Thursday, December 1, 2022

தோடகாஷ்டகம் – Thotakashtakam with Meaning

copy from https://thapas.wordpress.com/2018/10/09/தோடகாஷ்டகம்-thotakashtakam-with-meaning/

ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்யர் சிருங்ககிரி மடாலயத்தில் எழுந்தருளி, யாவருக்கும் அனுகிரகஞ் செய்து கொண்டிருக்கும்போது, குரு பணிவிடைகளில் மிகப் பக்தியுடையவரான “ஆனந்தகிரி” என்னும் மாணாக்கர், இச்சங்கர பகவத்பாதாச்சாரியர் சந்நிதியை அடைந்து, உடம்பை நிழல்பற்றிச் செல்வதுபோல ஆசாரிய சுவாமிகளின் கருத்தை யுணர்ந்து ஏவாமலே சிறந்த தொண்டுகளை செய்து வந்தனர்.

ஒருநாள் மாணாக்கரெல்லாரையும் வைத்துக்கொண்டு வேதாந்த பாடம் ஆரம்பிக்கும் சமயத்தில், ஆனந்தகிரி என்னும் மாணாக்கர், ஆசிரியரின் காஷாய வஸ்திரத்தைச் சுத்தம்செய்து வர ஆற்றுக்குப் போயிருந்தார். அப்போது, மற்ற மாணாக்கர்கள், பாடத்தை ஆரம்பிக்கும்படி பிரார்த்தித்து நிற்கையில், “ஆனந்தகிரி” வரட்டும், என்று ஆசாரியரது கட்டளை யுண்டாயிற்று.

அப்போது, பத்மபாதர் வணங்கி, சுவாமி! அவர் செய்யுந் திருப்பணி, செய்துகொண்டே இருக்கின்றனர்; அவர் வராமை எங்கள் பாடத்திற்குத் தடையாகலாமா? என்று வினாவினர்.

அதற்கு ஆசாரிய சுவாமிகள், பத்மபாதருக்கு அச்செருக்குத் தொலையும்பொருட்டுத், தமது அன்பராகிய ஆனந்தகிரிக்கு, வேத சாஸ்திரங்களாகிய பதினான்கு வித்தையும் வரும்படி மனதினாற் கருணையோடு கிருபை செய்தனர். உடனே ஆனந்தகிரிக்கு எல்லா வேத சாஸ்திரங்களும் வந்துவிட்டன. பின்னர், ஆனந்தகிரி ஆசாரிய சுவாமிகளிடம்வந்து வணங்கி நின்று தோடக சந்தத்தால் குருஸ்துதி செய்தனர்.

இதுவே தோடகாஷ்டகம் என்றாயிற்று.


Totakacharya

One of the chief disciples of Sri Adi Shankara composed an octad of verses in praise of the Master. The metre he has used in this composition is the difficult but beautiful totaka. Hence he was himself given the name Totakáchárya. Every word of this exquisite hymn bespeaks the utter devotion of its author to Sañkara. Sañkara, the Guru, is all to him. There is nothing equal to the Guru; nothing superior to him. The Guru is the dispeller of the darkness of ignorance. There can be no greater good than the removal of ignorance. The spirit of devotion of the disciple is best expressed in the soul-moving burden of this song :

Be Thou my refuge, O Master, Shañkara (bhava Sañkara deshika me sharanam)!


1. विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत्कथितार्थनिधे |

हृदयेकलयेविमलंचरणं भवशंकरदेशिकमेशरणम् ||१||


விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே, மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |

ஹ்ருதயே கலயே விமலம் சரணம், பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 1.


viditákhilashastrasudhájaladhe mahitopanisatkathitárthanidhe

hrudaye kalaye vimalam charanam bhava Shañkara deshika me sharanam.(1)

அறியப்பட்ட எல்லா சாஸ்திரங்களுக்கும் திருப்பாற்கடல் போன்றவரே! மேன்மைபொருந்திய உபநிஷத்துக்களாற் பிரதிபாதிக்கப்பட்ட அர்த்தங்களுக்கு இருப்பிடமானவரே! தேவரீருடைய பரிசுத்தமான திருவடிகளை இருதயத்தில் தியானிக்கின்றேன். சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


O Thou, the knower of all the milk-Ocean of Scriptures! The expounder of the topics of the great Upanisadic treasure-trove! On Thy faultless feet I meditate in my heart, Be Thou my refuge O Master, Sankara!


2. करुणावरुणालयपालयमां भवसागरदुःखविदूनहृदम् |

रचयाखिलदर्शनतत्त्वविदं भवशंकरदेशिकमेशरणम् ||२|


கருணா வருணா லயபா லயமாம், பவஸாகர து: க்க விதூந ஹ்ருதம் |

ரசயாகில தர்ஶந தத்வ விதம், பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 2.


karunávarunalaya pálaya mám bhavaságaradukhavidünahrudam

rachayákhiladarshanattattvavidam bhava Shañkara deshika me Sharaïam.(2)


O the Ocean of compassion! Save me whose heart is tormented by the misery of the sea of birth! Make me understand the truths of all the schools of philosophy!


Be Thou my refuge, O Master, Sañkara.


