Saturday, March 9, 2024

வானமளாவிய மாமரமே...

வானமளாவிய மாமரமே...

என்னை வாவென்றழைக்கும் தபோவனமே


குருநாதனின் நாமம் ஞானானந்தமே-அங்கே 

நாடிச்சென்றால் பேரானந்தமே (வானம்)


தேனூறும் தென் பெண்ணை ஆறோரமே - அங்கே 

தேவனிருக்கும் தபோவனமே 


திருக்கோயிலூர் குடிகொண்ட கோபாலனே - அங்கே 

காவி உடைகொண்டு வந்துள்ளானே (வானம்)


கண்ணனும் கந்தனும் கலந்து விட்டான் - அங்கே

கருணை வடிவமாய் தோன்றிவிட்டான் 


நம் மன்னன் ஞானானந்தன் ஆற்றல்களை - ஹரி

தாஸனால் செப்பிட ஆகிடுமோ (வானம்)


நாமாவளி:

ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த 

ஞானானந்த ஞானானந்த ஞானானந்த ஞானானந்த 


சீர்பெருகும் சச்சிதானந்தமாகிய சின்மயனே குருநாதா (ஞானா)

பார்முழுதும் பரமாகி நிறைந்திடும் பாக்கியமே குருநாதா (ஞானா)

பேரறிவாகிய ப்ரஹ்ம நிலை கடை பேசறியேன் குருநாதா (ஞானா)

யார் தருவார் இந்த அனுக்கிரஹம் அனைத்தையும் ஆண்டவனே  குருநாதா (ஞானா)

யார் தருவார் இந்த உலகினில் நலத்தையே ஆண்டவனே குருநாதா(ஞானா)

அந்தகன் போலவே அலைந்து திரிந்த எனை ஆண்டவனே குருநாதா(ஞானா)

பக்தி வைராக்கிய பல முறை நூல்கள் பரம் பொருளே குருநாதா (ஞானா)

நித்ய நிரஞ்சன நிர்குணமாகிய  நிர்மலனே குருநாதா (ஞானா)


ஞானானந்தா..

ஞானானந்தா..

ஞானானந்தா..

ஞானானந்தா..


