ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே,
ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும்,
ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும்,
சந்த்ராம்- நிலவு போன்றவளும்,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை,
மே -என்னிடம்,
ஆவஹ -எழுந்தருளச் செய்வாய் —————1
பொன் நிறத்தவளும்,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும், பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2
ஜாதவேத -அக்னியே,
அஹம் -நான்,
ஹிரண்யம் -பொன்னையும்,
காம் -பசுக்களையும்,
அஸ்வ -குதிரைகளையும்,
புருஷான் -உறவினரையும்,
விந்தேயம் -பெறுவேனோ,
தாம் -அந்த,
லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,
யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை,
மே -என்னிடம்,
ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்………………………………..2
அக்னி தேவனே, யாருடைய அருளால்,நான் பொன்னையும் பசுக்களையும், குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ, அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய். அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.
அஸ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்,
ரத மத்யாம் -நடுவில் ரதங்களும்,
ஹச்திநாத ப்ரபோதிநீம் -களிறுகளின் பிளிறல்களை தனது அறிகுறியாகக் கொண்டவளுமான,
ஸ்ரியம் தேவீம் -மனதிற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை,
உபஹ்வையே -அழைக்கிறேன் .
ஸ்ரீ தேவி -செல்வத்தின் உறைவிடமான திருமகளே,
மா ஜுஷதாம் -என்னிடம் இன்புற்று உறைவாய் .
முன்னால் குதிரைகள், நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும்,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .
திருமகளே! நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக .
காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…………………….4
ஸ்மிதாம் -புன்முறுவல் தவழ்பவளும்,
ஹிரண்யப் ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் உறைபவளும்,
ஆர்த்ராம் -கருணை நிறைந்தவளும்,
ஜ்வலந்தீம் -ஒழி வீசுபவளும்,
த்ருப்தாம் -மன நிறைவுடயளும்,
தர்பப்பயந்தீம் -தன்னைத் துதிப்போர்க்கு மகிழ்ச்சியை அருளுபவளும்,
பத்மே -தாமரையில்,
ஸ்திதாம் -நிலை பெற்றவளும்,
பத்ம வர்ணாம் -தாமரை நிறத்தவளும்,
காம் -யாரோ,
தாம் ஸ்ரியம் -அந்த மனத்திருக்கு உகந்த லக்ஷ்மியை,திருமகளை,
இஹ -இங்கே,
உபஹ்வையே–வேண்டுகின்றேன்.
குறுநகை தவழ்பவளும், பொன் மயமான கோட்டையில் உறைபவளும்,கருணை நிறைந்து ததும்புவளும்,ஒளி நிறைந்தவளும், மகிழ்ச்சி நிறைந்தவளும்,மகிழ்ச்சியைத் தருபவளும்,தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .
சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யேஉலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||
லோகே -உலக வாழ் உயிர்களுக்கு,
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்,
பிரபாஸாம் -சிதறும் ஒளி மிக்கவளும்,
யசஸா -தன மகிமையால்,
ஜ்வலந்தீம் -சுடர் விட்டு ஒளிர்பவளும்,
தேவ ஜுஷ்டாம் -தேவர்காளால் வழிபடப்படுபவளும்,
உதாராம் -கழிவிரக்கம் நிறைந்தவளும்,
பத்மிநீம் -தாமரையைத் தாங்கியவளும்,
ஈம் -ஈம் என்னும் பீஜ மந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளும் ஆன,
தாம் ஸ்ரியம் -அந்த மனதிற்குகந்த மகலக்ஷ்மியை,
அஹம் -நான்,
சரணம் ப்ரபத்யே -அடைக்கலம் புகுகிறேன் .
த்வாம் -உன்னை,
வ்ருணே -வேண்டுகிறேன்.
மே -என்னிடமிருந்து,
அலக்ஷ்மி -வறுமை,
நச்யதாம் – அழியட்டும் .
நிலவைப் போன்றவளும்,ஒளிநிரைந்தவளும், சுடர்விட்டு ஒளிர்பவளும்,தேவர்களால் வழிபடப்படுபவளும் கருணை மிக்கவளும்,தாமரையைத் தாங்கியவளும்,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷிமயை நான் சரணடைகிறேன். தேவியே! என் வறுமை விலகி அழிய அருள்வாய் .
ஆதித்யவ’ர்ணே தபஸோஉதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோஉத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ
ஆதித்யவ’ர்ணே – சூரியனின் நிறத்தவளே,
தவ-உனது,
தபசக -தவத்தால்,
வனஸ்பதி ‘கானகங்களுக்குத் தலைவனாகிய,
பில்வக வ்ருக்ஷ -வில்வ மரம்,
அதிஜாதக -உண்டாயிற்று .
அத -அதே போல்,
தபஸா -தவத்தால்,
தஸ்ய -அதன்,
பலானி -பலத்தால்,விளைவாக,பழங்கள்,
மாயா -அறியாமை ஆகிய,
அந்தராயாக -எனது உள்ளத்தில் உள்ள அகத்தடயையும்,
அ’லக்ஷ்மீஃ -அமங்கலமாகிய .
பாஹ்யா -புறத்தடயையும்,
நுதந்து -அழிக்கட்டும்.
கதிரவன் நிறத்தவளே,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .
அதன் பழங்கள் அறியாமையாகிய அகத்தடயையும்,அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே அழிக்க்கட்டும் .
உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோஉஸ்மி’ ராஷ்ட்ரேஉஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||…….7
தேவஸகஃ’குபேரனும்,
கீர்திச்ச -புகழின் தேவனும்,
மணின சஹ -என்னை நாடி வர வேண்டும் .
அஸ்மின் -இந்த,
ராஷ்ட்ரே-நாட்டில்,
ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .
மே -எனக்கு,
கீர்த்திம்- பெருமையும்,
ரிதிம் -செல்வமும்,
ததாது வழங்குவாய் .
செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.
உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .
நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .
க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||…… 8
க்ஷுத்பி’பாஸாம’லாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும்,
ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான,
அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை,
அஹம் -நான்,
மீ க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து
நாசயாமி -விலக்குகிறேன் .
சர்வாம் -எல்லா,
அபூதிம் -ஏழ்மையையும்,
அசம்ருத்திம் ச -வறுமையையும்,
நிர்ணுத -அகற்றி அருளுக .
பசி தாகத்தினால் மெலிந்தவளும்,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன். எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .
கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…9
கம்தத்வாராம்-நறுமணத்தின் இருப்பிடமானவளும்,
துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும்,
நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும்,
கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்,
சர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும்,
ஈஸ்வரீம் -தலைவியும் ஆன,
தாம் ஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை,
இஹ -இங்கே,
உபஹ்வையே–எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .
நறுமணத்தின் இருப்பிடமானவளும்,எவராலும் வெல்லப்பட முடியாதவளும், என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும்,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்
மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||..10.
ஸ்ரீ -திருமகளே !,
மனசஹ -மனத்தில் எழும்,
காமம் -ஆசைகளையும்,
ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும்,மகிழ்ச்சிகளையும்,
வாக்-வாக்கில்,
சத்யம் -உணமையையும்,
பசூனாம் -பசுக்களாலும்,
அன்னச்ய -உணவினாலும்,
அசீமகி,-அனுபவிக்க வேண்டும் .
மயி -எனக்கு,
கீர்த்தி -பெருமை,
ஸ்ரயதாம் -உண்டாகட்டும் .
திருமகளே !
தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும்,மகிழ்ச்சியையும்,வாக்கில் உண்மையையும்,
பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால்,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .
எனக்கு புகழ் உண்டாகட்டும் .
கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||..11
கர்தமே’ன. கர்த்தமரே (கர்தம முனிவரே ),
கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )
பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி,
மயி -எனக்கு,என்னிடம்,
சம்பவ -தோன்ற வேண்டும் .
பத்ம மாலினீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும்,
ஸ்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான,
மாதாம் -அன்னையும்
மே -என்,
குலே- என் குலத்தில்,
வாசய -தங்கச் செய்ய வேண்டும் .
கர்த்தமரே !
உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் .
தாமரை மாலை அணிந்தவளும்,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச்
செய்ய வேண்டும்.
சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன்)
ஆபஹ -தண்ணீர்,
ச்னிக்தானி ;சிறந்த உணவுப் பொருள்களை,
ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும் .
மே -எனது,
க்ருஹே -எனது இல்லத்தில்,
வசஹ -வசிக்க வேண்டும் .
ச -மேலும்,
தேவீம் -தேவியும்,
மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன,
ஸ்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை,
மே -என் .
குலே -குலத்தில்,
நிவாசய – எப்போழ்தும் வாழும்படி அருள வேண்டும் .
லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே ! நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் . நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் . தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .
ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||…13.
ஜாத வேத -அக்னியே !,
ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும்,
புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும்,
புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும்,
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,
பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும்,
சந்திராம் -நிலவைப் போன்றவளும்,
ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான,
லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை,
மே -என்னிடம்,
ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.
அக்னியே ! கருணை நிரம்பிய மனதை உடையவளும்,தாமரை மலரில் உறைபவளும்,உலகை ஊட்டி வளர்ப்பவளும், குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,தாமை மாலை அணிபவளும்,பொன் மயமானவளுமான திருமகளை, என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .
ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||..14
ஜாத வேத -அக்னியே!,
ய-யார்,
ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும்,
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும்,
யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,
சுவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும்,
ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும்,
சூர்யாம் -பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும்,
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்,
ஆன,
லக்ஷ்மீம் -மகாலக்ஷ்மீயை,
மே -என்னிடம்,
ஆவஹ -எழுந்து அருளச் செய்ய வேண்டும்.
அக்னியே! கருணை நிரம்பியவளும்,செயல் திறத்தில் கம்பீரமானவளும்,நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,அழகிய நிறத்தை உடையவளும்,பகலவன் போல் பிரகாசிப்பவளும்,பொன் மயமான லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’
தாஸ்யோஉஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||..14.
ஜாத வேத -அக்னியே !,
யஸ்யாம் -யாரால்,
பிரபூதம் -அளவிட முடியா,
ஹிரண்யம் -பொன்னும்,
காவஹ -பசுக்களும்,
தாஸ்ய -பணிப் பெண்டிரும்,
அஸ்வான் -குதிரைகளும்,
புருஷான் -பணியாட்களும்,
அஹம் -நான்,
விந்தேயம்-பெறுவேனோ,
தாம் -அந்த,
லக்ஷ்மீம் -திருமகளை,
மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிற்குமாறு,
ஆவஹ -செய்தருள வேண்டும் .
அக்னி தேவனே !
யாரால் அளவிட முடியாத பொன்னும், பசுக்களும்,பணிப் பெண்டிரும்,குதிரைகளும் மற்றும்
பணியாட்களையும் நான் பெறுவேனோ,அந்த திருமகள்,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .
ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||
மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம், திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம்,
அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக .
இதனின்று பலஸ்ருதி, ஆகவே பொருள் இங்கு தரப்படவில்லை.
ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||
அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||
காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யேஉலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||
ஆதித்யவ’ர்ணே தபஸோஉதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோஉத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||
உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோஉஸ்மி’ ராஷ்ட்ரேஉஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||
க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||
கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||
மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||
கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||
ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||
ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோஉஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||
ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||
ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||
ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||