அருள்நிறைந்த ஆலயமே! ஜனன மரண சமுத்திரத்தில் துக்கத்தால் அலைகின்ற சித்தத்தையுடைய என்னைக் காப்பாற்றியருள்வீராக. சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்பவனாக என்னைச் செய்தருவீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


3. भवताजनतासुहिताभविता निजबोधविचारणचारुमते |

कलयेश्वरजीवविवेकविदं भवशंकरदेशिकमेशरणम् ||३||


பவதா ஜநதா ஸுஹிதா பவிதா, நிஜபோத விசாரணசாருமதே |

கலயேஶ்வர ஜீவ விவேக விதம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 3.


bhavatá janatá suhitá bhavitá nijabodhavichárana chárumate

kalayeshvarajivavivekavidam bhava Shañkara deshika me sharanam.(3)


தங்களால் ஜனத் திரளானது சுகமுள்ளதாய்ச் செய்யப்பட்டது.

ஆத்மஞானத்தை விசாரிப்பதில் அழகான மதியுடையவரே!


ஜீவேசுவரர்களை விசாரித்தறியும் ஞானமுடையவனாக என்னைச் செய்தருள்வீராக.

சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

By thee the masses have been made happy, O Thou who hast a noble intellect, skilled in the inquiry into self-knowledge! Enable me to understand the wisdom relating to God and the soul. Be Thou my refuge, O master, Sañkara.


4. भवएवभवानितिमेनितरां समजायतचेतसिकौतुकिता |

ममवारयमोहमहाजलधिं भवशंकरदेशिकमेशरणं ||४||


பவஏவபவா நிதிமே நிதராம், ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |

மமவாரய மோஹ மஹாஜலதிம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம்


bhava eva bhavániti me nitarám samajáyata chetasi kautukitá

mama váraya mohamahájaladhim bhava shankara deshika me sharanam.(4)


Knowing that Thou art verily the Supreme Lord, there arises overwhelming bliss in my heart. Protect me from the vast ocean of delusion.Be Thou my refuge, O Master, Sankara.


தேவரீரே பரமேசுவரரென்று என்மனதில் ஆனந்தமுண்டாகின்றது. என்னுடைய மோகமாகிய பெருங்கடலை நீக்கியருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


सुकृते | अधिकृतेबहुधाभवतो भवितासमदर्शनलालसता |

अतिदीनमिमंपरिपालयमां भवशंकरदेशिकमेशरणम् ||५||


ஸுக்ருதே திக்ருதே பஹுதா பவதோ ,பவிதா ஸமதர்சந லாலஸதா |

அதிதீநமிமம் பரிபாலய மாம் , பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 5.


sukrute dhikrute bahudhá bhavato bhavitá samadarsanalalasata

atidinamimam paripálaya mám bhava Shañkara deshika me sharanam.(5)


ஓ புண்ணியமூர்த்தியே! உலகங்ளை ஆள்பவரே ! தேவரீரிடமிருந்து சமதிருஷ்டியாகிய சந்தோஷமானது பல பிரகாரமாக அனைவருக்கும் உண்டாயிற்று. மிகத் துக்கியாகிய இந்த என்னைக் காப்பாற்றி யருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


Desire for the insight into unity through Thee will spring only when virtuous deeds are performed in abundance and in various directions. Protect this extremely helpless person. Be Thou my refuge, O Master, Sañkara.


6. जगतीमवितुंकलिताकृतयो विचरन्तिमहामहसश्छलतः |

अहिमांशुरिवात्रविभासिगुरो भवशंकरदेशिकमेशरणम् ||६||


ஜகதீ மவிதும் கலிதா க்ருதயோ விசரந்தி மஹா மஹஸஶ்ச்சலத: |

அஹிமாம் ஶுரிவாத்ர விபாஸி குரோ பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 6.


ஓ குருமூர்த்தியே! உலகங்களை இரட்சித்தருளத் தேவரீருடைய மஹாமஹிமை வாய்ந்த திருவிளையாடல்கள் உன்னதமாய் விளங்குகின்றன. தேவரீரும் இங்கு சூரியனுக்குச் சமானமாக விளங்குகின்றீர். சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


jagatimavitum kalitákrutayo vicharanti mahamahasashchalatah

abhimámsurivatra vibhási guro bhava Shañkara deshika me sharanam.(6)


O Teacher! For saving the world the great assume various forms and wander in disguise. Of them, Thou shinest like the Sun.

Be Thou my refuge, O Master, Sañkara.


7. गुरुपुंगवपुंगवकेतनते समतामयतांनहिको | अपिसुधीः |

शरणागतवत्सलतत्त्वनिधे भवशंकरदेशिकमेशरणम् ||७||


குருபுங்கவ புங்கவ கேதந தே ஸமதா மயதாம் நஹி கோபி-ஸுதீ: |

ஶரணாகத வஸ்தல தத்வநிதே பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 7.


gurupuñgava puñgava ketana te samatámayatám nahi ko pi sudhi:

Sharanágatavatsala tattvanidhe bhava Shañkara deshika me sharanam.(7)


தங்களிடம் அடைக்கலம் புகுந்தவரிடத்தில் அன்புடையவரே! உண்மைப்பொருளுக்கு இடமானவரே! ஓ குரவர் சிகாமணியே! மேலோருக்கும் மேலாயிருப்பவரே! தேவரீருக்குச் சமானமாம் தன்மையை, விரிவாகத்தெளிந்த எந்த அறிஞனும் அடைந்ததில்லை. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


O the best of Teachers! The Supreme Lord having the bull as banner! None of the wise is equal to Thee! Thou who art compassionate to those who have taken refuge! The Treasure-trove of truth!

Be Thou my refuge, O Master Sankara.


