Monday, February 15, 2021

நாராயண ஸூக்தம்

Source https://ramanisblog.in/2014/04/11/நாராயண-ஸூக்தம்-பொருளுரை/

நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம், 4.10.13.


1. ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |

விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் |


சகஸ்ர சீர்ஷம் - ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும், 

தேவம் - ஒளிமிகுந்த தலைவனும், 

விச்வாக்ஷம் - அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும், 

விஸ்வ சம்புவம் - அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும், மங்கலலத்தைச் செய்பவரும், 

விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து பரந்தவரும், 

அக்ஷரம் - அழிவற்றவரும், 

பரமம் பதம் - அனைத்திற்கும் மேற்பட்டு மேலான நிலையில் உள்ளவரும், 

நாராயணம் தேவம் - நாராயணன் என்னும் தெய்வத்தை.


எண்ணற்ற தலைகளை உடையவரும், ஒழி மிக்கவரும், அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும்,  உலகைத்தை விளைவித்து, மங்கலத்தைச் செய்பவரும், அணைத்து உலகிலும் நிறைந்து,  விரிந்து பரந்தவரும்,  அழிவற்றவரும், மேலானவருமான நாராயணன் என்னும் தேவனை த்யானிக்கிறேன். 


2. விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் | விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |

பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம் |


விஸ்வத - இந்த உலகத்தைவிட, 

பரமான் - இதற்கு அப்பாற்பட்டு, மேலானவரும், 

நித்யம் - என்றும் உள்ளவரும், 

விஸ்வம் - உலகமாய் விளங்குபவரும், 

ஹரிம் - அவரது பெயரை உச்சரித்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவரும், 

நாராயணம் - நாராயணனை 


இந்த உலகிற்கு அப்பாற்பட்டு, இதனை விட மேலானவரும், என்றும் உள்ளவரும், பெயரை உச்சரித்த மாத்திரத்தில் துன்பங்களைக் களைபவரும், ஆகிய நாராயணனை த்யானம் செய்கிறேன் .


3. பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்

னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் |


விஶ்வ’ஸ்ய - இவ்வுலகிற்கு, 

பதிம் - தலைவரும், 

ஆத்ம ஈஸ்வரம் - அனைத்து உயிர்களின் தலைவரும், 

சாஸ்வதம் - என்றும் உள்ளவரும்,நிலை பெற்றவரும், 

சிவம் - மங்கள வடிவானவரும், 

அச்யுதம் - அழிவற்றவரும், 

மகாக்யேயம் - சிறந்த அறிவினால் அறியத்தக்கவரும், 

விஸ்வ ஆத்மானம் - அனைத்திற்கும் ஆத்மாவாக இருப்பவரும், 

பராயணம் - சிறந்த புகலிடமாக இருப்பவருமான, நாராயணனை.


அனைத்து உலகிற்கும் தலைவனை, என்றும் நிலையாய் இருப்பவரும், மங்கள வடிவினரும் சிறந்த அறிவால் அறியத்தக்கவரும், எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருப்பவரும், சிறந்த புகலிடமாக இருப்பவருமான நாராயணனை, த்யானிக்கிறேன் .


4.னாராயணப’ரோஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ |

னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ |

 

நாராயண பர ஜ்யோதி - நாராயணனே சிறந்த ஒளி, 

நாராயண : பர : ஆத்மா - நாராயணனே அனைத்தையும் கடந்த பரமாத்மா, 

நாராயண : பர ப்ரஹ்ம - நாராயணனே பர ப்ரஹ்மம்.

நாராயண : பர தத்வம் - நாராயணனே மேலான உயர்ந்த உண்மை .

நாராயண : பர த்யாதா - நாராயணனே த்யானம் செய்பவர்களுள்,த்யானம் செய்யப் படுபவர்களில் சிறந்தவர் .

நாராயண ; பர த்யானம் - நாராயணனே சிறந்த த்யானம் .


5.யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதே‌உபி’ வா ||

அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ |


ஜகத் சர்வம் - உலகனைத்திலும், 

யத்ய கிஞ்சித் த்ருச்யதே - காணப்படுவது எதுவாயினும், மிகுந்து காணப் படுவத்ஹயினும், 

அபிவா - அல்லது, 

ஸ்ரூயதே - கேட்கப் படுவது எதுவாயினும், 

தத் சர்வம் - அவை அனைத்தையும், 

அந்த - உள்ளும், 

பஹி : ச - புறமும், 

வ்யாப்ய - வியாபித்தபடி, நிறைந்தபடி, ஊடுறிவியபடி, 

நாராயண : ஸ்தித : இருக்கிறார் .

 

உலகனைத்தும் காணப்படுவது,  கேட்கப்படுவது எதுவாயினும், அவை அனைத்தையும் உள்ளும் புறமும்

வியாபித்தபடி நாராயணன் இருக்கிறார்


6.அனம்தமவ்யயம்’ கவிக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |

 பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |


அனந்தம் - எல்லையற்றவரும், முடிவற்றவரும், 

அவ்யயம் - விளக்க முடியாதவரும், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவரும், 

கவிம் - அனைத்தும் அறிந்தவரும், 

சமுத்ரே - சம்சாரப் பெருங்கடலின், 

அந்தம் - முடிவில், இருப்பவரும், 

விஸ்வ சம்புவம் - உலகம் விளையக் காரணமானவரும், மங்கலம் செய்பவரும், 

ஹ்ருதயம் ச அபி -  இதயம், 

அதோ முகம் - கீழ் நோக்கிய, 

பத்ம கோச ப்ரதீகாசம் - தாமரை மொட்டு போல், 

 

முடிவற்றவரும், அனைத்தும் உணர்ந்தவரும், அறிந்தவரும், சம்சாரப் பெருங்கடலின் இறுதியில் இருப்பவரும், 

உலகிற்கு நன்மை செய்பவரும், ஆகிய நாராயணனை, கீழ் நோக்கிய தாமரை மொட்டு போல் அமைந்துள்ள

இதயத்தில் த்யானிக்கின்றேன் .

