Thursday, September 7, 2023

துவாதச ஸ்தோத்ரம்

 வந்தே வந்தியம் சதானந்தம் வாசுதேவம் நிராஜனம் |

இந்திராபதிமத்யாதி வரதேச வரப்ரதம் || 1||


நமாமி நிகிலாதிஷா கிரிடாக்ரிஷ்டாபிதாவத் |

ஹத்தம ஷமநேர்கபாம் ஶ்ரீபதே பாதபங்கஜம் || 2 ||


ஜம்புனதாம்பரதரம் நிதம்பம் சிந்தியமிஷிதுஹ் |

ஸ்வர்ணமஞிரஸம்விதம் ஆரூடம் ஜகதம்பய || 3 ||


உதாரம் சிந்தியம் இஷஸ்ய தனுத்வேபி அகிலம்பரம் |

வலித்ரயங்கிதம் நித்யம் ஆரூடம் ஶ்ரீயைகயா || 4 ||


ஸ்மரணியமுரோ விஷ்ணோஹ் இந்திராவசமுத்தமைஹ் |

அனந்தம் அந்தவாதிவ பூஜயோரந்தரங்கதஹ் || 5 ||


ஶங்கசக்ரகதாபத்மதரஶ்ச்-இந்த்யா ஹரேர்பூஜா |

பினாவ்ரித்தா ஜகத்ராக்ஷா கேவலோத்யோகினோநிஷம் || 6 ||


சந்ததம் சிந்தயேத்காந்தம் பஸ்வத்கௌஸ்துபபாஷகம் |

வைகுந்தஸ்யாகிலா வேதா உத்கிரியந்தேநிஷம் யதஹ் || 7 ||


ஸ்மரேதா யாமினிநாத ஸஹஸ்ரமிதகந்திமத் |

பவதாபாபநோதித்யம் ஶ்ரீபதே முகபங்கஜம் || 8 ||


பூர்ணாநந்யஸுகோத்பாஸிம் அந்தஸ்மிதமாதிஷிதுஹ் |

கோவிந்தஸ்ய ஸதா சிந்தியம் நித்யானந்தபாதப்ரதம் || 9 ||


ஸ்மராமி பவஸந்தப ஹனிதாம்ரிதசாகரம் |

பூர்ணாநந்தஸ்ய ராமஸ்ய சாணுரகவலோகனம் || 10 ||


த்யாயேதஜஸ்ரமிஷஸ்ய பத்மஜாதிப்ரதிக்ஷிதம் |

ப்ருபங்கம் பரமேஷ்த்த்யாதி பததாயி விமுக்திதம் || 11 ||


சந்ததம் சிந்தயேனாந்தம் அந்தகாலே விசேஷதஹ் |

நைவோதபுஹ் க்ரிணந்தோந்தம் யத்குணானாம் அஜாதயஹ் || 12 ||


https://youtu.be/kbs26gRbZyw?si=Mcj7AZEd6ZAoJGI9

Thursday, May 25, 2023

திருவேளைக்காரன் வகுப்பு

திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு - திருவேளைக்காரன் வகுப்பு


