Skip to main content

ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |


ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே,

ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும்.

ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும்,

ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும்,

சந்த்ராம்- நிலவு போன்றவளும்,

ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,

லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்வாய் —————1


பொன் நிறத்தவளும்,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும், பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2


ஜாதவேத -அக்னியே,

அஹம் -நான்,

ஹிரண்யம் -பொன்னையும்,

காம் -பசுக்களையும்,

அஸ்வ -குதிரைகளையும்,

புருஷான் -உறவினரையும்,

விந்தேயம் -பெறுவேனோ,

தாம் -அந்த,

லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,

யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்………………………………..2


அக்னி தேவனே, யாருடைய அருளால்,நான் பொன்னையும் பசுக்களையும், குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ, அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய். அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.


அஸ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்,

ரத மத்யாம் -நடுவில் ரதங்களும்,

ஹச்திநாத ப்ரபோதிநீம் -களிறுகளின் பிளிறல்களை தனது அறிகுறியாகக் கொண்டவளுமான,

ஸ்ரியம் தேவீம் -மனதிற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை,

உபஹ்வையே -அழைக்கிறேன் .

ஸ்ரீ தேவி -செல்வத்தின் உறைவிடமான திருமகளே,

மா ஜுஷதாம் -என்னிடம் இன்புற்று உறைவாய் .


முன்னால் குதிரைகள், நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும்,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .

திருமகளே! நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக .


காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…………………….4


ஸ்மிதாம் -புன்முறுவல் தவழ்பவளும்,

ஹிரண்யப் ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் உறைபவளும்,

ஆர்த்ராம் -கருணை நிறைந்தவளும்,

ஜ்வலந்தீம் -ஒழி வீசுபவளும்,

த்ருப்தாம் -மன நிறைவுடயளும்,

தர்பப்பயந்தீம் -தன்னைத் துதிப்போர்க்கு மகிழ்ச்சியை அருளுபவளும்,

பத்மே -தாமரையில்,

ஸ்திதாம் -நிலை பெற்றவளும்,

பத்ம வர்ணாம் -தாமரை நிறத்தவளும்,

காம் -யாரோ,

தாம் ஸ்ரியம் -அந்த மனத்திருக்கு உகந்த லக்ஷ்மியை,திருமகளை,

இஹ -இங்கே,

உபஹ்வையே–வேண்டுகின்றேன்.


குறுநகை தவழ்பவளும், பொன் மயமான கோட்டையில் உறைபவளும்,கருணை நிறைந்து ததும்புவளும்,ஒளி நிறைந்தவளும், மகிழ்ச்சி நிறைந்தவளும்,மகிழ்ச்சியைத் தருபவளும்,தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .


சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||


லோகே -உலக வாழ் உயிர்களுக்கு,

சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்,

பிரபாஸாம் -சிதறும் ஒளி மிக்கவளும்,

யசஸா -தன மகிமையால்,

ஜ்வலந்தீம் -சுடர் விட்டு ஒளிர்பவளும்,

தேவ ஜுஷ்டாம் -தேவர்காளால் வழிபடப்படுபவளும்,

உதாராம் -கழிவிரக்கம் நிறைந்தவளும்,

பத்மிநீம் -தாமரையைத் தாங்கியவளும்,

ஈம் -ஈம் என்னும் பீஜ மந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளும் ஆன,

தாம் ஸ்ரியம் -அந்த மனதிற்குகந்த மகலக்ஷ்மியை,

அஹம் -நான்,

சரணம் ப்ரபத்யே -அடைக்கலம் புகுகிறேன் .

த்வாம் -உன்னை,

வ்ருணே -வேண்டுகிறேன்.

மே -என்னிடமிருந்து,

அலக்ஷ்மி -வறுமை,

நச்யதாம் – அழியட்டும் .


நிலவைப் போன்றவளும்,ஒளிநிரைந்தவளும், சுடர்விட்டு ஒளிர்பவளும்,தேவர்களால் வழிபடப்படுபவளும் கருணை மிக்கவளும்,தாமரையைத் தாங்கியவளும்,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷிமயை நான் சரணடைகிறேன். தேவியே! என் வறுமை விலகி அழிய அருள்வாய் .


ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |

தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ


ஆதித்யவ’ர்ணே – சூரியனின் நிறத்தவளே,

தவ-உனது,

தபசக -தவத்தால்,

வனஸ்பதி ‘கானகங்களுக்குத் தலைவனாகிய,

பில்வக வ்ருக்ஷ -வில்வ மரம்,

அதிஜாதக -உண்டாயிற்று .