 

7. அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |

ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் |

 

நிஷ்ட்ட்யா - குரல் வளைக்கு, 

அத - கீழே, 

நாப்யாம் - தொப்புளுக்கு, 

உபரி - மேலே, 

விதஸ்யா : அந்தே - ஒரு சாண் தூரத்தில், 

திஷ்டதி -  இருக்கிறது .

விச்வச்ய - அனைத்து உலகிற்கும்,

மகத் - உயர்ந்த,  சிறந்த, 

ஆயதனம் - உறைவிடம்.

ஜ்வாலமால குலம் - சுடர் வரிசையால் சூழப்ப்பட்டார்ப்போல், 

பாதி - ப்ராகசிக்கிறது .

 

குரல் வளைக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே,  ஒரு சாண் தூரத்தில் இதயம் இருக்கிறது .

உலகிற்கெல்லாம் சிறந்த அந்த உறைவிடம், சுடர் வரிசையால் சூழப்பட்டற்போல் பிரகாசிக்கிறது .

 

8.ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் |

தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் |

 

ஆகோச சந்நிபம் - தாமரை மொட்டு போன்ற இதயம், 

சந்ததம் - நான்கு புறங்களிலும், 

சிலாபி - நாடிகளால், 

லம்பதி - தொங்குகிறது, 

தஸ்ய - அதன், 

அந்தே - உள்ளே, 

சூக்ஷ்மம் - நுண்ணிய, 

சூக்ஷிரம் - ஆகாசம், 

சர்வம் - அனைத்தும், 

தஸ்மின் - அதில், 

ப்ரதிஷ்டிதம் - நிலை பெற்றுள்ளன .

 

தாமரை மொட்டு போன்ற இதயம் நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது .

அதன் உள்ளே ஆகாசம் உள்ளது .அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன .

 

9. தஸ்ய மத்யே’ மஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |

ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ |


தஸ்ய - அதன், 

மத்யே - நடுவில், 

விச்வார்ச்சி - எங்கும் ஒழி வீசுபதாகவும், 

விச்வதோ முக :-எல்லாத் திக்கிலும் செல்வதாகவும், 

மகான் - சிறந்த, 

அக்னி - அக்னி, 

அக்ரபுக்- முதலில் உண்பதாக, 

ஆகாரம் - உணவை, 

விபஜஸ் - பிரித்துக் கொடுப்பதாக, 

திஷ்ட்டன் -  நிலைத்து நிற்பதாக .

அஜர - பழுது படாதததாக .

கவி - அனைத்தையும் காண்பதாக .

 

எங்கும் ஒளி வீசுபதாகவும், எல்லாத் திசைகளிலும் செல்வதாகவும் உள்ள சிறந்த அக்னி, அந்த ஆகாசத்தின் நடுவில் உள்ளது .  பிராணனாகிய அந்த அக்னி, முதலில் உண்பதாகவும்,  உணவைப் பிரித்துக் கொடுப்பதாகவும், நிலைத்து நிற்பதாகவும், தான் பழுது படததாதாகவும், அனைத்தையும் காண்பதாகவும் உள்ளது.

 

10.

திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |

ஸம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததலமஸ்த’கஃ |

தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ


தஸ்ய - அந்த பிராணனின், 

ரச்மைய - கிரணங்கள், 

த்ரியக் - குறுக்கிலும், 

ஊர்த்வம் - மேலும், 

அத - பரவி, 

சந்ததா - எப்போதும் வியாபித்திருக்கின்றன .

ஆபாத தல மஸ்தக :-உள்ளங்கால் முதல் உச்சந்த்தலை வரை, 

ஸ்வம் தேகம் - தனக்குரிய உடலை, 

சந்தாபயதி - உஷ்ணமுள்ளதாகச் செய்கிறது .

தஸ்ய - அதன், 

மத்யே - மத்தியில், 

அணீய - மெலிதான, 

வஹ்நிசிகா - நெருப்புச்சுடர்,

ஊர்த்வா - மேல் நோக்கி அமைந்துள்ளது .

 

அப்பிராணனின் கிரணங்கள், குறுக்கிலும், நெடுக்கிலும், மேலும் கீழும் பரவி, உடல் எங்கும் நிறைந்துள்ளன .  உச்சி முதல் பாதம் வரை தனது உடலை சூடுள்ளதாகச் செய்கிறது .

இதன் நடுவில் மெலிதான அக்கினிச் சுடர் மேல் நோக்கி அமைந்துள்ளது .

 

11.  னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா |

னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |

நீலதோயாத மத்யஸ்தாத் ‘கருத்த மேகங்களின் மத்தியில் இருந்து, 


பாஸ்வரா - ஒளி வீசுகின்ற, 

வித்யுத் லேகா இவ - மின்னர்க் கொடி போல், 

நீவார சூகவத் - நெல் மணியின் சிறு முளை போல், 

தன்வீ - மெல்லியதாக, 

பீதா - பொன்னிறமாக, 

அணு உபமா - நுண்ணியதான அணுவைப் போல், 

பாஸ்வதி - ஒளிர் விட்டுக் கொண்டு இருக்கின்றது .

 

12. தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேபரமா”த்மா வ்யவஸ்தி’தஃ

| ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||

 

தஸ்யா - அந்த, 

சிகாயா - சுடரின்

மத்யே - மத்தியில், 

பரமாத்மா - அனைத்தையும் கடந்த இறைவன் வீற்றிக்கிறார் .

ஸ : அவரே, 

பிரம்மா - பிரம்மா,

ஸ - அவரே, 

ஹரி - விஷ்ணு, 

ஸ - அவரே, 

சிவ - சிவன், 

ஸ - அவரே, 

இந்த்ர - இந்திரன், 

ஸ - அவரே, 

அக்ஷரே - கட்டுக்குள் அடங்காதவர்,அழிவற்றவர், 

ஸ்வராட் - தனது ஒளியுடன் பிரகாசிப்பவர் .

பர : அவருக்கு மேல் எவரும் இல்லாதவர் .