ஆன பய பத்தி வழிபாடு பெறு முத்தி

அதுவாக நிகழ் பக்த ஜனவாரக்காரனும் 


ஆரம் அது உரித்த கனி காரணம் முதற்று அமைய

நாருடன் உணக்கைபரி தீமைக்காரனும் 


ஆகமம் விளைத்த கில லோகமு நொடிப் பளவில்

ஆசையொடு சுற்றுமதி வேகக்காரனும் 


ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிய

அநுபூதியடை வித்ததொரு பார்வைக்காரனும் 


ஆடலைவு பட்டமரர் நாடது பிழைக்க

அமராவதி புரக்குமடல் ஆண்மைக்காரனும் 


ஆடகவி சித்ரகன கோபுர முகப்பில்

அருணாபுரியில் நிற்கும் அடையாளக்காரனும் 


ஆயிர முகத்து நதி பாலனும் அத்தடிமை

யானவர் தொடுத்த கவி மாலைக்காரனும் 


ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசு

மாதிமுடி வற்ற திருநாமக்காரனும் 


யான் எனதெனச் சருவும் ஈன சமயத்தவரும்

யாரும் உணர்தற்கு அரிய நேர்மைக்காரனும் 


யாது நிலை யற்றலையும் ஏழு பிறவிக் கடலை

ஏறவிடு நற்கருணை யோடக்காரனும் 


ஏரகம் இடைக்கழிசி இராமலை திருப்பழநி

ஏரணி செருத்தணியில் வாசக்காரனும் 


ஏழையின் இரட்டை வினை யாயதொருடற் 

சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும் 


யாமளை மணக்கும் அகசாமளை மணிக்குயிலை

யாயென அழைத்துருகு நேயக்காரனும் 


ஏதமற நிச்சய மனோலய விளக்கொளியும்

யாக முனிவர்க்குரிய காவற்காரனும் 


ஈரிரு மருப்புடைய சோனை மதவெற்பிவரும்

யானை அளவிற்றுவளும் ஆசைக்காரனும் 


ஏடவிழ் கடப்பமலர் கூதள முடிக்கும்

இளையோனும் அறிவிற் பெரிய மேன்மைக்காரனும் 


வானவர் பொருட்டு மகவானது பொருட்டுமலர்

வாவியில் உதித்தமுக மாயக்காரனும் 


வாரண பதிக்கு உதவு நாரணனு உவக்கு

மருமானும் அயனைக் கறுவு கோபக்காரனும் 


வாழியென நித்த மறவாது பரவிற் சரண

வாரிசம் அளிக்கும் உபகாரக்காரனும் 


மாடமதில் சுற்றிய திரிகூடகிரியிற் கதிர்செய்

மாநகரியிற் கடவுள் ஆயக்காரனும் 


வாளெயிற துற்ற பகுவாய் தொறு நெருப்புமிழும்

வாசுகி எடுத்து உதறும் வாசிக்காரனும் 


வாளகிரியைத் தனது தாளிலிடியப்பொருது

வாகை புனை குக்குடப தாகைக்காரனும் 


மாசிலு உயிருக்கு உயிர் மாசில் உணர்வுக்கு குணர்வும்

வானில் அணுவுக்கு அணுவு உபாயக்காரனும் 


வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்படம

காடவியில் நிற்பத ஓர் சகாயக்காரனும் 


மீனவனு மிக்க புலவோரு முறை பொற் பலகை

மீது அமர் தமிழ் திரவிய விநோதக்காரனும் 


வேரி மது மத்த மதி தாதகி கிடுக்கைபுனை

வேணியர் துதிப்பத ஒரு கேள்விக்காரனும் 


வேல துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டு உருவ

வேலை உறவிட்ட தனி வேலைக்காரனும் 


மீனுலவு கிர்த்திகைக்கு மாரனு நினைக்கும் அவர்

வீடுபெற வைத்தருள் உதாரக்காரனும் 


மேனையரி வைக்குரிய பேரனும் மதித்த திறல்

வீரனும் அரக்கர் குல சூறைக்காரனும் 


வேதியர் வெறுக்கையும் அநாதிபர வஸ்துவும்

விசாகனும் விகற்ப வெகு ரூபக்காரனும் 


வேடுவர் புனத்தில் உருமாறி முனி சொற்ப்படி

வியாகுல மனத்தின் ஒடு போம் விற்காரனும் 


மேவிய புனத்தி தணில் ஓவியம் எனத் திகழு

மேதகு குறத்தி திரு வேளைக் காரனே. 

Thursday, February 16, 2023

மைத்ரீம் பஜத

காஞ்சி பரமாச்சாரியார் எழுதி எம்.எஸ் அவர்கள் ஐநா சபையில் பாடியது


மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம்
ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத

யுத்தம் த்யஜத ஸ்பர்த்தாம் த்யஜத
த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமணம்

ஜனனீ ப்ருத்வீ காமதுகாஸ்தே
ஜனகோ தேவ: சகல தயாளு

தாம்யத தத்த தயத்வம் ஜனதா
ச்ரேயோ பூயா சகல ஜனானாம்

தமிழில்

அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!

போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!

அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!

அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!