அத -அதே போல்,

தபஸா -தவத்தால்,

தஸ்ய -அதன்,

பலானி -பலத்தால்,விளைவாக,பழங்கள்,

மாயா -அறியாமை ஆகிய,

அந்தராயாக -எனது உள்ளத்தில் உள்ள அகத்தடயையும்,

அ’லக்ஷ்மீஃ -அமங்கலமாகிய .

பாஹ்யா -புறத்தடயையும்,

நுதந்து -அழிக்கட்டும்.


கதிரவன் நிறத்தவளே,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .

அதன் பழங்கள் அறியாமையாகிய அகத்தடயையும்,அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே அழிக்க்கட்டும் .


உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||…….7


தேவஸகஃ’குபேரனும்,

கீர்திச்ச -புகழின் தேவனும்,

மணின சஹ -என்னை நாடி வர வேண்டும் .

அஸ்மின் -இந்த,

ராஷ்ட்ரே‌-நாட்டில்,

ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .

மே -எனக்கு,

கீர்த்திம்- பெருமையும்,

ரிதிம் -செல்வமும்,

ததாது வழங்குவாய் .

செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.

உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .

நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .


க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |

அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||…… 8


க்ஷுத்பி’பாஸாம’லாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும்,

ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான,

அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை,

அஹம் -நான்,

மீ க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து

நாசயாமி -விலக்குகிறேன் .

சர்வாம் -எல்லா,

அபூதிம் -ஏழ்மையையும்,

அசம்ருத்திம் ச -வறுமையையும்,

நிர்ணுத -அகற்றி அருளுக .


பசி தாகத்தினால் மெலிந்தவளும்,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன்.  எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .


கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…9


கம்தத்வாராம்-நறுமணத்தின் இருப்பிடமானவளும்,

துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும்,

நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும்,

கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்,

சர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும்,

ஈஸ்வரீம் -தலைவியும் ஆன,

தாம் ஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை,

இஹ -இங்கே,

உபஹ்வையே–எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .


நறுமணத்தின் இருப்பிடமானவளும்,எவராலும் வெல்லப்பட முடியாதவளும், என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும்,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்


மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||..10.


ஸ்ரீ -திருமகளே !,

மனசஹ -மனத்தில் எழும்,

காமம் -ஆசைகளையும்,

ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும்,மகிழ்ச்சிகளையும்,

வாக்-வாக்கில்,

சத்யம் -உணமையையும்,

பசூனாம் -பசுக்களாலும்,

அன்னச்ய -உணவினாலும்,

அசீமகி,-அனுபவிக்க வேண்டும் .

மயி -எனக்கு,

கீர்த்தி -பெருமை,

ஸ்ரயதாம் -உண்டாகட்டும் .

திருமகளே !

தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும்,மகிழ்ச்சியையும்,வாக்கில் உண்மையையும்,

பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால்,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .

எனக்கு புகழ் உண்டாகட்டும் .


கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||..11


கர்தமே’ன. கர்த்தமரே (கர்தம முனிவரே ),

கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )

பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி,

மயி -எனக்கு,என்னிடம்,

சம்பவ -தோன்ற வேண்டும் .

பத்ம மாலினீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும்,

ஸ்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான,

மாதாம் -அன்னையும்

மே -என்,

குலே- என் குலத்தில்,

வாசய -தங்கச் செய்ய வேண்டும் .

கர்த்தமரே !

உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் .

தாமரை மாலை அணிந்தவளும்,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச்

செய்ய வேண்டும்.

சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன்)

ஆபஹ -தண்ணீர்,

ச்னிக்தானி ;சிறந்த உணவுப் பொருள்களை,

ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும் .

மே -எனது,

க்ருஹே -எனது இல்லத்தில்,

வசஹ -வசிக்க வேண்டும் .

ச -மேலும்,

தேவீம் -தேவியும்,

மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன,

ஸ்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை,

மே -என் .

குலே -குலத்தில்,

நிவாசய – எப்போழ்தும் வாழும்படி அருள வேண்டும் .


லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே ! நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் . நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் . தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .


ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||…13.


ஜாத வேத -அக்னியே !,

ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும்,

புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும்,

புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும்,

பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,

பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும்,

சந்திராம் -நிலவைப் போன்றவளும்,

ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான,

லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.


