லலிதா நவரத்தின மாலை, அகத்திய மாமுனிவர் அருளியது. இதில் அகத்தியர், அம்பாளை நவரத்தினங்களாக வர்ணித்துப் போற்றுகின்றார். இந்த எளிய தமிழ்ப் பாடல், பக்திச் செறிவும் அருட்பிழிவும் மிக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இணையாகக் கருதப் பெறுகின்றது. சக்தி வாய்ந்த இந்தப் பாடலைப் பாடுவோருக்கும் கேட்போருக்கும் சகல நன்மைகளும் கிட்டும்.
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்
காப்பு
ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம்
பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !
வைரம்
கற்றும் தெளியார் காடேக்கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒலிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறு ததிகினை வாழ்வுடையேன்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர்
தேம்பொழிலாமிது செய்தவலாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால்
மந்திர வேதமயப்பொருள் ஆனால்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
கருதக்கிடையா கலையானவளே
பூணக்கிடையா பொளிவானவளே
புனையக்கிடையா புதுமைதவளே
நாணித்திருநாமம் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்கவொளி கதிரே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
மதுரித பதமே சரணம் சரணம்
ஸுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவேன் அடியவற்குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வறனவா நிதியே சரணம் சரணம்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
போன்றாப்பயனும் குன்றாவரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வா நிலமே
குழல்வாய் மொழியே வருவாய் வருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!
ராக விகாசினி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சனா மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாரிணி
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
வலையோத்தவினை கலையோத்த மனம்
மருளப் பறையா ரொளியோத்தவிதால்
நிலையர்ரோளிஎன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையர்ரசைவர் ரணிபூதிபெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலைத்துவஜன் மகளே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!
இப்பாடலின் பலன்
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புதசக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே!!
No comments:
Post a Comment