Sunday, February 4, 2024

ஆனந்த ராமாயணம்

பெருமாள் துதி

அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து

தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி

கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி 

புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி 


1 . பாலகாண்டம் 


தேவர் குறை தீர்த்திடவே ராமா ராமா

மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா

தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா

புஜபலத்தோடு ஜனித்தாய் ராமா ராமா

கோசலைதன் கர்பத்தில் ராமா ராமா

கூசாமலே நீ பிறந்தாய் ராமா ராமா

தவமுனிக்கு உதவி செய்ய ராமா ராமா

கவனமுடன் பின் சென்றாய் ராமா ராமா

தாடகையை சங்கரித்தாய் ராமா ராமா

பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா

கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் ராமா ராமா

வில் வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா

ஜனகன்வர லாறு கேட்ட ராமா ராமா

தனக்குப்பதில் முனியுரைக்க ராமா ராமா

தனுசைக் கையிலெடுத்தாய் ராமா ராமா

மனதில் கிலேசமுற்றாய் ராமா ராமா

வில்முறிய சீதைக்கண்டு ராமா ராமா

நல்மணஞ் செய்து கொண்டாய் ராமா ராமா

மங்களங்கள் பாடவே ராமா ராமா

தங்கனீர் மிதிலைதனில் ராமா ராமா

பரசுராமர் வில்முறித்தீர் ராமா ராமா

கரசனமா வயோத்தி சென்றீர் ராமா ராமா

சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா

சிறப்பவே அயோத்தி நகர் ராமா ராமா


2. அயோத்தியா காண்டம்


அயோதிக்கரசனாக ராமா ராமா

ஆவதனில் தசரதனும் ராமா ராமா

உந்தனையே வேண்டிக்கொண்டார் ராமா ராமா

சிந்தை களித்திருந்தார் ராமா ராமா

சிற்றன்னை கைகேயியை ராமா ராமா

பற்றில்லாது கூனியுமே ராமா ராமா

பக்குவமாய்த் தான் கலைத்து ராமா ராமா

பரதர் முடி பெற்றிடவே ராமா ராமா

உத்திரவு கேள் என்று ராமா ராமா

ஊக்கமுண்டாக்கி விட்டாள் ராமா ராமா

தாய் மொழி தவராமலே ராமா ராமா

தவவேடம் தான் கொண்டாய் ராமா ராமா

தசரதரும் விசனம் கொள்ள ராமா ராமா

தானடைந்தாய் கானகமும் ராமா ராமா

சீதையுடன் புறப்படவே ராமா ராமா

லக்ஷ்மணர் கூடவந்தார் ராமா ராமா

பக்தரெல்லாம் புலம்பிடவும் ராமா ராமா

பலநீதி சொல்லி தானகன்றாய் ராமா ராமா

கங்கை கரை அடைந்தாய் ராமா ராமா

நங்கை சீதையுடன் ராமா ராமா

ஒடம்விட்ட குகனுடன் ராமா ராமா

உளவுகொண்டு அங்கிருக்க ராமா ராமா

சேனையுடன் பரதன் வர ராமா ராமா

சிறப்புடனே பாதுகைக்கு ராமா ராமா

பட்டங்கட்டி அரசு செய்ய ராமா ராமா

பரதரும் திரும்பிச் சென்றார் ராமா ராமா


3. ஆரண்ய காண்டம்


அத்திரி முனியைக் கண்டு ராமா ராமா

அப்புறம் தண்டகம் சென்றாய் ராமா ராமா

கொடிய விராதகனை ராமா ராமா

மடிய சங்காரம் செய்தாய் ராமா ராமா

தண்டக வனத்து ரிஷிகள் ராமா ராமா

அண்டவர காத்து நின்றீர் ராமா ராமா

பஞ்சவடி தீரம் சென்றாய் ராமா ராமா

பர்ணசாலை கட்டி நின்றீர் ராமா ராமா

சூர்ப்பான் தம்பி என்றீர் ராமா ராமா

தம்பியால் பங்கம் அடைந்தாள் ராமா ராமா

வெம்பியமனம் வாடினாள் ராமா ராமா