 

அச் சுடரின் நடுவில் இறைவன் வீற்றிக்கிறார் .அவரே பிரம்மா, அவரே சிவன், அவரே ஹரியாகிய விஷ்ணு, அவரே இந்திரன், அவர் அழிவற்றவர் தன் சுய ஒளியுடன் பிரகாசிப்பவர் அவருக்கு மேல் எவரும் இல்லாதவர்.

 

13.றுதக்‍ம் ஸத்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |

ஊர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பாய வை னமோ னமஃ’ ||


ரிதகும் - காணும் பொருள்களின் அழகாகவும் சீராகவும், 

சத்யம் - காண் பொருட்களுக்கு ஆதாரமாகவும் உள்ள, 

பரம் ப்ரஹ்ம - பரம் பொருளை, 

புருஷம் - உடலனைத்தும்,உடல் தோறும் உறைபவனை, 

கிருஷ்ண பிங்கலம் - கரு மேனித் திருமாலும், செம்மேனிச் சிவனும், 

இணைந்த வடிவை, 

ஊர்த்வரேதம் - சக்தி கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் இறைவனை, 

விருபாக்ஷனை - முக்கண் உடயோனை, 

விச்வரூபாய வை - அனைத்தையும் தன வடிவாய்க் கொண்டவனை, 

நமோ நம - பன் முறை வணங்குகிறேன் .

 

காணும் பொருள்களின் ஆதாரமாகவும் அவற்றின் எழிலாகவும் உள்ள பரம் பொருளை, உடல்கள் அனைத்திலும், உறைபவனை, கருமேணித் திருமாலும் செம்மேனிச் சிவனும் ஒருங்கிணைந்த வடிவை தூயவனை, முக்கண்ணனை அனைத்தையும் தன வடிவைக் கொண்டவனை பன் முறை வணங்குகிறேன்


ஓம் னாராயணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||


நாராயணாய - நாராயணனை, 

வித்மஹே - அறிந்து கொள்வோம் .

வாசுதேவாய - வாசு தேவரின் புதல்வனாகிய வாசுதேவனை, 

தீமஹி - த்யானிப்போம் .

தத் விஷ்ணு - அந்த விஷ்ணு, 

ந ;நம்மை, 

ப்ரசோதயாத் - தூண்டட்டும் .


நாரணனை அறிந்து கொள்வோம் .  அந்த வாசுதேவனைத் த்யாநிப்போம் . அந்த விஷ்ணு அவரைத் த்யானிக்க நம்மைத் தூண்டட்டும் .


ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் |

விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் |

விஶ்வதஃ பர’மான்னித்யம்விஶ்வம் னா’ராயணக்‍ம் ஹ’ரிம் |

விஶ்வ’மேவேதம் புரு’ஷ-ஸ்தத்விஶ்வ-முப’ஜீவதி |

பதிம் விஶ்வ’ஸ்யாத்மேஶ்வ’ரக்ம் ஶாஶ்வ’தக்‍ம் ஶிவ-மச்யுதம்

னாராயணம் ம’ஹாஜ்ஞேயம் விஶ்வாத்மா’னம் பராய’ணம் |

 னாராயணப’ரோஜ்யோதிராத்மா னா’ராயணஃ ப’ரஃ |

 னாராயணபரம்’ ப்ரஹ்ம தத்த்வம் னா’ராயணஃ ப’ரஃ |

னாராயணப’ரோ த்யாதா த்யானம் னா’ராயணஃ ப’ரஃ |

யச்ச’கிம்சிஜ்ஜகத்ஸர்வம் த்றுஶ்யதே” ஶ்ரூயதே‌உபி’ வா ||

அம்த’ர்பஹிஶ்ச’ தத்ஸர்வம் வ்யாப்ய னா’ராயணஃ ஸ்தி’தஃ |

அனம்தமவ்யயம்’ கவிக்‍ம் ஸ’முத்ரே‌உம்தம்’ விஶ்வஶம்’புவம் |

 பத்மகோஶ-ப்ர’தீகாஶக்ம் ஹ்றுதயம்’ சாப்யதோமு’கம் |

அதோ’ னிஷ்ட்யா வி’தஸ்யாம்தேனாப்யாமு’பரி திஷ்ட’தி |

ஜ்வாலமாலாகு’லம் பாதீ விஶ்வஸ்யாய’தனம் ம’ஹத் |

ஸன்தத’க்‍ம் ஶிலாபி’ஸ்து லம்பத்யாகோஶஸன்னி’பம் |

தஸ்யாம்தே’ ஸுஷிரக்‍ம் ஸூக்ஷ்மம் தஸ்மின்” ஸர்வம் ப்ரதி’ஷ்டிதம் |

தஸ்ய மத்யே’ மஹான’க்னிர்-விஶ்வார்சி’ர்-விஶ்வதோ’முகஃ |

ஸோ‌உக்ர’புக்விப’ஜம்திஷ்ட-ன்னாஹா’ரமஜரஃ கவிஃ |

திர்யகூர்த்வம’தஶ்ஶாயீ ரஶ்மய’ஸ்தஸ்ய ஸம்த’தா |

ஸம்தாபய’தி ஸ்வம்தேஹமாபா’ததலமஸ்த’கஃ |

தஸ்யமத்யே வஹ்னி’ஶிகா அணீயோ”ர்த்வாவ்யவஸ்தி’தஃ

| னீலதோ’-யத’மத்யஸ்தாத்-வித்யுல்லே’கேவ பாஸ்வ’ரா |

னீவாரஶூக’வத்தன்வீ பீதா பா”ஸ்வத்யணூப’மா |

தஸ்யா”ஃ ஶிகாயா ம’த்யேபரமா”த்மா வ்யவஸ்தி’தஃ

| ஸ ப்ரஹ்ம ஸ ஶிவஃ ஸ ஹரிஃ ஸேம்த்ரஃஸோ‌உக்ஷ’ரஃ பரமஃ ஸ்வராட் ||

றுதக்‍ம் ஸத்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |

ஊர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பாய வை னமோ னமஃ’ ||

ஓம் னாராயணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி | தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

புருஷ ஸூக்தம் தமிழில் ஜடாயு

 (ரிக். பத்தாவது மண்டலம், 90வது சூக்தம்)


