ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .
எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்காப் புகழ் பெறுவதற்கும், அதிராத்ரம் என்னும் யாகமே
மேலான யாஹம் ஆகும் .
அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .
அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .
அனைத்தும் அடையப் படுகிறது .
அனைத்தும் வளம் பெறுகின்றன .
விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.
ஓம் தத் ஸத்
ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம்
யஃ பார்தி’வானி
விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||
தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |
ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய |
ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |
யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு |
அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |
பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான |
ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||
உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் |
பரமஸ்ய’ வித்ஸே |
விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் |
க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் |
த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ |
ஊருக்ஷிதிக்ம்ஸுஜனி’மாசகார |
த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் |
விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா |
ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் |
த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||
அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே |
ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |
இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் |
ஸமூ’டமஸ்ய பாக்ம் ஸுரே || த
்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ |
ததோ தர்மா’ணி தாரயன்’ |
விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே |
இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||
தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ |
திவீவசக்ஷுராத’தம் |
தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ ஜாக்றுவாக்ம்ஸஸ்ஸமி’ன்ததே |
விஷ்ணோர்யத்ப’ரமம் பதம் |
பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோஉதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||
ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||
Comments
Post a Comment