8. विदितानमयाविशदैककला नचकिंचनकाञ्चनमस्तिगुरो |

द्रुतमेवविधेहिकृपांसहजां भवशंकरदेशिकमेशरणम् ||८||


விதிதா நமயா விஶதைககலா ந ச கிஞ்சந காஞ்சந மஸ்தி குரோ |

த்ருதமேவ விதேஹிக்ருபாம் ஸஹஜாம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 8.


viditá na mayá vishadaikakalá na cha kimchana kánchanamasti guro

drutameva vidhehi krupám sahajám bhava Shañkara deshika me sharanam.(8)

Not even a single branch of knowledge has been understood by me correctly. Not even the least wealth do I possess, O Teacher. Bestow on me quickly Thy natural grace. Be thou my refuge, O Master Sañkara.

ஓ குருமூர்த்தியே! ஒரு சாஸ்திரமேனும் தெளிவுடையதாய் என்னால் அறியப்படவுமில்லை; சிறிது பொன்னுமில்லை; தங்களுடன் பிறந்த கருணையைச் சீக்கிரம் தந்தருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


தோடகாஷ்டகம் தமிழ் உரை முற்றும் 


Totakashtakam


விதிதா-கில சாஸ்த்ர ஸுதா ஜலதே

மஹிதோ (உ)பனிஷத்-கதிதார்த (த)னிதே

ஹ்றுதயே கலயே விமலம் சரணம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 1


கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகர துஃக விதூன ஹ்றுதம்

ரசயாகில தர்ஶன தத்த்வ-விதம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 2


பவதா ஜனதா ஸுஹிதா பவிதா

நிஜபோத விசாரண சாருமதே

கலயேஶ்வர ஜீவ விவேக விதம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 3


பவ எவ பவானிதி மெ னிதராம்

ஸமஜாயத சேதஸி கௌதுகிதா

மம வாரய மோஹ மஹாஜலதிம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 4


ஸுக்றுதே‌ உதிக்றுதே பஹுதா பவதோ

பவிதா ஸமதர்ஶன லாலஸதா

அதி தீனமிமம் பரிபாலய மாம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 5


ஜகதீமவிதும் கலிதாக்றுதயோ

விசரன்தி மஹாமாஹ ஸச்சலதஃ

அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி குரோ

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 6


குருபுங்கவ புங்கவகேதன தே

ஸமதாமயதாம் ன ஹி கோ‌உபி ஸுதீஃ

ஶரணாகத வத்ஸல தத்த்வனிதே

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 7


விதிதா ன மயா விஶதைக கலா

ன ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோ

த்றுதமேவ விதேஹி க்றுபாம் ஸஹஜாம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 8



ஸ்ரீ சங்கரரின் மேல், ஸ்ரீ தோடக ஆச்சாரியாள் எனும் சீடர் 'தோடக' விருத்தத்தில் 8 பாடல்கள், (அஷ்டகம்) அருளிச் செய்தார். 1984-ஆம் வருடம், ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ மகாஸ்சுவாமிகளை பாரதிவை ராமச்சந்திரன் தரிசித்தபொழுது, வடமொழியில் உள்ள தோடகாஷ்டகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து பாடச் சொன்னார்.


தோடகாஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-


சங்கர குருவே சரணம்... சரணம்

உயரிய சாஸ்திர அமுதக் கடலே

உபநிடம் கூறும் உண்மைப் பொருளே!

சங்கர குருவே சரணம், சரணம்!


கருணை வடிவே! கடல்போல் வாழ்வில்

கவலைகள் தீர்த்தே காத்திட வேண்டும்!

காவியம், சாஸ்திரம் உணர்த்திட வேண்டும்

சங்கர குருவே சரணம், சரணம்!


உம்முடைப் பிறப்பால் உலகம் உய்ந்தது,

உண்மை, ஞானம் உணர்த்திட வைத்தது!

உயரிய ஆத்தும அறிவினை அருள்வாய்

சங்கர குருவே சரணம், சரணம்!


மங்களம் தந்திடும் சங்கரர் நாமம்

மனதில் மகிழ்வினை உடனே தந்திடும்!

மாளா ஆசைகள் நீக்கிடச் செய்வாய்

சங்கர குருவே சரணம், சரணம்!


நற்செயல் பற்பல செய்திட அருள்வாய்

நல்லவர் பார்வை ஒன்றிடத் செய்வாய்!

நாடிடும் இந்த எளியனைக் காப்பாய்

சங்கர குருவே சரணம் சரணம்!


உலகைக் காத்திடும் உத்தமர்கள் பலர்

உலகில் நன்மையை வேண்டியே நிற்பர்!

ஒளிர்ந்திடும் கதிரவன் ஒளியினைப் போலாம்

சங்கர குருவே சரணம் சரணம்!


தவமுனி பலரினிலும் மேலாம் குருவே

தரணியில் உனைப்போல் ஞானியும் உண்டோ?

தாளினைப் பணிபவர் தாபங்கள் தீர்ப்பாய்

சங்கர குருவே சரணம் சரணம்!


கலைகள் எவையும் யான் அறியனே!

குருவினை வணங்கும் வகை தெரியேனே!

கடிதென வந்தே காத்திட வேண்டும்

சங்கர குருவே சரணம் சரணம்!

