Wednesday, May 18, 2022

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

 திருச்சிற்றம்பலம்

அ௫ளியவர் : சுந்தரர்

திருமுறை : ஏழாம் திருமுறை

பண் : நட்டராகம்

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : குருகாவூர் வெள்ளடை


இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம்

முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த

வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1


ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங்

காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும்

மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2


பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்

ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே

காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும்

வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3


வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை

அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்

மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4


வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்

சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே

அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்

விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5


பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்

கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய்

மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே

விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.6


போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை

நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்

சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட

வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.7


மலக்கில்நின் அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்

சலச்சல மிடுக்குடைய தருமனார் தமர்என்னைக்

கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே

விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.8


படுவிப்பாய் உனக்கேஆள் பலரையும் பணியாமே

தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே

கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே

விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.9


வளங்கனி பொழில்மல்கு வயல் அணிந் தழகாய

விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை

இளங்கிளை ஆரூரன் வனப்பகையவள் அப்பன்

உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே. 7.29.10


– திருச்சிற்றம்பலம் –

ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

லலிதா நவரத்தின மாலை, அகத்திய மாமுனிவர் அருளியது. இதில் அகத்தியர், அம்பாளை நவரத்தினங்களாக வர்ணித்துப் போற்றுகின்றார். இந்த எளிய தமிழ்ப் பாடல், பக்திச் செறிவும் அருட்பிழிவும் மிக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இணையாகக் கருதப் பெறுகின்றது. சக்தி வாய்ந்த இந்தப் பாடலைப் பாடுவோருக்கும் கேட்போருக்கும் சகல நன்மைகளும் கிட்டும். 

ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான சத்குரு சரணம் சரணம்
ஞானானந்தா சரணம் சரணம்

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம்
பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !

வைரம்

கற்றும் தெளியார் காடேக்கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒலிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

முத்து

முத்தே வரும் முத்தொழிலார் றிடவே
முன்னின்றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய் நீ
சாகாதவரம் தரவே வருவாய்
மத்தேறு ததிகினை வாழ்வுடையேன்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம்
அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் மொழிபாரோர்
தேம்பொழிலாமிது செய்தவலாரோ
எந்தை இடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கருள் எண்ணமிகுந்தால்
மந்திர வேதமயப்பொருள் ஆனால்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

மாணிக்கம்

காணக்கிடையாக் கதியானவளே
கருதக்கிடையா கலையானவளே
பூணக்கிடையா பொளிவானவளே
புனையக்கிடையா புதுமைதவளே
நாணித்திருநாமம் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்கவொளி கதிரே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
ஸுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ஸ்ருதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவேன் அடியவற்குழும
அவரருள் பெற அருளமுதே சரணம்
வறனவா நிதியே சரணம் சரணம்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

கோமேதகம்

பூமேவியனான் புரியும் செயல்கள்
போன்றாப்பயனும் குன்றாவரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி என
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வா நிலமே
குழல்வாய் மொழியே வருவாய் வருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!!

பத்மராகம்

ரஞ்சனி நந்தனை அங்கனி பதும
ராக விகாசினி யாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்திர கலாதரி ராணி
அஞ்சனா மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள‌ மேரு ஸ்ருங்க நிவாரிணி
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

வைடூர்யம்

வலையோத்தவினை கலையோத்த மனம்
மருளப் பறையா ரொளியோத்தவிதால்
நிலையர்ரோளிஎன் முடியத்தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையர்ரசைவர் ரணிபூதிபெரும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலைத்துவஜன் மகளே வருவாய்
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !!

இப்பாடலின் பலன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தினமாலை நவின்றிடுவார்
அவர் அற்புதசக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வாரவரே!!

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...