Skip to main content

ஆனந்த ராமாயணம்

பெருமாள் துதி

அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து

தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி

கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி 

புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி 


1 . பாலகாண்டம் 


தேவர் குறை தீர்த்திடவே ராமா ராமா

மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா

தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா

புஜபலத்தோடு ஜனித்தாய் ராமா ராமா

கோசலைதன் கர்பத்தில் ராமா ராமா

கூசாமலே நீ பிறந்தாய் ராமா ராமா

தவமுனிக்கு உதவி செய்ய ராமா ராமா

கவனமுடன் பின் சென்றாய் ராமா ராமா

தாடகையை சங்கரித்தாய் ராமா ராமா

பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா

கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் ராமா ராமா

வில் வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா

ஜனகன்வர லாறு கேட்ட ராமா ராமா

தனக்குப்பதில் முனியுரைக்க ராமா ராமா

தனுசைக் கையிலெடுத்தாய் ராமா ராமா

மனதில் கிலேசமுற்றாய் ராமா ராமா

வில்முறிய சீதைக்கண்டு ராமா ராமா

நல்மணஞ் செய்து கொண்டாய் ராமா ராமா

மங்களங்கள் பாடவே ராமா ராமா

தங்கனீர் மிதிலைதனில் ராமா ராமா

பரசுராமர் வில்முறித்தீர் ராமா ராமா

கரசனமா வயோத்தி சென்றீர் ராமா ராமா

சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா

சிறப்பவே அயோத்தி நகர் ராமா ராமா


2. அயோத்தியா காண்டம்


அயோதிக்கரசனாக ராமா ராமா

ஆவதனில் தசரதனும் ராமா ராமா

உந்தனையே வேண்டிக்கொண்டார் ராமா ராமா

சிந்தை களித்திருந்தார் ராமா ராமா

சிற்றன்னை கைகேயியை ராமா ராமா

பற்றில்லாது கூனியுமே ராமா ராமா

பக்குவமாய்த் தான் கலைத்து ராமா ராமா

பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா

உத்திரவு கேள் என்று ராமா ராமா

ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா

தாய் மொழி தவராமலே ராமா ராமா

தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா

தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா

தானடைந்தாய் கானகமும் ராமா ராமா

சீதையுடன் புறப்படவே ராமா ராமா

லக்ஷ்மணர் கூடவந்தார் ராமா ராமா

பக்தரெல்லாம் புலம்பிடவும் ராமா ராமா

பலநீதி சொல்லி தானகன்றாய் ராமா ராமா

கங்கை கரை அடைந்தாய் ராமா ராமா

நங்கை சீதையுடன் ராமா ராமா

ஒடம்விட்ட குகனுடன் ராமா ராமா

உளவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா

சேனையுடன் பரதன் வர ராமா ராமா

சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா

பட்டங்கட்டி அரசு செய்ய ராமா ராமா

பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா


3. ஆரண்ய காண்டம்


அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா

அப்புறம் தண்டகம் சென்றாய் ராமா ராமா

கொடிய விராதகனை ராமா ராமா

மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா

தண்டக வனத்து ரிஷிகள் ராமா ராமா

அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா

பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா

பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா

சூர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா

தம்பியால் பங்கம் அடைந்தாள் ராமா ராமா

வெம்பியமனம் வாடினாள் ராமா ராமா

கரதூஷ்ணாதியரை ராமா ராமா

வரைமுறை இட்டாள் ராமா ராமா

கோதண்டத்துக்குச் சிறையாக ராமா ராமா

கூகுரலிட்டோடி வந்தார் ராமா ராமா

சூர்பனகை தூண்டுதலால் ராமா ராமா

ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா

மாரீசனை மானாகவர ராமா ராமா

மருமகனும் வேண்டிக்கொண்டான் ராமா ராமா

மாரீச்சன் மறுத்ததற்கு ராமா ராமா

தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா

சீதை முன்னே மான் வரவே ராமா ராமா

அதைப்பிடிக்க பின் சென்றாய் ராமா ராமா

அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா

நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா

சிந்தை கலங்கிடவே ராமா ராமா

சீதை வருந்தினாளே ராமா ராமா

ராவண சந்நியாசி வந்தான் ராமா ராமா

நிலத்தொட சீதையை ராமா ராமா

தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா

தெரிந்து எதிர்க்க ஜடாயுவும் ராமா ராமா

சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா

சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா

தேடி வரும் வழியில் ராமா ராமா

தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா

நல்வரமும் தந்தளித்தாய் ராமா ராமா

செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா

சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா

சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா

நல்வரமும் தான் அளித்தாய் ராமா ராமா


4. கிஷ்கிந்தா காண்டம்


ஹனுமான் எதிரில் வர ராமா ராமா

அவரால் சுக்ரீவனை ராமா ராமா

நேசங்கொண்டு யோசனைகள் ராமா ராமா

நீனிலத்தில் செய்துகொண்டீர் ராமா ராமா

சீதையின் நகைகளை ராமா ராமா

கண்டுமனங் கசிந்தீர் ராமா ராமா

சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா

துளைத்து விட்டீர் மாமரத்தை ராமா ராமா

வாலியை வதைத்து அவனை ராமா ராமா

வைகுந்தம் போக செய்தீர் ராமா ராமா

சீதையைத் தேடும்படி ராமா ராமா

சேதிசொல்லி விடுத்தீர் ராமா ராமா

நான்கு திசைகளிலும் ராமா ராமா

நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா

காடுமலை வனமெல்லாம் ராமா ராமா

கண்கூடாய்த் தேடுகிறார் ராமா ராமா


5. சுந்தர காண்டம்


சீதை இருப்பிடத்தை ராமா ராமா

சம்பாதி உரைத்திடுவே ராமா ராமா

மயேந்திரம் ஏறியே ராமா ராமா

பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா

இலங்கணி அனுமானும் ராமா ராமா

கலங்கிட வடித்தானே ராமா ராமா

சீதையைத் தேடிக் கண்டாளே ராமா ராமா

சேதியடை யாளந்தன் ராமா ராமா

அசோகவன மழித்தான் ராமா ராமா

அசுரர்களை தான்வதைத்தான் ராமா ராமா

இலங்கைக்கு கொள்ளிவைத்து ராமா ராமா

கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா

சீதை தந்த சூடாமணி ராமா ராமா

அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா

இந்திரஜித்தின் அஸ்திரத்தால் ராமா ராமா

சந்திக்க அனுமானும் ராமா ராமா

ராவணனைக் கண்டு அனுமானும் ராமா ராமா

பாலாமைக்கும் புத்தி சொன்னான் ராமா ராமா

விதியை வெல்வாரில்லை ராமா ராமா

மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா


6. யுத்த காண்டம்


சேதுவை அணைகட்ட ராமா ராமா

சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா

சரணமடைந்த விபீஷணனுக்கு ராமா ராமா

சிரஞ்சீவி பதட்டம் தந்தாய் ராமா ராமா

ராவணாதி யசுரரைக் கொன்றாய் ராமா ராமா

ராக்ஷதர் வேரற்றுப்போக ராமா ராமா

சீதையை சிறைநீக்கு விட்டாய் ராமா ராமா

விபீஷணனுக்கு முடிதரித்தாய் ராமா ராமா

அயோத்திக்கு திரும்பிவர ராமா ராமா

சேதுவிற்  குரைசெயதாய் ராமா ராமா

புஷ்பக விமானத்தில் ராமா ராமா

புண்ணிய முனிவரிடம் ராமா ராமா

போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா

போகவிடுத் தனுமானை ராமா ராமா

பரனுயிரை காப்பாற்றிய ராமா ராமா

அயோத்தி நகர் வந்து சேர்ந்த ராமா ராமா

மகுடாபிஷேகங் கொண்ட ராமா ராமா

மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா

குவலயத்தை ரட்சிக்கும் ராமா ராமா

குறைகளொன்றும் வாராது ராமா ராமா


ஆனந்த ராமாயணம் தியானம் சம்பூர்ணம் 


Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...