Skip to main content

புரந்தர தாசரின் ஒரு பாடல்

நரஜன்மம் வந்திருக்கிறது நா ஒன்றும் இருக்கிறது
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா
கிருஷ்ணா என்றால் அதுவே சகல கஷ்டங்களுக்கும் பரிஹாரம்
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா

நரஜன்ம ப³ந்தா³க³ நாலிகே³ இருவாக³ க்ருஷ்ண
எனபா³ரதே³
க்ருஷ்ண எந்த³ரே ஸகல கஷ்டவு பரிஹார க்ருஷ்ண
எனபா³ரதே³

மல்லாந்திருந்து பின் மெய்முறித்து எழுந்தவுடனே
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா
சும்மாவேனும் மனையினுள்ளே நடந்து கொண்டிருக்கையிலே
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா

மலகி³த்³து³ மைமுரிது³ ஏளுத்தலொம்மே க்ருஷ்ண எனபா³ரதே³
ஸுளிதா³டு³த மனெயொளகா³த³ருவம்மே க்ருஷ்ண எனபா³ரதே³

கந்தத்தைப் பூசி தாம்பூலத்தை மெல்லும்போது
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா
மெத்தான திண்டிலே குந்தியிருக்கும்போது
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா

க³ந்த⁴வ பூஸி தாம்பூ³லவ மெலுவாக³ க்ருஷ்ண
எனபா³ரதே³
செந்து³ள்ள ஹாஸிகே³யொளு குளிதொம்மே க்ருஷ்ண எனபா³ரதே³

மைந்தனை அணைத்து முத்தாடும்போது
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா
மந்தகாமினி மனையாளுடன் சரசமாடும்போது
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா

கந்த³ன பி³கி³த³ப்பி முத்³தா³டு³தலொம்மே க்ருஷ்ண
எனபா³ரதே³
மந்த³கா³மினியோளு ஸரஸவாடு³தலொம்மே க்ருஷ்ண எனபா³ரதே³

துயரக் கூட்டங்களையெல்லாம் உடனே தொலைத்திட
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா
கருடகமனன் நமது புரந்தர விட்டலனை
கிருஷ்ணா என்று சொல்லக் கூடாதா

து³ரித ராஶிக³ளன்னு தரிது³ பி³ஸாடு³வா க்ருஷ்ண
எனபா³ரதே³
க³ருட³க³மன நம்ம புரந்த³ர விட்²ட²லன்ன க்ருஷ்ண
எனபா³ரதே³

- புரந்தர தாசரின் ஒரு பாடல்

இன்று ஸ்ரீ புரந்தர தாசர் ஆராதனை நாள்.

கன்னட ஹரிதாசர்களில் முதலானவர் இந்த மகான். கர்நாடக சங்கீத பிதாமர் என்று அழைக்கப் படுபவர்.

இந்தப் பாடலை எம்.பாலமுரளி கிருஷ்ணா தனக்கே உரிய பாணியில் அருமையாக நிதானமாகப் பாடியிருப்பதை இங்கு கேட்கலாம் - https://youtu.be/WCMoI6sTZT8?t=451

Comments

Popular posts from this blog

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் - தமிழ் மொழிப்பெயர்ப்பு

வெண்மை உடை தரித்தவரும், எங்குமே வியாபித்துள்ளவரும், நிலவு போன்ற ஒளியானவரும், நான்கு கரங்களுடன், மகிழ்வு ததும்பும், திருமுகம் கொண்டவரை, சகல சிரமங்களும் நீங்கிட, இடையறாத நினைவு கொள்வோம். வசிஷ்டிரின் கொள்ளுப் பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் குமாரரும், சுகருடைய தந்தையும், முனிவருமான வியாசரை வணங்குகின்றேன்.  விஷ்ணு உருவான வியசராகவும், வியாச வடிவான விஷ்ணுவாகவும், வேதத்தின் சாரமான, அவருக்கு வணக்கம்.  வசிஷ்டரின் குடியில் பிறந்தவருக்கு முறுபடி வணக்கம். வேறுவாடே இல்லாதவரும், தூய்மையானவரும், யாவற்றையும் வெற்றி கண்டிடும், பரமாத்வான விஷ்ணுவுக்கு வணக்கம்.  எவரை எண்ணியதுமே, சம்சார கடலிருந்து, ஒருவன் விடுபட முடியுமோ, அந்த சகல வல்லமை நிறைந்த விஷ்ணுவுக்கு வணக்கம். அகிலத்தின் ஒன்றேயான தெய்வமும், புகழிடம் எது எனவும், எவனை வணங்கி, மானிடர் உய்வு அடைவர் எனவும், எந்தக் கொடையானது, சகல தர்மங்களிலுமே, உயர்வானதாக உணரப்படுகிறது எனவும், உயிரினம் எதனை ஜெபித்து, பிறவிக்கட்டிலிருந்து விடுபடமுடியும் எனவும், யுதிஷ்டிரர் வினவியதுமே, ஸ்ரீபீஷ்மரும் கூறினாறே வையகத்தை காப்பவரும், தேவ தேவரு...

ஸ்ரீ குருராஜ நாமாவளி

ஸ்ரீ குருராஜ நாமாவளி ஜெய ஜெய ஜெய வீவ ராகவேந்திரா பவ பயநாசாக ராகவேந்திரா (2) துங்கா தீரத ராகவேந்திரா மங்கள மஹிமனே ராகவேந்திரா அங்கர ஹிதனிகே ராகவேந்திரா திம்மண்ண சுதனிகே ராகவேந்திரா கண்களில்லாதவரிகெ ராகவேந்திரா பொம்ம மாருதிப்பிரிய ராகவேந்திரா வேங்கட நாமக ராகவேந்திரா ஸங்கட ஹாரக ராகவேந்திரா (ஜெய...) வீணா பண்டித ராகவேந்திரா கான விஷாரத ராகவேந்திரா ஸரஸ்வதி பதி ராகவேந்திரா ஸரஸ்வதி வித்யா ராகவேந்திரா கும்பகோண வாஸா ராகவேந்திரா ஸீதீந்த்ர சிஷ்யா ராகவேந்திரா பரிமள பண்டித ராகவேந்திரா பாஷ்கரார குரு ராகவேந்திரா (ஜெய..) சிஷ்யர வித்யகே ராகவேந்திரா ஆயாச திம்பரெ ராகவேந்திரா கந்தவ தெகெயென ராகவேந்திரா அக்னி சூக்ததிம் ராகவேந்திரா விப்ரரு லேபிசே ராகவேந்திரா க்ஷிப்ரதி மை உறி ராகவேந்திரா சரணு ஹொகலு ராகவேந்திரா வருண சூக்ததிம் ராகவேந்திரா (ஜெய..) சந்தன வாயிது ராகவேந்திரா சுதனிகெ முஞ்சியு ராகவேந்திரா சண்யாசி யாகலு ராகவேந்திரா சாரதே ஆக்ஞெயு ராகவேந்திரா ஆஸ்ரம தரிசித ராகவேந்திரா பிசாக்ஷியாகி சதி ராகவேந்திரா தீர்த்வ ப்ரோக்ஷிஸே ராகவேந்திரா மோக்ஷவ கைசித ராகவேந்திரா சதுஷஷ்டி கலையி...

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...