Monday, January 22, 2024

பழநி திருப்புகழ்

அவனிதனிலே பிறந்து

மதலை எனவே தவழ்ந்து

அழகு பெறவே நடந்து

இளைஞோனாய்


அருமழலையே மிகுந்து

குதலை மொழியே புகன்று

அதிவிதம் அதாய் வளர்ந்து

பதினாறாய்


சிவகலைகள் ஆகமங்கள்

மிகவுமறை ஓதும் அன்பர்

திருவடிகளே நினைந்து 

துதியாமல்


தெரிவையர்கள் ஆசை மிஞ்சி

வெகுகவலையாய் உழன்று

திரியும் அடியேனை

உன்றன் அடிசேராய்


மவுன உபதேச சம்பு

மதியறுகு வேணி தும்பை

மணிமுடியின் மீதணிந்த 

மகதேவர்


மனமகிழவே அணைந்து

ஒருபுறமதாக வந்த

மலைமகள் குமார

துங்க வடிவேலா


பவனி வரவே உகந்து

மயிலின் மிசையே திகழ்ந்து

படி அதிரவே நடந்த

கழல்வீரா


பரம பதமே செந்தில் 

முருகன் எனவே உகந்து

பழனிமலை மேல் அமர்ந்த 

பெருமாளே

No comments:

Post a Comment

சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...