கரதூஷ்ணாதியரை ராமா ராமா

வரைமுறை இட்டாள் ராமா ராமா

கோதண்டத்துக்குச் சிறையாக ராமா ராமா

கூகுரலிட்டோடி வந்தார் ராமா ராமா

சூர்பனகை தூண்டுதலால் ராமா ராமா

ஆர்ப்பரித்தான் ராவணனும் ராமா ராமா

மாரீசனை மானாகவர ராமா ராமா

மருமகனும் வேண்டிக்கொண்டான் ராமா ராமா

மாரீச்சன் மறுத்ததற்கு ராமா ராமா

தாறுமாறாய்க் கூறிவிட்டான் ராமா ராமா

சீதை முன்னே மான் வரவே ராமா ராமா

அதைப்பிடிக்க பின் சென்றாய் ராமா ராமா

அம்புபட்டு விழுந்தது மான் ராமா ராமா

நம்பும்படி கூக்குரலிட ராமா ராமா

சிந்தை கலங்கிடவே ராமா ராமா

சீதை வருந்தினாளே ராமா ராமா

ராவண சந்நியாசி வந்தான் ராமா ராமா

நிலத்தொட சீதையை ராமா ராமா

தேரின்மேல் எடுத்துச் சென்றான் ராமா ராமா

தெரிந்து எதிர்க்க ஜடாயுவும் ராமா ராமா

சிறகொடிந்து நிலத்தில் விழ ராமா ராமா

சீதை வரம் தந்து சென்றாள் ராமா ராமா

தேடி வரும் வழியில் ராமா ராமா

தென்பட்ட ஜடாயுவுக்கு ராமா ராமா

நல்வரமும் தந்தளித்தாய் ராமா ராமா

செல்வழியில் கவந்தன் வர ராமா ராமா

சேர எமலோகம் தந்தீர் ராமா ராமா

சபரிக்கு முக்தி தந்தீர் ராமா ராமா

நல்வரமும் தான் அளித்தாய் ராமா ராமா


4. கிஷ்கிந்தா காண்டம்


ஹனுமான் எதிரில் வர ராமா ராமா

அவரால் சுக்ரீவனை ராமா ராமா

நேசங்கொண்டு யோசனைகள் ராமா ராமா

நீனிலத்தில் செய்துகொண்டீர் ராமா ராமா

சீதையின் நகைகளை ராமா ராமா

கண்டுமனங் கசிந்தீர் ராமா ராமா

சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா

துளைத்து விட்டீர் மாமரத்தை ராமா ராமா

வாலியை வதைத்து அவனை ராமா ராமா

வைகுந்தம் போக செய்தீர் ராமா ராமா

சீதையைத் தேடும்படி ராமா ராமா

சேதிசொல்லி விடுத்தீர் ராமா ராமா

நான்கு திசைகளிலும் ராமா ராமா

நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா

காடுமலை வனமெல்லாம் ராமா ராமா

கண்கூடாய்த் தேடுகிறார் ராமா ராமா


5. சுந்தர காண்டம்


சீதை இருப்பிடத்தை ராமா ராமா

சம்பாதி உரைத்திடுவே ராமா ராமா

மயேந்திரம் ஏறியே ராமா ராமா

பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா

இலங்கணி அனுமானும் ராமா ராமா

கலங்கிட வடித்தானே ராமா ராமா

சீதையைத் தேடிக் கண்டாளே ராமா ராமா

சேதியடை யாளந்தன் ராமா ராமா

அசோகவன மழித்தான் ராமா ராமா

அசுரர்களை தான்வதைத்தான் ராமா ராமா

இலங்கைக்கு கொள்ளிவைத்து ராமா ராமா

கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா

சீதை தந்த சூடாமணி ராமா ராமா

அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா

இந்திரஜித்தின் அஸ்திரத்தால் ராமா ராமா

சந்திக்க அனுமானும் ராமா ராமா

ராவணனைக் கண்டு அனுமானும் ராமா ராமா

பாலாமைக்கும் புத்தி சொன்னான் ராமா ராமா

விதியை வெல்வாரில்லை ராமா ராமா

மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா


6. யுத்த காண்டம்


சேதுவை அணைகட்ட ராமா ராமா

சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா

சரணமடைந்த விபீஷணனுக்கு ராமா ராமா

சிரஞ்சீவி பதட்டம் தந்தாய் ராமா ராமா