Wednesday, May 18, 2022

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

 திருச்சிற்றம்பலம்

அ௫ளியவர் : சுந்தரர்

திருமுறை : ஏழாம் திருமுறை

பண் : நட்டராகம்

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : குருகாவூர் வெள்ளடை


இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்

முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1


ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்

காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்

மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2


பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்

ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே

காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்

வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3


வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை

அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்

மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4


வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே

அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்

விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5


பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்

மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே

விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.6


போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை

நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்

சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட

வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.7


மலக்கில்நின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்

சலச்சல மிடுக்குடைய தருமனார் தமர்என்னைக்

கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே

விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.8


படுவிப்பாய் உனக்கேஆள் பலரையும் பணியாமே

தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே

கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே

விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.9


வளங்கனி பொழில்மல்கு வயல் அணிந் தழகாய

விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை

இளங்கிளை ஆரூரன் வனப்பகையவள் அப்பன்

உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 7.29.10


– திருச்சிற்றம்பலம் –

ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

லலிதா நவரத்தின மாலை, அகத்திய மாமுனிவர் அருளியது. இதில் அகத்தியர், அம்பாளை நவரத்தினங்களாக வர்ணித்துப் போற்றுகின்றார். இந்த எளிய தமிழ்ப் பாடல், பக்திச் செறிவும் அருட்பிழிவும் மிக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இணையாகக் கருதப் பெறுகின்றது. சக்தி வாய்ந்த இந்தப் பாடலைப் பாடுவோருக்கும் கேட்போருக்கும் சகல நன்மைகளும் கிட்டும். 

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம்
பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !

வைரம்

கற்றும் தெளியார் காடேக்கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒலிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

முத்து

முத்தே வரும் முத்தொழிலார் றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறு ததிகினை வாழ்வுடையேன்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர்
தேம்பொழிலாமிது செய்தவலாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால்
மந்திர வேதமயப்பொருள் ஆனால்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

மாணிக்கம்

காணக்கிடையாக் கதியானவளே
கருதக்கிடையா கலையானவளே
பூணக்கிடையா பொளிவானவளே
புனையக்கிடையா புதுமைதவளே
நாணித்திருநாமம் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்கவொளி கதிரே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
ஸுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவேன் அடியவற்குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வறனவா நிதியே சரணம் சரணம்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

கோமேதகம்

பூமேவியனான் புரியும் செயல்கள்
போன்றாப்பயனும் குன்றாவரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வா நிலமே
குழல்வாய் மொழியே வருவாய் வருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

பத்மராகம்

ரஞ்சனி நந்தனை அங்கனி பதும
ராக விகாசினி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சனா மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள‌ மேரு ஸ்ருங்க நிவாரிணி
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

வைடூர்யம்

வலையோத்தவினை கலையோத்த மனம்
மருளப் பறையா ரொளியோத்தவிதால்
நிலையர்ரோளிஎன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையர்ரசைவர் ரணிபூதிபெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலைத்துவஜன் மகளே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

இப்பாடலின் பலன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புதசக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே!!

Sunday, September 12, 2021

மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

#அஷ்டகம்_என்றால் எட்டுப் பொருள்களைக் கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது.


இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது.


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித

ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே

படைப்பின் மூல காரணங்களாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து ஸூரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி

ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், அணைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அளிப்பவளும், துக்கங்களை அழிப்பவளும் வணங்குகிறேன்.


ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

சாதனைகள் புரிந்து நல்ல முறையில் வாழ புத்தியை அளிப்பவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளின் பாத கமலங்களை அடைய அருள்பவளும், மந்திரங்களின் சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி

யோகக்நே யோக ஸ்ம்பூ தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கு பின்னால் இருப்பவளும், யோகமாக பிறந்தவளும், யோகத்தால் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே

மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அணைத்து விஷயங்களுக்கும் பின்னால் சூட்சும வடிவத்தில் ஆதார சக்தியாக விளங்குபவளும், பயங்கர வடிவத்தில் ருத்ரணியாக விளங்குபவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், அனைத்து பாபங்களையும அழிப்பவளும் மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி

பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தாமரை ஆசனத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பவளும், உயர்ந்த ப்ராமணியாக விளங்குபவளும், இப்பிரஞ்சத்தின் உயர்ந்த கடவுளாக, தாயாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே

ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தூய்மையின் அம்சமான வெள்ளை உடையை அணிந்திருப்பவளும், பலவித ஆபரணங்கள் அணிந்திருப்பவளும், பிரபஞ்சத்தில் தாய்க்கு தாயாக காப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய : படேத் பக்திமான் நர :

ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

யார் ஒருவர் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கிறார்களோ அவர்கள் சகலவிதமான சம்பத்துக்களையும் பெற்று அன்னையின் காலடிகளை அடைவார்கள்.


ஏக காலம் படேந் நித்யம் மஹா பாப விநாஷணம்

த்விகாலம் ய : படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால் அணைத்து பாவங்களும் நீங்கும்.

இரு முறை சொன்னால் தனங்களையும், தான்யங்களையும் அடைவோம்.


த்ரிகாலம் ய படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்

மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்ன வரதா ஸூபா

மூன்று முறை சொன்னால் நம்முடைய எதிரிகள் அழிவார்கள்.  தினம் இதை கூறி மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருள் பொங்கிய சாந்த வடிவத்தில் நாம் சகல அனுக்ரஹங்களையும் பெறுவோம்.