ஆயிரம் சிரங்கள் கொண்டோன் புருஷன்

ஆயிரம் விழிகள் ஆயிரம் பாதங்கள்

புவியெங்கும் பரந்து

நிற்கிறான் பத்து திசைகளுக்கும் அப்பால்.  (1)


இவை அனைத்தும் புருஷனே

முன்பிருந்தவை இனி வருபவை எல்லாம்

அழிவற்ற பெருநிலையின் தலைவன் அவன்

பருவுலகு கடந்தோன். (2)


ஈதனைத்தும் அவனது மகிமையே

இதனினும் பெரியோன் புருஷன்

தோன்றியதனைத்தும் அவனது கால் பாகம்

அழிவற்றது முக்கால் பாகம்

அதுவே ஒளியுலகு. (3)


மேற்சென்றனன் முக்கால் பாகத்துப் புருஷன்

அவனது கால்பாகம் தோன்றியது மீண்டும் இங்கு

திசையெங்கிலும் உட்புகுந்து பரந்தனன்

அசையும் அசையாப் பொருளனைத்திலும். (4)


அவனிடத்தினின்று விராட் பிறந்தது

விராட்டிலிருந்து (பல்லுயிர்களாக) பிறந்தான் புருஷன்

பிறந்தவன் முன்னும் பின்னுமாய்

புவியெங்கும் நிறைந்தான். (5)


புருஷனே ஆகுதியாக

வேள்வி செய்தனர் தேவர்கள்

வசந்தம் நெய்யாக

கோடை விறகாக

சரத்காலம் அவியுணவாக

ஒரு வேள்வி. (6)


ஆதியில் தோன்றிய வேள்விப் புருஷன்

அவன் மீது நீர் தெளித்தனர்

நேர்வழியினர் ரிஷிகள் கூடி

வேட்டனர் தேவர்கள். (7)


அனைத்தும் எரிந்த அவ்வேள்வி

அதனின்று திரண்டது நெய்கலந்த ஊண்.

உருவாகின

காற்றால் ஆன உயிர்கள்

வனமிருகங்கள்

கிராமத்து விலங்குகள். (8)


அனைத்தும் எரிந்த அவ்வேள்வி

அதனின்று பிறந்தன ரிக்குகள் சாமகீதங்கள்

பிறந்தன சந்தங்கள்

பிறந்தன யஜுர் மந்திரங்கள். (9)


அதனின்று பிறந்தன பரிகள்

இருவரிசைப் பல் மிருகங்கள்

அதனின்று பிறந்தன பசுக்கள்

வெள்ளாடுகள் செம்மறிகள். (10)


புருஷனை வகிர்ந்த போது

கற்பித்தது எவ்வடிவில்?

முகம் எது கை எது?

தொடை எது கால் எது? (11)


பிராமணன் முகமானான்

கைகள் அரசன்

தொடைகள் வைசியன்

பாதங்களில் சூத்திரன் தோன்றினான். (12)


மனத்தினின்று சந்திரன் பிறந்தான்

விழிகளில் கதிரோன்

முகத்தில் இந்திரன் அக்னி

மூச்சில் பிறந்தது காற்று. (13)


கொப்பூழில் உதித்தது விண்வெளி

சிரத்தினின்று விரிந்தது ஆகாயம்

பாதங்களினின்று பூமி

செவிகளினின்று திசைகள்

அவ்வாறே உருவெடுத்தன

உலகங்கள் அனைத்தும். (14)


ஏழு பரிதி எனும் வேள்விக் கோல் நாட்டி

மூவேழு சமித்துக்கள் கொண்டு

வேள்வி சமைக்கும் தேவர்கள்

புருஷனை யாகப் பசுவாய்க் கட்டினர். (15)


வேள்வியால் வேள்வியை வேட்டனர் தேவர்கள்

அவையே முதல் தர்மங்கள் ஆயின.

முன்னோர் நேர்வழியினர் தேவர்கள் வாழ்

மேன்மை உலகடைவர்

அந்த (தர்மவழிச் செல்லும்) பெரியோர். (16)

மூல மந்த்ரிம்


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் 

கம் கணபதயே வரவரத

ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ||


கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே

கவிம் கவீனாம் உபம ச்ரவஸ்தவமம் |

ஜயேஷ்ட்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே

ஆ ந : ச்ருண்வன் னூதிபி : ஸீதஸாதனம் ||


காயத்ரீ மஹாமந்த்ரம்

தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி |

நந்தோ தந்தி : ப்ரசோதயாத் ||

அஸ்மின் அக்னௌ ஸ்ரீ வல்லப 

மஹா கணபதிம் ஆவாஹயாமி


ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம்


சுதர்ஸன மூலமந்திரம்


ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய

கோபி ஜனவல்லபாய ஓம் பராய பரமபுருஷாய பரமாத்மனே!

பர கர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர

ஸஸ்த்ரதானி ஸம்ஹர ஸம்ஹர

ம்ருத்யோர் மோசய மோசய ஓம் நாமோ பாகவத்தே மஹா சுதர்சனயா

தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன

கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா


சுதர்சனாய மஹா 

தந்னோ சக்ர பிரோஜயோதா


தந்வந்த்ரி 


ஓம் நமோ பகவதே வாஸூதேவாய


தந்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய

ஸர்வாமய விநாசநாய

த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மஹா விஷ்யவே நம


வாசுதாயா வித்மயே

வைத்திய ராஜாய தீமஹி

தன்வந்தரி பிரஜேதயாத்


விஷ்ணு ஸூக்தம் விளக்கம்

Source: https://ramanisblog.in/2014/04/15/விஷ்ணு-ஸூக்தம்-அர்த்தம்-2/

ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் .

ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன .

அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .


ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் 

யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி 

யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ் த்ரேதோரு’காயோ .

விஷ்ணோ - விஷ்ணுவின், 

நுகம் வீர்யாணி - சிறப்பு மிக்க செயல்களை, 

ப்ரவோசம் - போற்றுவோம் .