ராவணாதி யசுரரைக் கொன்றாய் ராமா ராமா

ராக்ஷதர் வேரற்றுப்போக ராமா ராமா

சீதையை சிறைநீக்கு விட்டாய் ராமா ராமா

விபீஷணனுக்கு முடிதரித்தாய் ராமா ராமா

அயோத்திக்கு திரும்பிவர ராமா ராமா

சேதுவிற்  குரைசெயதாய் ராமா ராமா

புஷ்பக விமானத்தில் ராமா ராமா

புண்ணிய முனிவரிடம் ராமா ராமா

போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா

போகவிடுத் தனுமானை ராமா ராமா

பரனுயிரை காப்பாற்றிய ராமா ராமா

அயோத்தி நகர் வந்து சேர்ந்த ராமா ராமா

மகுடாபிஷேகங் கொண்ட ராமா ராமா

மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா

குவலயத்தை ரட்சிக்கும் ராமா ராமா

குறைகளொன்றும் வாராது ராமா ராமா


ஆனந்த ராமாயணம் தியானம் சம்பூர்ணம் 


Monday, January 22, 2024

பழநி திருப்புகழ்

அவனிதனிலே பிறந்து

மதலை எனவே தவழ்ந்து

அழகு பெறவே நடந்து

இளைஞோனாய்


அருமழலையே மிகுந்து

குதலை மொழியே புகன்று

அதிவிதம் அதாய் வளர்ந்து

பதினாறாய்


சிவகலைகள் ஆகமங்கள்

மிகவுமறை ஓதும் அன்பர்

திருவடிகளே நினைந்து 

துதியாமல்


தெரிவையர்கள் ஆசை மிஞ்சி

வெகுகவலையாய் உழன்று

திரியும் அடியேனை

உன்றன் அடிசேராய்


மவுன உபதேச சம்பு

மதியறுகு வேணி தும்பை

மணிமுடியின் மீதணிந்த 

மகதேவர்


மனமகிழவே அணைந்து

ஒருபுறமதாக வந்த

மலைமகள் குமார

துங்க வடிவேலா


பவனி வரவே உகந்து

மயிலின் மிசையே திகழ்ந்து

படி அதிரவே நடந்த

கழல்வீரா


பரம பதமே செந்தில் 

முருகன் எனவே உகந்து

பழனிமலை மேல் அமர்ந்த 

பெருமாளே

Monday, December 18, 2023

Hālallādaru hāku

About Haalalladaru Haaku Song and lyrics:

"Halalladaru Haaku" is a timeless Kannada song from the 1988 film Devatha Manushya, sung by legendary actor and singer Dr. Rajkumar and B.R. Chaya. The song was composed by Upendra Kumar and the lyrics were penned by Chi. Udaya Shankar.

The song is a beautiful expression of the simple joys of life and the importance of cherishing them. The lyrics speak of the little things that bring happiness - a beautiful sunrise, the chirping of birds, the fragrance of flowers, and the love of family and friends. The song urges us to appreciate these small moments of joy and to live life to the fullest.

Dr. Rajkumar's mellifluous voice adds a special touch to the song, making it one of his most memorable performances. The music and the lyrics complement each other perfectly, creating a beautiful, soul-stirring melody that has stood the test of time.

Over the years, "Halalladaru Haaku" has become an iconic Kannada song that is loved by people of all ages. It has been covered by numerous artists and continues to be a favorite at cultural events and festivals. The song's popularity is a testament to its timeless appeal and the enduring legacy of Dr. Rajkumar's music.

Hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā 

hālalli keneyāgi nīralli mīnāgi hāyagiruve rāghavēndra 


hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā 

hālalli keneyāgi nīralli mīnāgi hāyagiruve rāghavēndra 

hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā 


muḷḷallādaru nūku kallallādaru nūku rāghavēndrā 

muḷḷallādaru nūku kallallādaru nūku rāghavēndrā 

muḷḷalli muḷḷāgi kallalli kallāgi ondāgiruvē rāghavēndra 


bisillallē oṇagisu neraḷale malagisu rāghavēndrā 

bisillalli kempāgi neraḷalli tampāgi 

nagunaguta iruvē rāghavēndra


hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā 

sukhavanne nīḍendu endū kēḷenu nānu rāghavēndrā 

sukhavanne nīḍendu endū kēḷenu nānu rāghavēndrā 

munna māḍida pāpa yāra tātana gaṇṭu 

munna māḍida pāpa yāra tātana gaṇṭu 

nīnē hēḷu rāghavēndrā ellidderēnu nā hēgiddarēnu nā rāghavēndra 

ninnalli śaraṇāgi nī nanna usirāgi bāḷidare sākū rāghavēndrā 


hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndra 

hālalli keneyāgi nīralli mīnāgi hāyagiruve rāghavēndra 

hālallādaru hāku nīrallādaru hāku rāghavēndrā




Thursday, September 7, 2023

துவாதச ஸ்தோத்ரம்

 வந்தே வந்தியம் சதானந்தம் வாசுதேவம் நிராஜனம் |

இந்திராபதிமத்யாதி வரதேச வரப்ரதம் || 1||


நமாமி நிகிலாதிஷா கிரிடாக்ரிஷ்டாபிதாவத் |

ஹத்தம ஷமநேர்கபாம் ஶ்ரீபதே பாதபங்கஜம் || 2 ||


ஜம்புனதாம்பரதரம் நிதம்பம் சிந்தியமிஷிதுஹ் |

ஸ்வர்ணமஞிரஸம்விதம் ஆரூடம் ஜகதம்பய || 3 ||


உதாரம் சிந்தியம் இஷஸ்ய தனுத்வேபி அகிலம்பரம் |

வலித்ரயங்கிதம் நித்யம் ஆரூடம் ஶ்ரீயைகயா || 4 ||


ஸ்மரணியமுரோ விஷ்ணோஹ் இந்திராவசமுத்தமைஹ் |

அனந்தம் அந்தவாதிவ பூஜயோரந்தரங்கதஹ் || 5 ||


ஶங்கசக்ரகதாபத்மதரஶ்ச்-இந்த்யா ஹரேர்பூஜா |

பினாவ்ரித்தா ஜகத்ராக்ஷா கேவலோத்யோகினோநிஷம் || 6 ||


சந்ததம் சிந்தயேத்காந்தம் பஸ்வத்கௌஸ்துபபாஷகம் |

வைகுந்தஸ்யாகிலா வேதா உத்கிரியந்தேநிஷம் யதஹ் || 7 ||


ஸ்மரேதா யாமினிநாத ஸஹஸ்ரமிதகந்திமத் |

பவதாபாபநோதித்யம் ஶ்ரீபதே முகபங்கஜம் || 8 ||


பூர்ணாநந்யஸுகோத்பாஸிம் அந்தஸ்மிதமாதிஷிதுஹ் |

கோவிந்தஸ்ய ஸதா சிந்தியம் நித்யானந்தபாதப்ரதம் || 9 ||


ஸ்மராமி பவஸந்தப ஹனிதாம்ரிதசாகரம் |

பூர்ணாநந்தஸ்ய ராமஸ்ய சாணுரகவலோகனம் || 10 ||


த்யாயேதஜஸ்ரமிஷஸ்ய பத்மஜாதிப்ரதிக்ஷிதம் |

ப்ருபங்கம் பரமேஷ்த்த்யாதி பததாயி விமுக்திதம் || 11 ||


சந்ததம் சிந்தயேனாந்தம் அந்தகாலே விசேஷதஹ் |

நைவோதபுஹ் க்ரிணந்தோந்தம் யத்குணானாம் அஜாதயஹ் || 12 ||


https://youtu.be/kbs26gRbZyw?si=Mcj7AZEd6ZAoJGI9

Thursday, May 25, 2023

திருவேளைக்காரன் வகுப்பு

திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு - திருவேளைக்காரன் வகுப்பு