Saturday, September 11, 2021

Ganesha Ashtottara Shatanamavali Lyrics

108 Names of Lord Ganesh

Om Gajananaya namaha 1
Om Ganadhyakshaya namaha 2
Om Vignarajaya namaha 3
Om Vinayakaya namaha 4
Om Dwimaturaya namaha 5
Om Dwimukhaya namaha 6
Om Pramukhaya namaha 7
Om Sumukhaya namaha 8
Om Krutine namaha 9
Om Supradeepaya namaha 10

Om Sukhanidhaye namaha 11
Om Suradhyakshaya namaha 12
Om Surarighnaya namaha 13
Om Mahaganapataye namaha 14
Om Manyaya namaha 15
Om Mahakalaya namaha 16
Om Mahabalaya namaha 17
Om Herambaya namaha 18
Om Lambajatharaya namaha 19
Om Haswagrivaya namaha 20

Om Mahodaraya namaha 21
Om Madotkataya namaha 22
Om Mahaviraya namaha 23
Om Mantrine namaha 24
Om Mangalaswarupaya namaha 25
Om Pramodaya namaha 26
Om Pradhamaya namaha 27
Om Pragnaya namaha 28
Om Vignagatriye namaha 29
Om Vignahantre namaha 30

Om Viswanetraya namaha 31
Om Viratpataye namaha 32
Om Sripataye namaha 33
Om Vakpataye namaha 34
Om Srungarine namaha 35
Om Ashritavatsalaya namaha 36
Om Shivapriyaya namaha 37
Om Sheeghrakarine namaha 38
Om Saswataya namaha 39
Om Balaya namaha 40

Om Balodhitaya namaha 41
Om Bhavatmajaya namaha 42
Om Puranapurushaya namaha 43
Om Pushne namaha 44
Om Pushkarochita namahaya 45
Om Agraganyaya namaha 46
Om Agrapujyaya namaha 47
Om Agragamine namaha 48
Om Mantrakrutaye namaha 49
Om Chamikaraprabhaya namaha 50

Om Sarvaya namaha 51
Om Sarvopasyaya namaha 52
Om Sarvakartre namaha 53
Om Sarvanetraya namaha 54
Om Sarvasiddhipradaya namaha 55
Om Sarvasiddaye namaha 56
Om Panchahastaya namaha 57
Om Parvatinadanaya namaha 58
Om Prabhave namaha 59
Om Kumaragurave namaha 60

Om Akshobhyaya namaha 61
Om Kunjarasurabhanjanaya namaha 62
Om Pramodaptanayanaya namaha 63
Om Modakapriya namaha 64
Om Kantimate namaha 65
Om Dhrutimate namaha 66
Om Kamine namaha 67
Om Kavidhapriyaya namaha 68
Om Brahmacharine namaha 69
Om Brahmarupine namaha 70

Om Brahmavidhyadhipaya namaha 71
Om Jishnave namaha 72
Om Vishnupriyaya namaha 73
Om Bhaktajivitaya namaha 74
Om Jitamanmadhaya namaha 75
Om Ishwaryakaranaya namaha 76
Om Jayase namaha 77
Om Yakshakinnerasevitaya namaha 78
Om Gangansutaya namaha 79
Om Ganadhisaya namaha 80

Om Gambhiraninadaya namaha 81
Om Vatave namaha 82
Om Abhishtavaradaya namaha 83
Om Jyotishe namaha 84
Om Bhktanidhaye namaha 85
Om Bhavagamyaya namaha 86
Om Mangalapradaya namaha 87
Om Avyaktaya namaha 88
Om Aprakrutaparakramaya namaha 89
Om Satyadharmine namaha 90

Om Sakhye namaha 91
Om Sarasambhunidhaye namaha 92
Om Mahesaya namaha 93
Om Divyangaya namaha 94
Om Manikinkinimekhalaya namaha 95
Om Samastadivataya namaha 96
Om Sahishnave namaha 97
Om Satatodditaya namaha 98
Om Vighatakarine namaha 99
Om Viswadrushe namaha 100

Om Viswarakshakrute namaha 101
Om Kalyanagurave namaha 102
Om Unmattaveshaya namaha 103
Om Avarajajite namaha 104
Om Samstajagadhadharaya namaha 105
Om Sarwaishwaryaya namaha 106
Om Akrantachidakchutprabhave namaha 107
Om Sri Vigneswaraya namaha 108


Monday, February 15, 2021

நாராயண ஸூக்தம்

Source https://ramanisblog.in/2014/04/11/நாராயண-ஸூக்தம்-பொருளுரை/

நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம், 4.10.13.


1. ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |

விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் |


சகஸ்ர சீர்ஷம் - ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும், 

தேவம் - ஒளிமிகுந்த தலைவனும், 

விச்வாக்ஷம் - அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும், 

விஸ்வ சம்புவம் - அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும், மங்கலலத்தைச் செய்பவரும், 

விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து பரந்தவரும், 

அக்ஷரம் - அழிவற்றவரும், 

பரமம் பதம் - அனைத்திற்கும் மேற்பட்டு மேலான நிலையில் உள்ளவரும், 

நாராயணம் தேவம் - நாராயணன் என்னும் தெய்வத்தை.


எண்ணற்ற தலைகளை உடையவரும், ஒழி மிக்கவரும், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும்,  உலகைத்தை விளைவித்து, மங்கலத்தைச் செய்பவரும், அணைத்து உலகிலும் நிறைந்து,  விரிந்து பரந்தவரும்,  அழிவற்றவரும், மேலானவருமான நாராயணன் என்னும் தேவனை த்யானிக்கிறேன். 


2. விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் | விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |

பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம் |


விஸ்வத - இந்த உலகத்தைவிட, 

பரமான் - இதற்கு அப்பாற்பட்டு, மேலானவரும், 

நித்யம் - என்றும் உள்ளவரும், 

விஸ்வம் - உலகமாய் விளங்குபவரும், 

ஹரிம் - அவரது பெயரை உச்சரித்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவரும், 

நாராயணம் - நாராயணனை 


இந்த உலகிற்கு அப்பாற்பட்டு, இதனை விட மேலானவரும், என்றும் உள்ளவரும், பெயரை உச்சரித்த மாத்திரத்தில் துன்பங்களைக் களைபவரும், ஆகிய நாராயணனை த்யானம் செய்கிறேன் .


3. பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்

னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் |


விஶ்வ’ஸ்ய - இவ்வுலகிற்கு, 

பதிம் - தலைவரும், 

ஆத்ம ஈஸ்வரம் - அனைத்து உயிர்களின் தலைவரும், 

சாஸ்வதம் - என்றும் உள்ளவரும்,நிலை பெற்றவரும், 

சிவம் - மங்கள வடிவானவரும், 

அச்யுதம் - அழிவற்றவரும், 

மகாக்யேயம் - சிறந்த அறிவினால் அறியத்தக்கவரும், 

விஸ்வ ஆத்மானம் - அனைத்திற்கும் ஆத்மாவாக இருப்பவரும், 

பராயணம் - சிறந்த புகலிடமாக இருப்பவருமான, நாராயணனை.


அனைத்து உலகிற்கும் தலைவனை, என்றும் நிலையாய் இருப்பவரும், மங்கள வடிவினரும் சிறந்த அறிவால் அறியத்தக்கவரும், எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும், சிறந்த புகலிடமாக இருப்பவருமான நாராயணனை, த்யானிக்கிறேன் .


4.னாராயணப’ரோஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ |

னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ |

 

நாராயண பர ஜ்யோதி - நாராயணனே சிறந்த ஒளி, 

நாராயண : பர : ஆத்மா - நாராயணனே அனைத்தையும் கடந்த பரமாத்மா, 

நாராயண : பர ப்ரஹ்ம - நாராயணனே பர ப்ரஹ்மம்.

நாராயண : பர தத்வம் - நாராயணனே மேலான உயர்ந்த உண்மை .

நாராயண : பர த்யாதா - நாராயணனே த்யானம் செய்பவர்களுள்,த்யானம் செய்யப் படுபவர்களில் சிறந்தவர் .

நாராயண ; பர த்யானம் - நாராயணனே சிறந்த த்யானம் .


5.யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதே‌உபி’ வா ||

அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ |


ஜகத் சர்வம் - உலகனைத்திலும், 

யத்ய கிஞ்சித் த்ருச்யதே - காணப்படுவது எதுவாயினும், மிகுந்து காணப் படுவத்ஹயினும், 

அபிவா - அல்லது, 

ஸ்ரூயதே - கேட்கப் படுவது எதுவாயினும், 

தத் சர்வம் - அவை அனைத்தையும், 

அந்த - உள்ளும், 

பஹி : ச - புறமும், 

வ்யாப்ய - வியாபித்தபடி, நிறைந்தபடி, ஊடுறிவியபடி, 

நாராயண : ஸ்தித : இருக்கிறார் .

 

உலகனைத்தும் காணப்படுவது,  கேட்கப்படுவது எதுவாயினும், அவை அனைத்தையும் உள்ளும் புறமும்

வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்


6.அனம்தமவ்யயம்’ கவிக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |

 பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |


அனந்தம் - எல்லையற்றவரும், முடிவற்றவரும், 

அவ்யயம் - விளக்க முடியாதவரும், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவரும், 

கவிம் - அனைத்தும் அறிந்தவரும், 

சமுத்ரே - சம்சாரப் பெருங்கடலின், 

அந்தம் - முடிவில், இருப்பவரும், 

விஸ்வ சம்புவம் - உலகம் விளையக் காரணமானவரும், மங்கலம் செய்பவரும், 

ஹ்ருதயம் ச அபி -  இதயம், 

அதோ முகம் - கீழ் நோக்கிய, 

பத்ம கோச ப்ரதீகாசம் - தாமரை மொட்டு போல், 

 

முடிவற்றவரும், அனைத்தும் உணர்ந்தவரும், அறிந்தவரும், சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் இருப்பவரும், 

உலகிற்கு நன்மை செய்பவரும், ஆகிய நாராயணனை, கீழ் நோக்கிய தாமரை மொட்டு போல் அமைந்துள்ள

இதயத்தில் த்யானிக்கின்றேன் .

 

7. அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |

ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் |

 

நிஷ்ட்ட்யா - குரல் வளைக்கு, 

அத - கீழே, 

நாப்யாம் - தொப்புளுக்கு, 

உபரி - மேலே, 

விதஸ்யா : அந்தே - ஒரு சாண் தூரத்தில், 

திஷ்டதி -  இருக்கிறது .

விச்வச்ய - அனைத்து உலகிற்கும்,

மகத் - உயர்ந்த,  சிறந்த, 

ஆயதனம் - உறைவிடம்.

ஜ்வாலமால குலம் - சுடர் வரிசையால் சூழப்ப்பட்டார்ப்போல், 

பாதி - ப்ராகசிக்கிறது .

 

குரல் வளைக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே,  ஒரு சாண் தூரத்தில் இதயம் இருக்கிறது .

உலகிற்கெல்லாம் சிறந்த அந்த உறைவிடம், சுடர் வரிசையால் சூழப்பட்டற்போல் பிரகாசிக்கிறது .

 

8.ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் |

தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் |

 

ஆகோச சந்நிபம் - தாமரை மொட்டு போன்ற இதயம், 

சந்ததம் - நான்கு புறங்களிலும், 

சிலாபி - நாடிகளால், 

லம்பதி - தொங்குகிறது, 

தஸ்ய - அதன், 

அந்தே - உள்ளே, 

சூக்ஷ்மம் - நுண்ணிய, 

சூக்ஷிரம் - ஆகாசம், 

சர்வம் - அனைத்தும், 

தஸ்மின் - அதில், 

ப்ரதிஷ்டிதம் - நிலை பெற்றுள்ளன .