ய:  - எவர், யார், 

பார்த்திவானி ரஜாம்சி - இப்புவியையும், அதனில் உள்ள அனைத்தையும், 

விமமே - வெளிப்படுத்தினாரோ, (உருவாக்கினாரோ),

ய ;-யார், எவர், 

உத்தரம் - மேலுள்ள, 

சதஸ்தம் - விண்ணுலகை, 

அஸ்கபாய - தாங்கி உள்ளாரோ, 

த்ரேதா - (தனது) மூவடியால், 

விசக்ரமாண: அளந்தாரோ, 

உருகாய - போற்றித் துதிக்கப் படுகிறாரோ,

யார் இப்புவியையும், மேலே உள்ள விண்ணுலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து, தாங்குகின்ராரோ, 

மூன்று அடிகளால் மூவுலகையும் அளந்தாரோ, பெரியோரால் போற்றப்படுகிராரோ, அந்த விஷ்ணுவின் சீரிய செயல்களைப் போற்றுவோம் .

2.விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’

ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

விஷ்ணோ -விஷ்ணுவின், 

ரராடமஸி -நெற்றியாய் விளங்குகிறாய், 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

பிருஷ்டம் அஸி -பின் புறமாக உள்ளாய், 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

ஶ்னப்த்ரே- ஸ்த – இரண்டு கால்களாக உள்ளீர்கள், 

விஷ்ணோ –விஷ்ணுவின்,

ஸ்யூ:அஸி -நாடிகளாக இருக்கிறாய்.

விஷ்ணோ -விஷ்ணுவின், 

த்ருவம் அஸி -முடிச்சுகளாக உள்ளீர்கள்.

வைஷ்ணவமஸி -விஷ்ணுமயமாக இருக்கிறாய், 

விஷ்ணவே -விஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக,

த்வா -உன்னை (வணங்குகிறேன் ).

யக்ய சாலையின் மேல் விட்டமே ! நீ விஷ்ணுவின் நெற்றியாக விளங்குகிறாய் .

பின் புறமாக இருக்கிறாய். வாயிற் கால்களே !

 

நீங்கள் அவரது இரு கால்களாக உள்ளீர்கள். 

கயிறே! நீ,  அவரது நாடிகளாக இருக்கிறாய் .

முடிச்சுக்களே !

நீங்கள்,  அவரது முடிச்சுகளாக உள்ளீர்கள் .


3.தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | 

னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |

உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | 

விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ |


யத்ர -எங்கு,  எங்கெல்லாம்,

தேவயவ -தேவர்கள், 

மதந்தி -மகிழ்கிறார்களோ, 

நர :-மனிதர்கள், 

ப்ரியமிபிபாத -செல்ல விரும்புகிறார்களோ, 

உருக்ரமஸ்ய -விஷ்ணுவின், 

ஸ ஹி பந்துரிஸ்தா -மனத்திற்கு உகந்த இடமோ, (இருப்பிடமோ ),

விஷ்ணோ -விஷ்ணுவின், 

பரமே பதே -உயர்ந்த, அனைத்திற்கும் மேலான திருவடியில், 

மத்வ : அமுதத் தேனூற்று பெருகுகிறதோ, 

ததஸ்ய -அங்கே,

அச்யாம் -அடைவேனாக.

4.ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | 

ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ |

யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | 

அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா”|

பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | 

ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி |


எங்கு தேவர்கள் மகிழ்ந்து இருக்கிறார்களோ, எங்கு மனிதர்கள் செல்ல விரும்புகிறார்களோ, 

எது விஷ்ணுவாகிய உமக்கு உகந்த இருப்பிடமோ, எங்கே அமுதத் தேனூற்று பெருகுகிறதோ, 

அந்த விஷ்ணுவின் திருவடியை அடைவேனாக,

 

கிரிஷ்டா -மலை மீது,

குசர -திரிகின்ற, 

பீமக : மிருக ;-பெரிய யானை, 

யஸ்ய -யாருடைய, 

உருஷு, த்ரிஷு விக்ரமநேஷு -மூன்று பெரிய அடிகளுள், 

விஸ்வா -அனைத்து, 

புவனானி -உலகங்களும், 

அதிஷியந்தி -அடங்குகின்றனவோ, 

-விஷ்ணு – ப்ரதத் -அந்த விஷ்ணுவை, 

வீர்யாய -சிறப்பிற்காக, 

ஸ்தவதே -போற்றுவோம் .

தனுவா -அத்திருமேனி, 

மாத்ரயா பர ;வருதான ;- அளவில் அடங்காதது .

தே -அதன் (உமது ),

மஹித்வம் -சிறப்புகளை, 

அனு அச்னுவந்தி -அறிய முடியாது .


மலையில் உலவும் பெரிய யானை போல் சுதந்திரமானவரும்,கட்டுக்கு அடங்காதவரும், 

தனது மூன்று அடிகளுக்குள் அனைத்து உலகங்களையும் அடக்கிய்வருமான அந்த விஷ்ணுவை அவரது

செயல் சிறத்திற்காக போற்றுவோம் .

இறைவனே !

உமது திருமேனி அளவிற்கு அடங்காதது .

உமது சிறப்புக்கள் அறிய முடியாதவை .


5.உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | பரமஸ்ய’ வித்ஸே | விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் .

தே -உமது, 


ப்ருதிவ்யா –நறுமணம் நிறைந்த பூமி, 

உபே -இரண்டை, 

வித்ம-அறிவோம் (நாங்கள் )

விஷ்ணோ தேவ -ஒளி திகழ் திருமாலே !

த்வம் -நீர் மட்டுமே, 

பரமஸ்ய -உயர்ந்த,  மேலான உலகை,

வித்சே –அறிவீர்,

ஏஷ -இந்த, 

ப்ருத்வீம் -புவியில், 

விஷ்ணு -விஷ்ணு, 

விசக்ரமே -நடந்து, 

ஏதாம் -அதனை, 

க்ஷேத்ராய -இருப்பிடமாகக் கொள்வதற்கு, 

மனுஷே –மனிதர்களுக்கு,

ததஸ்யன் -கொடுத்துள்ளார் .

விஷ்ணுவே !

 

நறுமணம் நிறைந்ததான பூமி மற்றும் விண்ணுலகம் இரண்டையும் நாங்கள் அறிவோம் .