பொருள்:


பணிவு, அன்பு ஆகியவற்றைக் கொண்ட சேவையை உலக மக்கள் அனைவரும் செய்யுங்கள். அச்சேவையே அனைவர் இதயத்தையும் வெல்ல உதவும். தன்னைப் போலவே அனைவரையும் எண்ணிப் பாருங்கள். போரினைக் கைவிடுங்கள். அவசியமற்ற அதிகார போட்டியினையும் கை விட்டுவிடுங்கள். பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்கிரமிக்கும் அக்கிரமச் செயலைக் கை விட்டு விடுங்கள். பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றக் காத்துக்கொண்டிருக்கிறாள்.

மக்களின் தந்தையான இறைவனோ எல்லோர் மேலும் மிகவும் கருணை கொண்டவனாதலால் தன்னடக்கம் கொள்ளுங்கள். எல்லோருக்கும் உங்கள் செல்வத்தை தானம் கொடுங்கள். எல்லோரிடமும் கருணையோடு இருங்கள் மக்களே. உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எந்தக் குறையும் இன்றி இருக்கட்டும்!

Thursday, December 1, 2022

தோடகாஷ்டகம் – Thotakashtakam with Meaning

copy from https://thapas.wordpress.com/2018/10/09/தோடகாஷ்டகம்-thotakashtakam-with-meaning/

ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்யர் சிருங்ககிரி மடாலயத்தில் எழுந்தருளி, யாவருக்கும் அனுகிரகஞ் செய்து கொண்டிருக்கும்போது, குரு பணிவிடைகளில் மிகப் பக்தியுடையவரான “ஆனந்தகிரி” என்னும் மாணாக்கர், இச்சங்கர பகவத்பாதாச்சாரியர் சந்நிதியை அடைந்து, உடம்பை நிழல்பற்றிச் செல்வதுபோல ஆசாரிய சுவாமிகளின் கருத்தை யுணர்ந்து ஏவாமலே சிறந்த தொண்டுகளை செய்து வந்தனர்.

ஒருநாள் மாணாக்கரெல்லாரையும் வைத்துக்கொண்டு வேதாந்த பாடம் ஆரம்பிக்கும் சமயத்தில், ஆனந்தகிரி என்னும் மாணாக்கர், ஆசிரியரின் காஷாய வஸ்திரத்தைச் சுத்தம்செய்து வர ஆற்றுக்குப் போயிருந்தார். அப்போது, மற்ற மாணாக்கர்கள், பாடத்தை ஆரம்பிக்கும்படி பிரார்த்தித்து நிற்கையில், “ஆனந்தகிரி” வரட்டும், என்று ஆசாரியரது கட்டளை யுண்டாயிற்று.

அப்போது, பத்மபாதர் வணங்கி, சுவாமி! அவர் செய்யுந் திருப்பணி, செய்துகொண்டே இருக்கின்றனர்; அவர் வராமை எங்கள் பாடத்திற்குத் தடையாகலாமா? என்று வினாவினர்.

அதற்கு ஆசாரிய சுவாமிகள், பத்மபாதருக்கு அச்செருக்குத் தொலையும்பொருட்டுத், தமது அன்பராகிய ஆனந்தகிரிக்கு, வேத சாஸ்திரங்களாகிய பதினான்கு வித்தையும் வரும்படி மனதினாற் கருணையோடு கிருபை செய்தனர். உடனே ஆனந்தகிரிக்கு எல்லா வேத சாஸ்திரங்களும் வந்துவிட்டன. பின்னர், ஆனந்தகிரி ஆசாரிய சுவாமிகளிடம்வந்து வணங்கி நின்று தோடக சந்தத்தால் குருஸ்துதி செய்தனர்.

இதுவே தோடகாஷ்டகம் என்றாயிற்று.


Totakacharya

One of the chief disciples of Sri Adi Shankara composed an octad of verses in praise of the Master. The metre he has used in this composition is the difficult but beautiful totaka. Hence he was himself given the name Totakáchárya. Every word of this exquisite hymn bespeaks the utter devotion of its author to Sañkara. Sañkara, the Guru, is all to him. There is nothing equal to the Guru; nothing superior to him. The Guru is the dispeller of the darkness of ignorance. There can be no greater good than the removal of ignorance. The spirit of devotion of the disciple is best expressed in the soul-moving burden of this song :

Be Thou my refuge, O Master, Shañkara (bhava Sañkara deshika me sharanam)!


1. विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत्कथितार्थनिधे |

हृदयेकलयेविमलंचरणं भवशंकरदेशिकमेशरणम् ||१||


விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே, மஹிதோப நிஷத் கதிதார்த நிதே |

ஹ்ருதயே கலயே விமலம் சரணம், பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 1.


viditákhilashastrasudhájaladhe mahitopanisatkathitárthanidhe

hrudaye kalaye vimalam charanam bhava Shañkara deshika me sharanam.(1)

அறியப்பட்ட எல்லா சாஸ்திரங்களுக்கும் திருப்பாற்கடல் போன்றவரே! மேன்மைபொருந்திய உபநிஷத்துக்களாற் பிரதிபாதிக்கப்பட்ட அர்த்தங்களுக்கு இருப்பிடமானவரே! தேவரீருடைய பரிசுத்தமான திருவடிகளை இருதயத்தில் தியானிக்கின்றேன். சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


O Thou, the knower of all the milk-Ocean of Scriptures! The expounder of the topics of the great Upanisadic treasure-trove! On Thy faultless feet I meditate in my heart, Be Thou my refuge O Master, Sankara!


2. करुणावरुणालयपालयमां भवसागरदुःखविदूनहृदम् |

रचयाखिलदर्शनतत्त्वविदं भवशंकरदेशिकमेशरणम् ||२|


கருணா வருணா லயபா லயமாம், பவஸாகர து: க்க விதூந ஹ்ருதம் |

ரசயாகில தர்ஶந தத்வ விதம், பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 2.


karunávarunalaya pálaya mám bhavaságaradukhavidünahrudam

rachayákhiladarshanattattvavidam bhava Shañkara deshika me Sharaïam.(2)


O the Ocean of compassion! Save me whose heart is tormented by the misery of the sea of birth! Make me understand the truths of all the schools of philosophy!


Be Thou my refuge, O Master, Sañkara.


அருள்நிறைந்த ஆலயமே! ஜனன மரண சமுத்திரத்தில் துக்கத்தால் அலைகின்ற சித்தத்தையுடைய என்னைக் காப்பாற்றியருள்வீராக. சகல சாஸ்திரங்களின் உண்மையை உணர்பவனாக என்னைச் செய்தருவீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


3. भवताजनतासुहिताभविता निजबोधविचारणचारुमते |

कलयेश्वरजीवविवेकविदं भवशंकरदेशिकमेशरणम् ||३||


பவதா ஜநதா ஸுஹிதா பவிதா, நிஜபோத விசாரணசாருமதே |

கலயேஶ்வர ஜீவ விவேக விதம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 3.


bhavatá janatá suhitá bhavitá nijabodhavichárana chárumate

kalayeshvarajivavivekavidam bhava Shañkara deshika me sharanam.(3)


தங்களால் ஜனத் திரளானது சுகமுள்ளதாய்ச் செய்யப்பட்டது.

ஆத்மஞானத்தை விசாரிப்பதில் அழகான மதியுடையவரே!


ஜீவேசுவரர்களை விசாரித்தறியும் ஞானமுடையவனாக என்னைச் செய்தருள்வீராக.

சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!

By thee the masses have been made happy, O Thou who hast a noble intellect, skilled in the inquiry into self-knowledge! Enable me to understand the wisdom relating to God and the soul. Be Thou my refuge, O master, Sañkara.


4. भवएवभवानितिमेनितरां समजायतचेतसिकौतुकिता |

ममवारयमोहमहाजलधिं भवशंकरदेशिकमेशरणं ||४||


பவஏவபவா நிதிமே நிதராம், ஸமஜாயத சேதஸி கௌதுகிதா |

மமவாரய மோஹ மஹாஜலதிம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம்


bhava eva bhavániti me nitarám samajáyata chetasi kautukitá

mama váraya mohamahájaladhim bhava shankara deshika me sharanam.(4)


Knowing that Thou art verily the Supreme Lord, there arises overwhelming bliss in my heart. Protect me from the vast ocean of delusion.Be Thou my refuge, O Master, Sankara.