அக்னியே ! கருணை நிரம்பிய மனதை உடையவளும்,தாமரை மலரில் உறைபவளும்,உலகை ஊட்டி வளர்ப்பவளும், குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,தாமை மாலை அணிபவளும்,பொன் மயமானவளுமான திருமகளை, என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .


ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |

சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||..14


ஜாத வேத -அக்னியே!,

ய-யார்,

ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும்,

கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும்,

யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,

சுவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும்,

ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும்,

சூர்யாம் -பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும்,

ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்,

ஆன,

லக்ஷ்மீம் -மகாலக்ஷ்மீயை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்து அருளச் செய்ய வேண்டும்.


அக்னியே! கருணை நிரம்பியவளும்,செயல் திறத்தில் கம்பீரமானவளும்,நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,அழகிய நிறத்தை உடையவளும்,பகலவன் போல் பிரகாசிப்பவளும்,பொன் மயமான லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ 

தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||..14.


ஜாத வேத -அக்னியே !,

யஸ்யாம் -யாரால்,

பிரபூதம் -அளவிட முடியா,

ஹிரண்யம் -பொன்னும்,

காவஹ -பசுக்களும்,

தாஸ்ய -பணிப் பெண்டிரும்,

அஸ்வான் -குதிரைகளும்,

புருஷான் -பணியாட்களும்,

அஹம் -நான்,

விந்தேயம்-பெறுவேனோ,

தாம் -அந்த,

லக்ஷ்மீம் -திருமகளை,

மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிற்குமாறு,

ஆவஹ -செய்தருள வேண்டும் .

அக்னி தேவனே !


யாரால் அளவிட முடியாத பொன்னும், பசுக்களும்,பணிப் பெண்டிரும்,குதிரைகளும் மற்றும்

பணியாட்களையும் நான் பெறுவேனோ,அந்த திருமகள்,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .


ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||


மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம், திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம்,

அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக . 

இதனின்று பலஸ்ருதி, ஆகவே பொருள் இங்கு தரப்படவில்லை.


ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||

அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |

ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |

தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |

அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||

ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |

னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |

சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||



ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்......!!!


பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி தரித்திரத்தை போக்கி தனத்தை அளிக்கும் சக்தி பெற்றவள்.  இல்லாமை என்ற சொல்லலை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே.  ஸ்ரீ ஸுக்தத்தை தினமும் பாராயணம் செய்தால் வாழ்க்கை வளம் பெரும். மந்திர பாராயணம் செய்ய முடியாதவர்கள் தினம் தோறும் இந்த மந்திரத்தை செவி வழி கேட்டாலே திருமகளின் திருவருளை பெறமுடியும்.  உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற செல்வத்திருமகளை பிரார்த்திப்போமாக !!


ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம்- 1


ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம் :

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா |


விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் நமக்கும் கிட்டும்படி தேவியை வேண்டுவோம். 


ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 2


தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம் : l

யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம் Il


லக்ஷ்மி கடாட்சம் நம்மிடம் இருந்தால் நாம் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் நம்மை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரிய வேண்டுவோம். 


ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம்- 3


அஸ்வபூர்வாம் ரத - மத்யாம்

ஹஸ்திநாத -ப்ரபோதிநீம் : |

ஸ்ரியம் தேவீமுபஹ்வயே

ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம் ||


குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை நம்மிடம் வருமாறு தேவியை வேண்டுவோம். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி நம்மை வந்தடையட்டும்.


ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 4


காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா

மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம் : l

பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம்

தாமிஹோ பஹ்வயே ஸ்ரியம் Il


மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை நம் இருப்பிடத்திற்கு அழைக்க பிரார்த்திப்போம்.


ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 5


சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்

ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம் :

தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே

அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே


பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை சரணடைவோம். நம்முடைய வறுமை அழியட்டும். நமக்கு அருள் கிடைக்கட்டும்.


ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 6


ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ

வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:

தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த

ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ



சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி எங்களுக்கு அருளவேண்டும். 


ஸ்ரீஸுக்தம் ஸ்லோகம்- 7


உபைது மாம் தேவஸக

கீர்திஸ்ச மணிநா ஸஹ :

ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே -

ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே :


தேவஸக -குபேரனும் ,கீர்திஸ்ச -புகழின் தேவனும், மணிநா ஸஹ -என்னை நாடி வர வேண்டும் .  அஸ்மின் -இந்த, ராஷ்ட்ரே‌-நாட்டில், ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன். மே -எனக்கு, கீர்த்திம்- பெருமையும், ரிதிம் -செல்வமும், ததாது - வழங்குவாய் .


