Skip to main content

Posts

Showing posts from May, 2022

இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்

 திருச்சிற்றம்பலம் அ௫ளியவர் : சுந்தரர் திருமுறை : ஏழாம் திருமுறை பண் : நட்டராகம் நாடு : சோழநாடு காவிரி வடகரை தலம் : குருகாவூர் வெள்ளடை இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.1 ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங் காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும் மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.2 பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.3 வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை அப்படி அழகாய அணிநடை மடஅன்னம் மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.4 வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும் விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே. 7.29.5 பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் ...

ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை

ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான சத்குரு சரணம் சரணம் ஞானானந்தா சரணம் சரணம் காப்பு ஆக்கும் தொழில் ஐந்தர நாற்ற நலம் பூக்கும் நகையால் புவனேஸ்வரி பால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயக வாரணமே ! வைரம் கற்றும் தெளியார் காடேக்கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெரியார் நினையேன்னில் அவம் பெருகும் பிழையேன் பேசத்தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கு எமனாக எடுத்தவளே வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !! நீலம் மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம் கோலக் கிளியே சரணம் சரணம் குன்றாத ஒலிக்குவையே சரணம் நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவர்றேளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !! முத்து முத்தே வரும் முத்தொழிலார் றிடவே முன்னின்றருளும் முதல்வீ சரணம் வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாசினியே சரணம் தத்தேறிய நான் தனயன் தாய் நீ சாகாதவரம் தரவே வருவாய் மத்தேறு ததிகினை வாழ்வுடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே !! பவளம் அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடனம் செய்யும் ஆனந்த மேடை ...