ஆன பய பத்தி வழிபாடு பெறு முத்தி

அதுவாக நிகழ் பக்த ஜனவாரக்காரனும் 


ஆரம் அது உரித்த கனி காரணம் முதற்று அமைய

நாருடன் உணக்கைபரி தீமைக்காரனும் 


ஆகமம் விளைத்த கில லோகமு நொடிப் பளவில்

ஆசையொடு சுற்றுமதி வேகக்காரனும் 


ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிய

அநுபூதியடை வித்ததொரு பார்வைக்காரனும் 


ஆடலைவு பட்டமரர் நாடது பிழைக்க

அமராவதி புரக்குமடல் ஆண்மைக்காரனும் 


ஆடகவி சித்ரகன கோபுர முகப்பில்

அருணாபுரியில் நிற்கும் அடையாளக்காரனும் 


ஆயிர முகத்து நதி பாலனும் அத்தடிமை

யானவர் தொடுத்த கவி மாலைக்காரனும் 


ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசு

மாதிமுடி வற்ற திருநாமக்காரனும் 


யான் எனதெனச் சருவும் ஈன சமயத்தவரும்

யாரும் உணர்தற்கு அரிய நேர்மைக்காரனும் 


யாது நிலை யற்றலையும் ஏழு பிறவிக் கடலை

ஏறவிடு நற்கருணை யோடக்காரனும் 


ஏரகம் இடைக்கழிசி இராமலை திருப்பழநி

ஏரணி செருத்தணியில் வாசக்காரனும் 


ஏழையின் இரட்டை வினை யாயதொருடற் 

சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும் 


யாமளை மணக்கும் அகசாமளை மணிக்குயிலை

யாயென அழைத்துருகு நேயக்காரனும் 


ஏதமற நிச்சய மனோலய விளக்கொளியும்

யாக முனிவர்க்குரிய காவற்காரனும் 


ஈரிரு மருப்புடைய சோனை மதவெற்பிவரும்

யானை அளவிற்றுவளும் ஆசைக்காரனும் 


ஏடவிழ் கடப்பமலர் கூதள முடிக்கும்

இளையோனும் அறிவிற் பெரிய மேன்மைக்காரனும் 


வானவர் பொருட்டு மகவானது பொருட்டுமலர்

வாவியில் உதித்தமுக மாயக்காரனும் 


வாரண பதிக்கு உதவு நாரணனு உவக்கு

மருமானும் அயனைக் கறுவு கோபக்காரனும் 


வாழியென நித்த மறவாது பரவிற் சரண

வாரிசம் அளிக்கும் உபகாரக்காரனும் 


மாடமதில் சுற்றிய திரிகூடகிரியிற் கதிர்செய்

மாநகரியிற் கடவுள் ஆயக்காரனும் 


வாளெயிற துற்ற பகுவாய் தொறு நெருப்புமிழும்

வாசுகி எடுத்து உதறும் வாசிக்காரனும் 


வாளகிரியைத் தனது தாளிலிடியப்பொருது

வாகை புனை குக்குடப தாகைக்காரனும் 


மாசிலு உயிருக்கு உயிர் மாசில் உணர்வுக்கு குணர்வும்

வானில் அணுவுக்கு அணுவு உபாயக்காரனும் 


வாதனை தவிர்த்த குரு நாதனும் வெளிப்படம

காடவியில் நிற்பத ஓர் சகாயக்காரனும் 


மீனவனு மிக்க புலவோரு முறை பொற் பலகை

மீது அமர் தமிழ் திரவிய விநோதக்காரனும் 


வேரி மது மத்த மதி தாதகி கிடுக்கைபுனை

வேணியர் துதிப்பத ஒரு கேள்விக்காரனும் 


வேல துகள் பட்டு மலை சூரன் உடல் பட்டு உருவ

வேலை உறவிட்ட தனி வேலைக்காரனும் 


மீனுலவு கிர்த்திகைக்கு மாரனு நினைக்கும் அவர்

வீடுபெற வைத்தருள் உதாரக்காரனும் 


மேனையரி வைக்குரிய பேரனும் மதித்த திறல்

வீரனும் அரக்கர் குல சூறைக்காரனும் 


வேதியர் வெறுக்கையும் அநாதிபர வஸ்துவும்

விசாகனும் விகற்ப வெகு ரூபக்காரனும் 


வேடுவர் புனத்தில் உருமாறி முனி சொற்ப்படி

வியாகுல மனத்தின் ஒடு போம் விற்காரனும் 


மேவிய புனத்தி தணில் ஓவியம் எனத் திகழு

மேதகு குறத்தி திரு வேளைக் காரனே. 

Thursday, February 16, 2023

மைத்ரீம் பஜத

காஞ்சி பரமாச்சாரியார் எழுதி எம்.எஸ் அவர்கள் ஐநா சபையில் பாடியது


மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம்
ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத

யுத்தம் த்யஜத ஸ்பர்த்தாம் த்யஜத
த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமணம்

ஜனனீ ப்ருத்வீ காமதுகாஸ்தே
ஜனகோ தேவ: சகல தயாளு

தாம்யத தத்த தயத்வம் ஜனதா
ச்ரேயோ பூயா சகல ஜனானாம்

தமிழில்

அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!

போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!

அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!

அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!


பொருள்:


பணிவு, அன்பு ஆகியவற்றைக் கொண்ட சேவையை உலக மக்கள் அனைவரும் செய்யுங்கள். அச்சேவையே அனைவர் இதயத்தையும் வெல்ல உதவும். தன்னைப் போலவே அனைவரையும் எண்ணிப் பாருங்கள். போரினைக் கைவிடுங்கள். அவசியமற்ற அதிகார போட்டியினையும் கை விட்டுவிடுங்கள். பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்கிரமிக்கும் அக்கிரமச் செயலைக் கை விட்டு விடுங்கள். பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றக் காத்துக்கொண்டிருக்கிறாள்.

மக்களின் தந்தையான இறைவனோ எல்லோர் மேலும் மிகவும் கருணை கொண்டவனாதலால் தன்னடக்கம் கொள்ளுங்கள். எல்லோருக்கும் உங்கள் செல்வத்தை தானம் கொடுங்கள். எல்லோரிடமும் கருணையோடு இருங்கள் மக்களே. உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எந்தக் குறையும் இன்றி இருக்கட்டும்!

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...