ஒளி மிக்க திருமாலே !

நீர் மட்டுமே மேலான் உலகை அறிவீர் .

நீர் நடந்த இந்த பூமியை மனிதர்களுக்கு இருப்பிடமாகக் கொடுத்துள்ளீர் .

6.த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | 

ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | 

விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | 

த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||


கீரய ;ஜனாஸ -பணிவு மிக்க மக்கள், 

அஸ்ய -அவரில், 

த்ருவாஸ -பாதுகாப்பான உறைவிடைத்தை தேடுகிறார்கள் .

ஏதாம் -இந்த, 

ஊருஷிதம் -பூமியை, 

சுஜனிமா -விரிந்து பரந்த வாழ்விடமாக, 

சகார -செய்துள்ளார் .

சதவர்ச்சசம் -அளவிலா எழில் பொருந்திய, 

ஏஷு -இந்த, 

ப்ருத்வீம் -பூமியை, 

தேவ -தேவனான விஷ்ணு, 

மகித்மா -தந்து பெருமையால், 

த்ரி -மும்முறை, 

விசக்ரமே–அளந்துள்ளார் .

தவ -உமது, 

ஸ : ஸ்தவீயான் -சிறந்த, மேலான பெருமை, 

பிரவிஷ்ணு -விஷ்ணு, 

அஸ்து -உள்ளது .

து –மேலும்,

ஏஷம் ஹி -இதுவே, 

அஸ்ய ஸ்தவிரஸ்ய -இந்த மாபெரும் சிறப்பின், 

நாம -பெயர்.

பணிவு மிகுந்த மக்கள், அவரில் பாதுகாப்பான உறைவிடத்தைத் தேடுகிறார்கள் .

இப்பூமியை,  அவர்,  இந்த மக்களுக்காக விரிந்து பரந்ததாகச் செய்துள்ளார் .

எழில் கொஞ்சும் இப்புவியை விஷ்ணு தனது கீர்த்தியினால் மும்முறை அளந்துள்ளார் .

மஹா விஷ்ணுவே !

உமது மேலான காக்கும் திறத்தால் நீர் விஷ்ணு எனப் பெயர் பெறுகிறீர் .

இது உமது பெருமைக்குப் பொருத்தமாக உள்ளது .

7.அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ |

இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே ||


ய ;-எந்த, 

ப்ருதிவ்யா -பூமியின், 

சப்ததாமஅபி -ஏழு பகுதிகளிலும், 

விசக்ரமே -நடந்தாரோ, 

அத -அந்த பூமியின், 

தேவா -தேவர்கள், 

ந -நம்மை, 

அவந்து -காக்கட்டும் .

விஷ்ணு -விஷ்ணு, 

இதம் விசக்ரமே -நடந்தபோது, 

பதம்-தமது திருவடிகளை, 

திரேதா -மும்முறை, 

நிதேத -வைத்தார் .

அஸ்ய -அவரது, 

பாம்சுரே -பாத தூசியால், 

ஸமூட -மூடப்பட்டது .


8.த்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | ததோ தர்மா’ணி தாரயன்’ |

விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

விஷ்ணு -விஷ்ணு, 

கோபா -அனைத்தையும் காப்பவரும், 

அதாப்ய -ஏமாற்றப்பட முடியாதவரும், 

த்ரீணி பதா -மூவடிகளால், 

விசக்ரமே -அளந்து, 

அத -இங்கே, 

தர்மாணி -தர்மங்களை, 

தாரயன் -நிலை நிறுத்தினார் .

இந்த்ரஸ்ய -இந்திரனனின், 

யுஜ்ய :சஹா -நெருங்கிய நண்பனான, 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

கர்மாணி -செயல்களை, 

பச்யத -பாருங்கள்.

யத : அவற்றின் மூலம், 

வ்ரதானி -வாழ்க்கை நெறிகளை, 

பஸ்பசே -வெளிப்படுத்தினார் .

விஷ்ணு அனைத்தையும் காப்பாற்றுவரும் ஒருவராலும் ஏமாற்றப்பட முடியாதவரும் ஆவார் .

தனது மூன்று அடிகளால் இவுலகை அளந்து,,இங்கே தர்மத்தை நிலை நிறுத்தியுள்ளார் .

இந்திரனின் நெருங்கிய நண்பனான விஷ்ணுவின் செயல்திறத்தைப் பாருங்கள் .

அவற்றின் மூலம் வாழ்க்கை நியதிகளை வெளிப்படுத்தினார் .

9.தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | 

திவீவசக்ஷுராத’தம் | தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ 

ஜாக்றுவாக்‍ம்ஸஸ்ஸமி’ன்ததே | 


விஷ்ணோர்யத்ப’ரமம் பதம் 

ஆததம் – பரந்து  விரிந்த, 

திவி இவ -வானம் போல், 

சஷு -கண்களை உடையவர்கள், 

ஸூரய -ரிஷிகள், 

தத் விஷ்ணோ -அந்த விஷ்ணுவின், 

பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை, 

ஸதா -எப்பொழுதும், 

பஸ்யந்தி -காண்கிறார்கள் .

விப்ராஸ் -கவிதையை விரும்புபவர்களும், 

விபன்யவ -முனிவர்களும், 

ஜாக்ர்வாம்ஸ -விழிப்புற்றவர்களுமான, 

யத் -இவர்களே, 

விஷ்ணோ -விஷ்ணுவின், 

யத் பரமம் பதம் -மேலான சிறந்த உறைவிடத்தை, 

ஸமிந்ததே -ஒளிரச் செய்கிறார்கள் .

விரிந்து பரந்த வானம் போல் கண்களை உடையவர்களான ரிஷிகள், விஷ்ணுவின் மேலான உறைவிடத்தை

,எப்போதும் காண்கிறார்கள் .கவிதையை விரும்புபவர்களும், முனிவர்களும்,விழிப்புற்றவர்களுமான

இவர்களே விஷ்ணுவின் மேலான அந்த உறைவிடத்தை ஒளிரச் செய்கிறார்கள் .


பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

பர்யாப்த்யா -அளவற்ற, 

அனந்த ஆயாத -எல்லையில்லா செல்வம் பெறுவதற்கும், 

ஸர்வத்தோம -மங்காப் புகழ் அடைவதற்கும், 

அதிராத்ரம் – அதிராத்ரம்,

உத்தம -சிறந்த, 

மஹ -உயர்ந்த யாகம், 

பவதி- ஆகிறது .

தென் -அந்த யாகத்தால், 

ஸர்வஸ்ய ஆப்த்யை- அனைத்தும் கிடைக்கிறது .

ஸர்வஸ்ய ஜித்யை -அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

சர்வம் ஏவ -அனைத்தும், 

ஆப்னோதி -அடையப்பெருகின்றன .

ஸர்வம் -அனைத்தும் வளம் பெறுகின்றன .

எல்லையில்லா வற்றாத செல்வம் பெறுவதற்கும், மங்காப் புகழ் பெறுவதற்கும், அதிராத்ரம் என்னும் யாகமே

மேலான யாஹம் ஆகும் .

அந்த யாகத்தால் அனைத்தும் கிடைக்கின்றன .

அனைத்து வெற்றிகளும் கிட்டுகின்றன .

அனைத்தும் அடையப் படுகிறது .

அனைத்தும் வளம் பெறுகின்றன .

விஷ்ணு ஸூக்தம் நிறைவுற்றது.

ஓம் தத் ஸத்

ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் 

யஃ பார்தி’வானி 

விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ விஷ்ணோ’ரராட’மஸி விஷ்ணோ”ஃப்றுஷ்டம’ஸி விஷ்ணோஃ ஶ்னப்த்ரே”ஸ்தோ விஷ்ணோஸ்ஸ்யூர’ஸிவிஷ்ணோ”ர்த்ருவம’ஸி வைஷ்ணவம’ஸி விஷ்ண’வே த்வா ||

தத’ஸ்ய ப்ரியமபிபாதோ’ அஶ்யாம் | னரோ யத்ர’ தேவயவோ மத’ன்தி |உருக்ரமஸ்ய ஸ ஹி பன்து’ரித்தா | விஷ்ணோ” பதே ப’ரமே மத்வ உத்ஸஃ’ | 

ப்ரதத்விஷ்ணு’ஸ்ஸ்தவதே வீர்யா’ய | 

ம்றுகோ ன பீமஃ கு’சரோ கி’ரிஷ்டாஃ | 

யஸ்யோருஷு’ த்ரிஷு விக்ரம’ணேஷு | 

அதி’க்ஷயன்தி புவ’னானி விஶ்வா” |

பரோ மாத்ர’யா தனுவா’ வ்றுதான | 

ன தே’ மஹித்வமன்வ’ஶ்னுவன்தி ||

உபே தே’ வித்மா ரஜ’ஸீ ப்றுதிவ்யா விஷ்ணோ’ தேவத்வம் | 

பரமஸ்ய’ வித்ஸே | 

விச’க்ரமே ப்றுதிவீமேஷ ஏதாம் | 

க்ஷேத்ரா’ய விஷ்ணுர்மனு’ஷே தஶஸ்யன் | 

த்ருவாஸோ’ அஸ்ய கீரயோ ஜனா’ஸஃ | 

ஊருக்ஷிதிக்‍ம்ஸுஜனி’மாசகார | 

த்ரிர்தேவஃ ப்று’திவீமேஷ ஏதாம் | 

விச’க்ரமே ஶதர்ச’ஸம் மஹித்வா | 

ப்ரவிஷ்ணு’ரஸ்து தவஸஸ்தவீ’யான் | 

த்வேஷக்க் ஹ்ய’ஸ்யஸ்தவி’ரஸ்ய னாம’ ||

அதோ’ தேவா அ’வம்து னோ யதோ விஷ்ணு’ர்விசக்ரமே | 

ப்றுதிவ்யாஃஸப்ததாம’பிஃ | 

இதம் விஷ்ணுர்விச’க்ரமே த்ரேதா னித’தே பதம் | 

ஸமூ’டமஸ்ய பாக்‍ம் ஸுரே || த

்ரீணி’ பதா விச’க்ரமே விஷ்ணு’ர்கோபா அதா”ப்யஃ | 

ததோ தர்மா’ணி தாரயன்’ | 

விஷ்ணோஃ கர்மா’ணி பஶ்யத யதோ”வ்ரதானி’ பஸ்ப்றுஶே | 

இன்த்ர’ஸ்ய யுஜ்யஃ ஸகா” ||

தத்விஷ்ணோ”ஃ பரமம் பதக்‍ம் ஸதா’ பஶ்யன்தி ஸூரயஃ’ | 

திவீவசக்ஷுராத’தம் | 

தத்விப்ரா’ஸோ விபன்யவோ’ ஜாக்றுவாக்‍ம்ஸஸ்ஸமி’ன்ததே | 

விஷ்ணோர்யத்ப’ரமம் பதம் | 

பர்யா”ப்த்யாஅன’ன்தராயாய ஸர்வ’ஸ்தோமோ‌உதி ராத்ர உ’த்தம மஹ’ர்பவதி ஸர்வஸ்யாப்த்யை ஸர்வ’ஸ்ய ஜித்த்யை ஸர்வ’மேவ தேனா”ப்னோதிஸர்வம்’ ஜயதி ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

ஸ்ரீ ஸுக்தம் ஒரு விளக்கம்

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |


ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே,

ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும்.

ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும்,

ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும்,

சந்த்ராம்- நிலவு போன்றவளும்,

ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,

லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்வாய் —————1


பொன் நிறத்தவளும்,பாவங்களைப் போக்குபவளும் தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும், பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2


ஜாதவேத -அக்னியே,

அஹம் -நான்,

ஹிரண்யம் -பொன்னையும்,

காம் -பசுக்களையும்,

அஸ்வ -குதிரைகளையும்,

புருஷான் -உறவினரையும்,

விந்தேயம் -பெறுவேனோ,

தாம் -அந்த,

லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,

யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்………………………………..2


அக்னி தேவனே, யாருடைய அருளால்,நான் பொன்னையும் பசுக்களையும், குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ, அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய். அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.