செல்வத்திர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர வேண்டும். உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன்.  நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய். 


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் - 8


க்ஷுத்பி பாஸாமலாம் ஜ்யேஷ்டா

மலஷ்மீம் நாசயாம்யஹம் |

அபூதி மஸம்ருத்திம் ச ஸர்வாம்

நிர்ணுத மே க்ருஹாத் ||


க்ஷுத்பி பாஸாமலாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும், ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும்), முன்னால் பிறந்தவளுமான, அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை, அஹம் -நான் , மே க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து. நாசயாமி -விலக்குகிறேன். சர்வாம் -எல்லா, அபூதிம் -ஏழ்மையையும், அசம்ருத்திம் ச -வறுமையையும், நிர்ணுத -அகற்றி அருளுக .


பசி தாகத்தினால் மெலிந்தவளும், லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன். எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய்.


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் (9)


கந்தத்வாராம் துராதர்ஷாம்

நித்யபுஷ்டாம் கரீஷிணீம் |

ஈஶ்வரீம்கும் ஸர்வபூதானாம்

தாமிஹோபஹ்வயே ச்ரியம் ||


கந்தத்வாராம் - நறுமணத்தின் இருப்பிடமானவளும். துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும். நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும். கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும். ஸர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும். ஈஸ்வரீம் -தலைவியும் ஆன. தாமாஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை. இஹ -இங்கே. உபஹ்வையே– எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன். 


நறுமணத்தின் இருப்பிடமானவளும் , எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்.


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~10


மநஸ: காமமாகூதிம் வாசஸ் ஸத்யமசிமஹி |

பசூனாம் ரூபமாநஸ்ய மயி ஶ்ரீ ச்ரயதாம் யச: ||


ஸ்ரீ -திருமகளே! மநஸ: -மனத்தில் எழும். காமம் -ஆசைகளையும், ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும் ,மகிழ்ச்சிகளையும், வாக்-வாக்கில், சத்யம் -உணமையையும், பசூனாம் -பசுக்களாலும், அந்யச்ய -உணவினாலும், அசீமகி ,-அனுபவிக்க வேண்டும்.  மயி -எனக்கு, கீர்த்தி -பெருமை, ஸ்ரயதாம் -உண்டாகட்டும்


திருமகளே ! தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் , மகிழ்ச்சியையும் , வாக்கில் உண்மையையும், பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால், ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும். எனக்கு புகழ் உண்டாகட்டும் 


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~11


கர்தமேன ப்ரஜாபூதா

மயி ஸம்பவ கர்தம |

ச்ரியம் வாஸய மே குலே

மாதரம் பத்மமாலிநீம் ||


கர்தமேன - கர்த்தமரே (கர்தம முனிவரே), கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய). பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி, மயி -எனக்கு ,என்னிடம், சம்பவ -தோன்ற வேண்டும். பத்ம மாலிநீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும், ச்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான. மாதாம் -அன்னையும். மே -என் , குலே- என் குலத்தில், வாசய -தங்கச் செய்ய வேண்டும் .


கர்த்தமரே! உமது மகளான மஹாலக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் . தாமரை மாலை அணிந்தவளும் , செல்வத்தின் தலைவியும் , அன்னையுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~12


ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |

நி சதேவீம் மாதரம் ச்ரியம் வாஸய மே குலே ||


சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன்). ஆப: - தண்ணீர். ஸ்நிக்தானி - சிறந்த உணவுப் பொருள்களை. ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும். மே -எனது. க்ருஹே -எனது இல்லத்தில். வஸ -வசிக்க வேண்டும். ச -மேலும். தேவீம் -தேவியும். மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன. ச்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை. மே -என். குலே -குலத்தில், வாசய – எப்போழுதும் வாழும்படி அருள வேண்டும். லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே !


நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் .நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் .தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும்.


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 13


ஆர்த்ராம் யஃ கரிணீம் யஷ்டிம்

பிங்கலாம் பத்மமாலினீம் |

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||


ஜாத வேத -அக்னியே!. ய-யார், ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும், கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும், யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும், பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும், பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும், சந்திராம் -நிலவைப் போன்றவளும், ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான, லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை, மே -என்னிடம், ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.