தேவரீரே பரமேசுவரரென்று என்மனதில் ஆனந்தமுண்டாகின்றது. என்னுடைய மோகமாகிய பெருங்கடலை நீக்கியருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


सुकृते | अधिकृतेबहुधाभवतो भवितासमदर्शनलालसता |

अतिदीनमिमंपरिपालयमां भवशंकरदेशिकमेशरणम् ||५||


ஸுக்ருதே திக்ருதே பஹுதா பவதோ ,பவிதா ஸமதர்சந லாலஸதா |

அதிதீநமிமம் பரிபாலய மாம் , பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 5.


sukrute dhikrute bahudhá bhavato bhavitá samadarsanalalasata

atidinamimam paripálaya mám bhava Shañkara deshika me sharanam.(5)


ஓ புண்ணியமூர்த்தியே! உலகங்ளை ஆள்பவரே ! தேவரீரிடமிருந்து சமதிருஷ்டியாகிய சந்தோஷமானது பல பிரகாரமாக அனைவருக்கும் உண்டாயிற்று. மிகத் துக்கியாகிய இந்த என்னைக் காப்பாற்றி யருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


Desire for the insight into unity through Thee will spring only when virtuous deeds are performed in abundance and in various directions. Protect this extremely helpless person. Be Thou my refuge, O Master, Sañkara.


6. जगतीमवितुंकलिताकृतयो विचरन्तिमहामहसश्छलतः |

अहिमांशुरिवात्रविभासिगुरो भवशंकरदेशिकमेशरणम् ||६||


ஜகதீ மவிதும் கலிதா க்ருதயோ விசரந்தி மஹா மஹஸஶ்ச்சலத: |

அஹிமாம் ஶுரிவாத்ர விபாஸி குரோ பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 6.


ஓ குருமூர்த்தியே! உலகங்களை இரட்சித்தருளத் தேவரீருடைய மஹாமஹிமை வாய்ந்த திருவிளையாடல்கள் உன்னதமாய் விளங்குகின்றன. தேவரீரும் இங்கு சூரியனுக்குச் சமானமாக விளங்குகின்றீர். சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


jagatimavitum kalitákrutayo vicharanti mahamahasashchalatah

abhimámsurivatra vibhási guro bhava Shañkara deshika me sharanam.(6)


O Teacher! For saving the world the great assume various forms and wander in disguise. Of them, Thou shinest like the Sun.

Be Thou my refuge, O Master, Sañkara.


7. गुरुपुंगवपुंगवकेतनते समतामयतांनहिको | अपिसुधीः |

शरणागतवत्सलतत्त्वनिधे भवशंकरदेशिकमेशरणम् ||७||


குருபுங்கவ புங்கவ கேதந தே ஸமதா மயதாம் நஹி கோபி-ஸுதீ: |

ஶரணாகத வஸ்தல தத்வநிதே பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 7.


gurupuñgava puñgava ketana te samatámayatám nahi ko pi sudhi:

Sharanágatavatsala tattvanidhe bhava Shañkara deshika me sharanam.(7)


தங்களிடம் அடைக்கலம் புகுந்தவரிடத்தில் அன்புடையவரே! உண்மைப்பொருளுக்கு இடமானவரே! ஓ குரவர் சிகாமணியே! மேலோருக்கும் மேலாயிருப்பவரே! தேவரீருக்குச் சமானமாம் தன்மையை, விரிவாகத்தெளிந்த எந்த அறிஞனும் அடைந்ததில்லை. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


O the best of Teachers! The Supreme Lord having the bull as banner! None of the wise is equal to Thee! Thou who art compassionate to those who have taken refuge! The Treasure-trove of truth!

Be Thou my refuge, O Master Sankara.


8. विदितानमयाविशदैककला नचकिंचनकाञ्चनमस्तिगुरो |

द्रुतमेवविधेहिकृपांसहजां भवशंकरदेशिकमेशरणम् ||८||


விதிதா நமயா விஶதைககலா ந ச கிஞ்சந காஞ்சந மஸ்தி குரோ |

த்ருதமேவ விதேஹிக்ருபாம் ஸஹஜாம் பவ ஶங்கர தேஶிகமே ஶரணம் || 8.


viditá na mayá vishadaikakalá na cha kimchana kánchanamasti guro

drutameva vidhehi krupám sahajám bhava Shañkara deshika me sharanam.(8)

Not even a single branch of knowledge has been understood by me correctly. Not even the least wealth do I possess, O Teacher. Bestow on me quickly Thy natural grace. Be thou my refuge, O Master Sañkara.