 

தாமரை மொட்டு போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது .

அதன் உள்ளே ஆகாசம் உள்ளது .அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன .

 

9. தஸ்ய மத்யே’ மஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |

ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ |


தஸ்ய - அதன், 

மத்யே - நடுவில், 

விச்வார்ச்சி - எங்கும் ஒழி வீசுபதாகவும், 

விச்வதோ முக :-எல்லாத் திக்கிலும் செல்வதாகவும், 

மகான் - சிறந்த, 

அக்னி - அக்னி, 

அக்ரபுக்- முதலில் உண்பதாக, 

ஆகாரம் - உணவை, 

விபஜஸ் - பிரித்துக் கொடுப்பதாக, 

திஷ்ட்டன் -  நிலைத்து நிற்பதாக .

அஜர - பழுது படாதததாக .

கவி - அனைத்தையும் காண்பதாக .

 

எங்கும் ஒளி வீசுபதாகவும், எல்லாத் திசைகளிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்னி, அந்த ஆகாசத்தின் நடுவில் உள்ளது .  பிராணனாகிய அந்த அக்னி, முதலில் உண்பதாகவும்,  உணவைப் பிரித்துக் கொடுப்பதாகவும், நிலைத்து நிற்பதாகவும், தான் பழுது படததாதாகவும், அனைத்தையும் காண்பதாகவும் உள்ளது.

 

10.

திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |

ஸம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததலமஸ்த’கஃ |

தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ


தஸ்ய - அந்த பிராணனின், 

ரச்மைய - கிரணங்கள், 

த்ரியக் - குறுக்கிலும், 

ஊர்த்வம் - மேலும், 

அத - பரவி, 

சந்ததா - எப்போதும் வியாபித்திருக்கின்றன .

ஆபாத தல மஸ்தக :-உள்ளங்கால் முதல் உச்சந்த்தலை வரை, 

ஸ்வம் தேகம் - தனக்குரிய உடலை, 

சந்தாபயதி - உஷ்ணமுள்ளதாகச் செய்கிறது .

தஸ்ய - அதன், 

மத்யே - மத்தியில், 

அணீய - மெலிதான, 

வஹ்நிசிகா - நெருப்புச்சுடர்,

ஊர்த்வா - மேல் நோக்கி அமைந்துள்ளது .

 

அப்பிராணனின் கிரணங்கள், குறுக்கிலும், நெடுக்கிலும், மேலும் கீழும் பரவி, உடல் எங்கும் நிறைந்துள்ளன .  உச்சி முதல் பாதம் வரை தனது உடலை சூடுள்ளதாகச் செய்கிறது .

இதன் நடுவில் மெலிதான அக்கினிச் சுடர் மேல் நோக்கி அமைந்துள்ளது .

 

11.  னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா |

னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |

நீலதோயாத மத்யஸ்தாத் ‘கருத்த மேகங்களின் மத்தியில் இருந்து, 


பாஸ்வரா - ஒளி வீசுகின்ற, 

வித்யுத் லேகா இவ - மின்னர்க் கொடி போல், 

நீவார சூகவத் - நெல் மணியின் சிறு முளை போல், 

தன்வீ - மெல்லியதாக, 

பீதா - பொன்னிறமாக, 

அணு உபமா - நுண்ணியதான அணுவைப் போல், 

பாஸ்வதி - ஒளிர் விட்டுக் கொண்டு இருக்கின்றது .

 

12. தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேபரமா”த்மா வ்யவஸ்தி’தஃ

| ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||

 

தஸ்யா - அந்த, 

சிகாயா - சுடரின்

மத்யே - மத்தியில், 

பரமாத்மா - அனைத்தையும் கடந்த இறைவன் வீற்றிக்கிறார் .

ஸ : அவரே, 

பிரம்மா - பிரம்மா,

ஸ - அவரே, 

ஹரி - விஷ்ணு, 

ஸ - அவரே, 

சிவ - சிவன், 

ஸ - அவரே, 

இந்த்ர - இந்திரன், 

ஸ - அவரே, 

அக்ஷரே - கட்டுக்குள் அடங்காதவர்,அழிவற்றவர், 

ஸ்வராட் - தனது ஒளியுடன் பிரகாசிப்பவர் .

பர : அவருக்கு மேல் எவரும் இல்லாதவர் .

 

அச் சுடரின் நடுவில் இறைவன் வீற்றிக்கிறார் .அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே ஹரியாகிய விஷ்ணு, அவரே இந்திரன், அவர் அழிவற்றவர் தன் சுய ஒளியுடன் பிரகாசிப்பவர் அவருக்கு மேல் எவரும் இல்லாதவர்.

 

13.றுதக்‍ம் ஸத்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |

ஊர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பாய வை னமோ னமஃ’ ||


ரிதகும் - காணும் பொருள்களின் அழகாகவும் சீராகவும், 

சத்யம் - காண் பொருட்களுக்கு ஆதாரமாகவும் உள்ள, 

பரம் ப்ரஹ்ம - பரம் பொருளை, 

புருஷம் - உடலனைத்தும்,உடல் தோறும் உறைபவனை, 

கிருஷ்ண பிங்கலம் - கரு மேனித் திருமாலும், செம்மேனிச் சிவனும், 

இணைந்த வடிவை, 

ஊர்த்வரேதம் - சக்தி கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் இறைவனை, 

விருபாக்ஷனை - முக்கண் உடயோனை, 

விச்வரூபாய வை - அனைத்தையும் தன வடிவாய்க் கொண்டவனை, 

நமோ நம - பன் முறை வணங்குகிறேன் .

