Skip to main content

Posts

Showing posts from December, 2020

மஹா கணபதி மந்திரம்

மஹா கணபதி மந்திரம் : மூதுரை வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்  மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது  பூக்கொண்டு துப்பார் திருமேனித்  தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள்.   தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ, மேனி என்பது குப்பைமேனி, தும்பி என்பது தும்பைச்செடி, கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை), பாதம் என்பது செருப்படை, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளும் பஞ்சபூத மூலிகைகளாம். நமது உடலும் பஞ்சபூதங்களினாலே உருவானதுதானே. பஞ்சீகரணம் என்பதை அறிந்து சரிவர இவற்றை உபயோகித்தால் உடலை நீண்ட நாட்களுக்...

பாடல்கள்

 மனமே கணமும் மறவாதே ஜகதீசன் மலர் பதமே . மோகம் மூழ்கி பாழாகாதே மாயா வாழ்வு சதமா  . நாளை என்பார் யார் அதை  கண்டார் ஆதலால் பவ ரொஹம் ஒழிந்திடவே . நடையும் தளர தேகம் ஒடுங்க நாவது குழர கண்கள் மங்க என்ன செய்வார் துணை யார் வருவார் ஈசன் மலர் பதமே ***************************** பல்லவி பால்வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம் பரவச மிக வாகுதே (கண்ணா) அனுபல்லவி நீலக்கடல் போலும் நிறத்தழகா -கண்ணா எந்தன் நெஞ்சம் குடி கொண்டு அன்று முதல் இன்றும் எந்த பொருள் கண்டும் சிந்தனை    செல்லாதொழிய (பால்வடியும்) சரணம் வான முகட்டில் சட்று மனம் வந்து நோக்கினும் (உன்) மோன முகம் வந்து தோனுதே தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும் (உன்) சிரித்த முகம் வந்து காணுதே கானக் குயில் குரலில் கருத்(து) அமைந்திடினும் (அங்கு) உன் கான குழலோசை மயக்குதே கருத்த குழலொடு நிறுத்த மயிலிற- கிறுக்கி அமைத்த திறத்திலே கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிர் இளங் கரத்திலே கதிரும் மதியும் என நயன விழிகள் இரு நளினமான சலனத்திலே காளிங்கன் சிரத்திலே ...

என்ன கவி பாடினாலும்

 என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை  இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...(என்ன கவி)  அனுபல்லவி அன்னையும் அறியவில்லை  தந்தையோ நினைப்பதில்லை  மாமியோ பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை ....(என்ன கவி...)  சரணம்  அக்ஷ்ரலக்ஷ்ம் தந்த அன்னல் போஜ ராஜன் இல்லை  பக்ஷ்முடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை  இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை  (அ) லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை..(என்ன கவி)