ஓ குருமூர்த்தியே! ஒரு சாஸ்திரமேனும் தெளிவுடையதாய் என்னால் அறியப்படவுமில்லை; சிறிது பொன்னுமில்லை; தங்களுடன் பிறந்த கருணையைச் சீக்கிரம் தந்தருள்வீராக. சுகமளிக்கும் ஆசிரியரே! எனக்குப் புகலிடம் ஆவீராக!


தோடகாஷ்டகம் தமிழ் உரை முற்றும் 


Totakashtakam


விதிதா-கில சாஸ்த்ர ஸுதா ஜலதே

மஹிதோ (உ)பனிஷத்-கதிதார்த (த)னிதே

ஹ்றுதயே கலயே விமலம் சரணம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 1


கருணா வருணாலய பாலய மாம்

பவஸாகர துஃக விதூன ஹ்றுதம்

ரசயாகில தர்ஶன தத்த்வ-விதம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 2


பவதா ஜனதா ஸுஹிதா பவிதா

நிஜபோத விசாரண சாருமதே

கலயேஶ்வர ஜீவ விவேக விதம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 3


பவ எவ பவானிதி மெ னிதராம்

ஸமஜாயத சேதஸி கௌதுகிதா

மம வாரய மோஹ மஹாஜலதிம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 4


ஸுக்றுதே‌ உதிக்றுதே பஹுதா பவதோ

பவிதா ஸமதர்ஶன லாலஸதா

அதி தீனமிமம் பரிபாலய மாம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 5


ஜகதீமவிதும் கலிதாக்றுதயோ

விசரன்தி மஹாமாஹ ஸச்சலதஃ

அஹிமாம்ஶுரிவாத்ர விபாஸி குரோ

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 6


குருபுங்கவ புங்கவகேதன தே

ஸமதாமயதாம் ன ஹி கோ‌உபி ஸுதீஃ

ஶரணாகத வத்ஸல தத்த்வனிதே

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 7


விதிதா ன மயா விஶதைக கலா

ன ச கிஞ்சன காஞ்சனமஸ்தி குரோ

த்றுதமேவ விதேஹி க்றுபாம் ஸஹஜாம்

பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் - 8



ஸ்ரீ சங்கரரின் மேல், ஸ்ரீ தோடக ஆச்சாரியாள் எனும் சீடர் 'தோடக' விருத்தத்தில் 8 பாடல்கள், (அஷ்டகம்) அருளிச் செய்தார். 1984-ஆம் வருடம், ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ மகாஸ்சுவாமிகளை பாரதிவை ராமச்சந்திரன் தரிசித்தபொழுது, வடமொழியில் உள்ள தோடகாஷ்டகத்தைத் தமிழில் மொழி பெயர்த்து பாடச் சொன்னார்.


தோடகாஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-


சங்கர குருவே சரணம்... சரணம்

உயரிய சாஸ்திர அமுதக் கடலே

உபநிடம் கூறும் உண்மைப் பொருளே!

சங்கர குருவே சரணம், சரணம்!


கருணை வடிவே! கடல்போல் வாழ்வில்

கவலைகள் தீர்த்தே காத்திட வேண்டும்!

காவியம், சாஸ்திரம் உணர்த்திட வேண்டும்

சங்கர குருவே சரணம், சரணம்!


உம்முடைப் பிறப்பால் உலகம் உய்ந்தது,

உண்மை, ஞானம் உணர்த்திட வைத்தது!

உயரிய ஆத்தும அறிவினை அருள்வாய்

சங்கர குருவே சரணம், சரணம்!


மங்களம் தந்திடும் சங்கரர் நாமம்

மனதில் மகிழ்வினை உடனே தந்திடும்!

மாளா ஆசைகள் நீக்கிடச் செய்வாய்

சங்கர குருவே சரணம், சரணம்!