அக்னியே ! கருணை நிரம்பியவளும்,செயல் திறத்தில் கம்பீரமானவளும்,நீதியை நிலை நிறுத்த செங்கோல்ஏந்தியவளும், குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,தாமரை மாலை அணிபவளும், நிலவை போன்றவளும், பொன் மயமானவளுமான திருமகளை,என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் 


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 14


ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ ||

ஜாத வேத -அக்னியே !


ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும், புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும், புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும், ஸூவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும், ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும், சூர்யாம் - பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும், ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான, லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை, மே -என்னிடம், ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.


அக்னியே! கருணை நிரம்பிய மனதை உடையவளும்,தாமரை மலரில் உறைபவளும், உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும், உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும், பொன் மாலை அணிந்தவளும், பகலவன் போல் பிராகாசிக்கின்றவளும்,பொன் மயமானவளுமான திருமகளை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் ~ 15


தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனபகாமினீம் யஸ்யாம் |

ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-ஸ்வானு விந்தேயம் புருஷானஹம் ||


ஜாத வேத -அக்னியே! யஸ்யாம் -யாரால், பிரபூதம் -அளவிட முடியா. ஹிரண்யம் -பொன்னும், காவஹ -பசுக்களும். தாஸ்ய -பணிப் பெண்டிரும். அஸ்வான் -குதிரைகளும். புருஷான் -பணியாட்களும், அஹம் -நான், விந்தேயம்-பெறுவேனோ, தாம் -அந்த, லக்ஷ்மீம் -திருமகளை. மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிருக்குமாறு, ஆவஹ -செய்தருள வேண்டும் .


அக்னி தேவனே! யாரால் அளவிட முடியாத பொன்னும், பசுக்களும், பணிப்பெண்டிரும், குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ, அந்த திருமகள், என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும்.


ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி |

தன்னோ லக்ஷ்மீஃ ப்ரசோதயாத் ||


மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம். திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம்.அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக.


ஸ்ரீஸூக்தம் ஸ்லோகம் நிறைவு....

பத்மப்ரியே பத்மினி பத்மஹஸ்தே பத்மாலயே பத்மதளாயதாக்ஷி |

விச்வப்ரியே விஷ்ணு மநோகூலே த்வத்பாத பத்மம் மயிஸந்நிதஸ்வ ||


தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை எங்கள் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.


ச்ரியை ஜாத ச்ரிய ஆநிர்யாய ச்ரியம் வயோ ஜநித்ருப்யோ ததாது |

ச்ரியம் வஸாநா அம்ருதத்வமாயந் பவந்தி ஸத்யஸ்ஸமிதா மிதத்யூத் ||


லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.


ஸந்ததம்ருசா விஷட்க்ருத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசூபி:

ய ஏவம் வேத

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணுபத்னீ ச தீமஹி |

தன்னோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் ||


எல்லா நன்மையும் திருமகளேதான் – இவ்வாறு அறிபவன் திருமகளை அடைகிறான். அப்படி செய்பவனுக்கு ஸகல விதமான செல்வமும் கிடைக்கிறது. இவ்வாறு அறிய வேண்டும்.  இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் எங்களுக்கு தந்து அருளவேண்டும்.


ஸ்ரீ ஸுக்தம் ஸ்லோகம் சம்பூர்ணம்.




பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி வறுமையைப் போக்கி நற்பொருளை அளிக்கும் சக்தி பெற்றவள்.  இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. ஸ்ரீஸுக்தத்தை தினமும் பாராயணம் செய்தால் வாழ்க்கை வளம் பெரும். மந்திர பாராயணம் செய்ய முடியாதவர்கள் தினம் தோறும் இந்த மந்திரத்தை காதால் கேட்டாலே திருமகளின் திருவருளை பெறமுடியும். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற செல்வத் திருமகளை பிரார்த்திப்போம்.


ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண- ரஜதஸ்ரஜாம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ


விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் நமக்கும் கிட்டும்படி தேவியை வேண்டுவோம்.


தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ -மநபகாமிநீம்

யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்


லக்ஷ்மி கடாக்ஷம் நம்மிடம் இருந்தால் நாம் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடைய முடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் நம்மை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரிய வேண்டுவோம்.


அஸ்வபூர்வாம் ரத - மத்யாம் ஹஸ்திநாத -ப்ரபோதிநீம்

ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்


குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை நம்மிடம் வருமாறு தேவியை வேண்டுவோம். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி நம்மை வந்தடையட்டும்.


காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா

மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்

பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்


மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிராகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், என்ற பெயரை உடையவளுமான லட்சுமி தேவியை நம் இருப்பிடத்திற்கு அழைக்க பிரார்த்திப்போம்.


சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்

ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம் :

தாம் பத்மிநீமீம் சரண-மஹம் ப்ரபத்யே

அலக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே


பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை  சரணடைவோம். நம்முடைய வறுமை அழியட்டும். நமக்கு அருள் கிடைக்கட்டும்.


ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ

வநஸ்பதிஸ்தவ வ்ருக்க்ஷோத பில்வ:

தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த

ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ:


சூரியனைப்போல் ஒளி நிறைந்தவளே! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி எங்களுக்கு அருளவேண்டும்.


உபைது மாம் தேவஸக : கீர்திஸ்ச மணிநா ஸஹ :

ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரே - ஸ்மிந் கீர்த்திம்ருத்திம் ததாது மே


செல்வத்திற்கு தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர வேண்டும். உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் எனக்கு பெருமையையும், செல்வ வளங்களையும் அருள்வாய்.


க்ஷுத்பிபாஸாமலாம்

ஜ்யேஷ்டா மலஷ்மீம் நாச

யாம்யஹம்

அபூதி மப ம்ருத்யும் சஸர்

வாம் நிர்ணுத மே க்ருஹாத்


பசியினாலும், தாகத்தினாலும் இளைத்தவளும் , (உனக்கு மூத்தவளும்), முன்னால் பிறந்தவளுமான, செல்வத்திலிருந்து விலகிய மூதேவியை நான் ,எனது இல்லத்திலிருந்து விலக்குகிறேன். எல்லா ஏழ்மையையும் வறுமையையும் அகற்றி அருள்க.


கந்தத்வாராம் துராதர்ஷாம் நித்யபுஷ்டாம்

கரீஷிணீம்

ஈஸ்வரீம் ஸர்வபூதானாம் தாமிஹோபஹ்

வயே ச்ரியம்


நறுமணத்தின் இருப்பிடமானவளும், எவராலும் வெல்லப்பட முடியாதவளும், என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும், அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்


மநஸ:  காமமாகூதிம் வாசஸ் ஸத்யமசீமஹி

பசூனாம் ரூபமந்நஸ்ய மயி ஸ்ரீச்ரயதாம் யச:


திருமகளே! தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும் , மகிழ்ச்சியையும் , வாக்கில் உண்மையையும், பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால், ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும். எனக்கு புகழ் உண்டா கட்டும். அதற்கு திருவருள் புரிவாய்.


கர்தமேன ப்ரஜாபூதா மயி ஸம்பவ கர்தம

ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்மமாலிநீம்


கர்த்தமரே! உமது மகளான மஹாலக்ஷ்மி என்னிடம் வர வேண்டும். தாமரை மாலை அணிந்தவளும், செல்வத்தின் தலைவியும், அன்னையுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும். நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .


ஆப: ஸ்ருஜந்து ஸ்நிக்தானி சிக்லீத வஸ மே க்ருஹே |

நிஜ தேவீம் மாதரம்  ச்ரியம் வாஸய மே குலே ||


லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே!  

தண்ணீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும். தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .


ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹேமமாலினீம்

ஸூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ ம ஆவஹ


அக்னியே! கருணை நிரம்பிய மனதை உடையவளும், தாமரை மலரில் உறைபவளும் , உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும், உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் , பொன்மாலை அணிந்தவளும், பகலவன்போல் பிராகாசிக்கின்றவளும், பொன் மயமானவளுமான திருமகளை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும்.


ஆர்த்ராம் யஃ கரிணீம் யஷ்டிம் பிங்கலாம் பத்மமாலினீம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ 


அக்னியே! கருணை நிரம்பியவளும், செயல் திறத்தில் கம்பீரமானவளும், நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,  சந்திரன் போல் குளுமையானவளும், பொன்னிறமானவளும், தாமரை மாலை அணிந்தவளுமான திருமகள் என் முன் தோன்ற வேண்டும்.


தாம் மஆ வஹ ஜாதவேதோ லக்ஷ்மீ-மனப காமினீம் 

யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ தாஸ்யோ-

ஸ்வான் விந்தேயம் புருஷானஹம் 


அக்னி தேவனே! யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும், பணிப்பெண்டிரும் குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ, அந்த திருமகள், என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும்.


தொகுப்பு: ந.பரணிகுமார்

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...