 

காணும் பொருள்களின் ஆதாரமாகவும் அவற்றின் எழிலாகவும் உள்ள பரம் பொருளை, உடல்கள் அனைத்திலும், உறைபவனை, கருமேணித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒருங்கிணைந்த வடிவை தூயவனை, முக்கண்ணனை அனைத்தையும் தன வடிவைக் கொண்டவனை பன் முறை வணங்குகிறேன்


ஓம் னாராயணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||


நாராயணாய - நாராயணனை, 

வித்மஹே - அறிந்து கொள்வோம் .

வாசுதேவாய - வாசு தேவரின் புதல்வனாகிய வாசுதேவனை, 

தீமஹி - த்யானிப்போம் .

தத் விஷ்ணு - அந்த விஷ்ணு, 

ந ;நம்மை, 

ப்ரசோதயாத் - தூண்டட்டும் .


நாரணனை அறிந்து கொள்வோம் .  அந்த வாசுதேவனைத் த்யாநிப்போம் . அந்த விஷ்ணு அவரைத் த்யானிக்க நம்மைத் தூண்டட்டும் .


ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |

விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் |

விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் |

விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |

பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்

னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் |

 னாராயணப’ரோஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ |

 னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ |

னாராயணப’ரோ த்யாதா த்யானம் னா’ராயணஃ ப’ரஃ |

யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதே‌உபி’ வா ||

அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ |

அனம்தமவ்யயம்’ கவிக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |

 பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |

அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |

ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் |

ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் |

தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் |

தஸ்ய மத்யே’ மஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |

ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ |

திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |

ஸம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததலமஸ்த’கஃ |

தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ

| னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா |

னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |

தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேபரமா”த்மா வ்யவஸ்தி’தஃ

| ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||

றுதக்‍ம் ஸத்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |

ஊர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பாய வை னமோ னமஃ’ ||

ஓம் னாராயணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

புருஷ ஸூக்தம் தமிழில் ஜடாயு

 (ரிக். பத்தாவது மண்டலம், 90வது சூக்தம்)


ஆயிரம் சிரங்கள் கொண்டோன் புருஷன்

ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்

புவியெங்கும் பரந்து

நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.  (1)


இவை அனைத்தும் புருஷனே

முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்

அழிவற்ற பெருநிலையின் தலைவன் அவன்

பருவுலகு கடந்தோன். (2)


ஈதனைத்தும் அவனது மகிமையே

இதனினும் பெரியோன் புருஷன்

தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்

அழிவற்றது முக்கால் பாகம்

அதுவே ஒளியுலகு. (3)


மேற்சென்றனன் முக்கால் பாகத்துப் புருஷன்

அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும் இங்கு

திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன்

அசையும் அசையாப் பொருளனைத்திலும். (4)


அவனிடத்தினின்று விராட் பிறந்தது

விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக) பிறந்தான் புருஷன்

பிறந்தவன் முன்னும் பின்னுமாய்

புவியெங்கும் நிறைந்தான். (5)


புருஷனே ஆகுதியாக

வேள்வி செய்தனர் தேவர்கள்

வசந்தம் நெய்யாக

கோடை விறகாக

சரத்காலம் அவியுணவாக

ஒரு வேள்வி. (6)


ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்

அவன் மீது நீர் தெளித்தனர்

நேர்வழியினர் ரிஷிகள் கூடி

வேட்டனர் தேவர்கள். (7)


அனைத்தும் எரிந்த அவ்வேள்வி

அதனின்று திரண்டது நெய்கலந்த ஊண்.

உருவாகின

காற்றால் ஆன உயிர்கள்

வனமிருகங்கள்

கிராமத்து விலங்குகள். (8)


அனைத்தும் எரிந்த அவ்வேள்வி

அதனின்று பிறந்தன ரிக்குகள் சாமகீதங்கள்

பிறந்தன சந்தங்கள்

பிறந்தன யஜுர் மந்திரங்கள். (9)


அதனின்று பிறந்தன பரிகள்

இருவரிசைப் பல் மிருகங்கள்

அதனின்று பிறந்தன பசுக்கள்

வெள்ளாடுகள் செம்மறிகள். (10)


புருஷனை வகிர்ந்த போது

கற்பித்தது எவ்வடிவில்?

முகம் எது கை எது?

தொடை எது கால் எது? (11)


பிராமணன் முகமானான்

கைகள் அரசன்

தொடைகள் வைசியன்

பாதங்களில் சூத்திரன் தோன்றினான். (12)


மனத்தினின்று சந்திரன் பிறந்தான்

விழிகளில் கதிரோன்

முகத்தில் இந்திரன் அக்னி

மூச்சில் பிறந்தது காற்று. (13)


கொப்பூழில் உதித்தது விண்வெளி

சிரத்தினின்று விரிந்தது ஆகாயம்

பாதங்களினின்று பூமி

செவிகளினின்று திசைகள்

அவ்வாறே உருவெடுத்தன

உலகங்கள் அனைத்தும். (14)


ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி

மூவேழு சமித்துக்கள் கொண்டு

வேள்வி சமைக்கும் தேவர்கள்

புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர். (15)


வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்

அவையே முதல் தர்மங்கள் ஆயின.

முன்னோர் நேர்வழியினர் தேவர்கள் வாழ்

மேன்மை உலகடைவர்

அந்த (தர்மவழிச் செல்லும்) பெரியோர். (16)

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...