நற்செயல் பற்பல செய்திட அருள்வாய்

நல்லவர் பார்வை ஒன்றிடத் செய்வாய்!

நாடிடும் இந்த எளியனைக் காப்பாய்

சங்கர குருவே சரணம் சரணம்!


உலகைக் காத்திடும் உத்தமர்கள் பலர்

உலகில் நன்மையை வேண்டியே நிற்பர்!

ஒளிர்ந்திடும் கதிரவன் ஒளியினைப் போலாம்

சங்கர குருவே சரணம் சரணம்!


தவமுனி பலரினிலும் மேலாம் குருவே

தரணியில் உனைப்போல் ஞானியும் உண்டோ?

தாளினைப் பணிபவர் தாபங்கள் தீர்ப்பாய்

சங்கர குருவே சரணம் சரணம்!


கலைகள் எவையும் யான் அறியனே!

குருவினை வணங்கும் வகை தெரியேனே!

கடிதென வந்தே காத்திட வேண்டும்

சங்கர குருவே சரணம் சரணம்!

Wednesday, May 18, 2022

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

 திருச்சிற்றம்பலம்

அ௫ளியவர் : சுந்தரர்

திருமுறை : ஏழாம் திருமுறை

பண் : நட்டராகம்

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : குருகாவூர் வெள்ளடை


இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்

முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1


ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்

காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்

மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2


பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்

ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே

காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்

வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3


வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை

அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்

மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4


வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே

அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்

விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5


பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்

மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே

விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.6


போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை

நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்

சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட

வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.7


மலக்கில்நின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்

சலச்சல மிடுக்குடைய தருமனார் தமர்என்னைக்

கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே

விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.8


படுவிப்பாய் உனக்கேஆள் பலரையும் பணியாமே

தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே

கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே

விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.9


வளங்கனி பொழில்மல்கு வயல் அணிந் தழகாய

விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை

இளங்கிளை ஆரூரன் வனப்பகையவள் அப்பன்

உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 7.29.10


– திருச்சிற்றம்பலம் –

ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

லலிதா நவரத்தின மாலை, அகத்திய மாமுனிவர் அருளியது. இதில் அகத்தியர், அம்பாளை நவரத்தினங்களாக வர்ணித்துப் போற்றுகின்றார். இந்த எளிய தமிழ்ப் பாடல், பக்திச் செறிவும் அருட்பிழிவும் மிக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இணையாகக் கருதப் பெறுகின்றது. சக்தி வாய்ந்த இந்தப் பாடலைப் பாடுவோருக்கும் கேட்போருக்கும் சகல நன்மைகளும் கிட்டும். 

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம்
பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !

வைரம்

கற்றும் தெளியார் காடேக்கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒலிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

முத்து

முத்தே வரும் முத்தொழிலார் றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறு ததிகினை வாழ்வுடையேன்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர்
தேம்பொழிலாமிது செய்தவலாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால்
மந்திர வேதமயப்பொருள் ஆனால்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

மாணிக்கம்

காணக்கிடையாக் கதியானவளே
கருதக்கிடையா கலையானவளே
பூணக்கிடையா பொளிவானவளே
புனையக்கிடையா புதுமைதவளே
நாணித்திருநாமம் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்கவொளி கதிரே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
ஸுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவேன் அடியவற்குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வறனவா நிதியே சரணம் சரணம்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

கோமேதகம்

பூமேவியனான் புரியும் செயல்கள்
போன்றாப்பயனும் குன்றாவரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வா நிலமே
குழல்வாய் மொழியே வருவாய் வருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

பத்மராகம்

ரஞ்சனி நந்தனை அங்கனி பதும
ராக விகாசினி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சனா மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள‌ மேரு ஸ்ருங்க நிவாரிணி
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

வைடூர்யம்

வலையோத்தவினை கலையோத்த மனம்
மருளப் பறையா ரொளியோத்தவிதால்
நிலையர்ரோளிஎன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையர்ரசைவர் ரணிபூதிபெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலைத்துவஜன் மகளே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

இப்பாடலின் பலன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புதசக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே!!

Sunday, September 12, 2021

மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம்

#அஷ்டகம்_என்றால் எட்டுப் பொருள்களைக் கொண்டது என்பது பொருள். ஈரடிகளாக வரும் இந்த ஸ்லோகம் இந்திரனால் மஹாலக்ஷ்மியை துதித்து “பத்ம புராணத்தில்” பாடப்பட்டது.


இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை ஒரு முறை, இரு முறை, மூன்று முறைகளால் சொல்வதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பது.


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜித

ஷங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமஸ்துதே

படைப்பின் மூல காரணங்களாக விளங்குபவளும், ஸ்ரீபீடத்தில் வைத்து ஸூரர்களால் வணங்கப்படுபவளும், அழகிய கரத்தில் சங்கையும், சக்கரம், கதை வைத்திருப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி

ஸர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், கோலாஸூரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவளும், நம் சகல பாவங்களையும் நீக்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸர்வக்நே சர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வதுக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அனைத்தையும் அறிந்தவளும், அணைத்து வரங்களைக் கொடுப்பவளும், துஷ்ட குணங்களை அளிப்பவளும், துக்கங்களை அழிப்பவளும் வணங்குகிறேன்.


ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி

மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

சாதனைகள் புரிந்து நல்ல முறையில் வாழ புத்தியை அளிப்பவளும், இந்த உலகில் செழிப்புடன் வாழ்ந்து அவளின் பாத கமலங்களை அடைய அருள்பவளும், மந்திரங்களின் சூட்சும ஸ்வரூபமாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி

யோகக்நே யோக ஸ்ம்பூ தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

ஆதியந்தம் இல்லாதவளும், சகல விஷயங்களுக்கு பின்னால் இருப்பவளும், யோகமாக பிறந்தவளும், யோகத்தால் இணைந்தவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே

மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமஸ்துதே

அணைத்து விஷயங்களுக்கும் பின்னால் சூட்சும வடிவத்தில் ஆதார சக்தியாக விளங்குபவளும், பயங்கர வடிவத்தில் ருத்ரணியாக விளங்குபவளும், பெரும் சக்தியின் பிறப்பிடமாக விளங்குபவளும், அனைத்து பாபங்களையும அழிப்பவளும் மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


பத்மாஸன ஸ்திதே தேவி பரப்பிரஹ்ம ஸ்வரூபினி

பரமே ஸி ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தாமரை ஆசனத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பவளும், உயர்ந்த ப்ராமணியாக விளங்குபவளும், இப்பிரஞ்சத்தின் உயர்ந்த கடவுளாக, தாயாக விளங்குபவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே

ஜகத்ஸ்திதே ஜகன்மாத: மஹாலக்ஷ்மி நமஸ்துதே

தூய்மையின் அம்சமான வெள்ளை உடையை அணிந்திருப்பவளும், பலவித ஆபரணங்கள் அணிந்திருப்பவளும், பிரபஞ்சத்தில் தாய்க்கு தாயாக காப்பவளுமான மஹாலக்ஷ்மியை வணங்குகிறேன்.


மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் ய : படேத் பக்திமான் நர :

ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

யார் ஒருவர் இந்த மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை பக்தியுடன் சொல்கிறார்களோ அவர்கள் சகலவிதமான சம்பத்துக்களையும் பெற்று அன்னையின் காலடிகளை அடைவார்கள்.


ஏக காலம் படேந் நித்யம் மஹா பாப விநாஷணம்

த்விகாலம் ய : படேந்நித்யம் தனதான்ய ஸமன்வித:

இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால் அணைத்து பாவங்களும் நீங்கும்.

இரு முறை சொன்னால் தனங்களையும், தான்யங்களையும் அடைவோம்.


த்ரிகாலம் ய படேந்நித்யம் மஹா ஷத்ரு விநாஷனம்

மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்ன வரதா ஸூபா

மூன்று முறை சொன்னால் நம்முடைய எதிரிகள் அழிவார்கள்.  தினம் இதை கூறி மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருள் பொங்கிய சாந்த வடிவத்தில் நாம் சகல அனுக்ரஹங்களையும் பெறுவோம்.

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...