அஸ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும்,

ரத மத்யாம் -நடுவில் ரதங்களும்,

ஹச்திநாத ப்ரபோதிநீம் -களிறுகளின் பிளிறல்களை தனது அறிகுறியாகக் கொண்டவளுமான,

ஸ்ரியம் தேவீம் -மனதிற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை,

உபஹ்வையே -அழைக்கிறேன் .

ஸ்ரீ தேவி -செல்வத்தின் உறைவிடமான திருமகளே,

மா ஜுஷதாம் -என்னிடம் இன்புற்று உறைவாய் .


முன்னால் குதிரைகள், நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும்,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .

திருமகளே! நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக .


காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…………………….4


ஸ்மிதாம் -புன்முறுவல் தவழ்பவளும்,

ஹிரண்யப் ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் உறைபவளும்,

ஆர்த்ராம் -கருணை நிறைந்தவளும்,

ஜ்வலந்தீம் -ஒழி வீசுபவளும்,

த்ருப்தாம் -மன நிறைவுடயளும்,

தர்பப்பயந்தீம் -தன்னைத் துதிப்போர்க்கு மகிழ்ச்சியை அருளுபவளும்,

பத்மே -தாமரையில்,

ஸ்திதாம் -நிலை பெற்றவளும்,

பத்ம வர்ணாம் -தாமரை நிறத்தவளும்,

காம் -யாரோ,

தாம் ஸ்ரியம் -அந்த மனத்திருக்கு உகந்த லக்ஷ்மியை,திருமகளை,

இஹ -இங்கே,

உபஹ்வையே–வேண்டுகின்றேன்.


குறுநகை தவழ்பவளும், பொன் மயமான கோட்டையில் உறைபவளும்,கருணை நிறைந்து ததும்புவளும்,ஒளி நிறைந்தவளும், மகிழ்ச்சி நிறைந்தவளும்,மகிழ்ச்சியைத் தருபவளும்,தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .


சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||


லோகே -உலக வாழ் உயிர்களுக்கு,

சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும்,

பிரபாஸாம் -சிதறும் ஒளி மிக்கவளும்,

யசஸா -தன மகிமையால்,

ஜ்வலந்தீம் -சுடர் விட்டு ஒளிர்பவளும்,

தேவ ஜுஷ்டாம் -தேவர்காளால் வழிபடப்படுபவளும்,

உதாராம் -கழிவிரக்கம் நிறைந்தவளும்,

பத்மிநீம் -தாமரையைத் தாங்கியவளும்,

ஈம் -ஈம் என்னும் பீஜ மந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளும் ஆன,

தாம் ஸ்ரியம் -அந்த மனதிற்குகந்த மகலக்ஷ்மியை,

அஹம் -நான்,

சரணம் ப்ரபத்யே -அடைக்கலம் புகுகிறேன் .

த்வாம் -உன்னை,

வ்ருணே -வேண்டுகிறேன்.

மே -என்னிடமிருந்து,

அலக்ஷ்மி -வறுமை,

நச்யதாம் – அழியட்டும் .


நிலவைப் போன்றவளும்,ஒளிநிரைந்தவளும், சுடர்விட்டு ஒளிர்பவளும்,தேவர்களால் வழிபடப்படுபவளும் கருணை மிக்கவளும்,தாமரையைத் தாங்கியவளும்,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷிமயை நான் சரணடைகிறேன். தேவியே! என் வறுமை விலகி அழிய அருள்வாய் .


ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |

தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ


ஆதித்யவ’ர்ணே – சூரியனின் நிறத்தவளே,

தவ-உனது,

தபசக -தவத்தால்,

வனஸ்பதி ‘கானகங்களுக்குத் தலைவனாகிய,

பில்வக வ்ருக்ஷ -வில்வ மரம்,

அதிஜாதக -உண்டாயிற்று .

அத -அதே போல்,

தபஸா -தவத்தால்,

தஸ்ய -அதன்,

பலானி -பலத்தால்,விளைவாக,பழங்கள்,

மாயா -அறியாமை ஆகிய,

அந்தராயாக -எனது உள்ளத்தில் உள்ள அகத்தடயையும்,

அ’லக்ஷ்மீஃ -அமங்கலமாகிய .

பாஹ்யா -புறத்தடயையும்,

நுதந்து -அழிக்கட்டும்.


கதிரவன் நிறத்தவளே,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .

அதன் பழங்கள் அறியாமையாகிய அகத்தடயையும்,அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே அழிக்க்கட்டும் .


உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||…….7


தேவஸகஃ’குபேரனும்,

கீர்திச்ச -புகழின் தேவனும்,

மணின சஹ -என்னை நாடி வர வேண்டும் .

அஸ்மின் -இந்த,

ராஷ்ட்ரே‌-நாட்டில்,

ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .

மே -எனக்கு,

கீர்த்திம்- பெருமையும்,

ரிதிம் -செல்வமும்,

ததாது வழங்குவாய் .

செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.

உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .

நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .


க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |

அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||…… 8


க்ஷுத்பி’பாஸாம’லாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும்,

ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான,

அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை,

அஹம் -நான்,

மீ க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து

நாசயாமி -விலக்குகிறேன் .

சர்வாம் -எல்லா,

அபூதிம் -ஏழ்மையையும்,

அசம்ருத்திம் ச -வறுமையையும்,

நிர்ணுத -அகற்றி அருளுக .


பசி தாகத்தினால் மெலிந்தவளும்,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன்.  எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .


கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…9


கம்தத்வாராம்-நறுமணத்தின் இருப்பிடமானவளும்,

துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும்,

நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும்,

கரீஷிணீம் -அனைத்தும் நிறைந்தவளும்,

சர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும்,

ஈஸ்வரீம் -தலைவியும் ஆன,

தாம் ஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை,

இஹ -இங்கே,

உபஹ்வையே–எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .


நறுமணத்தின் இருப்பிடமானவளும்,எவராலும் வெல்லப்பட முடியாதவளும், என்றும் இனிமையைத் தருபவளும், அனைத்தும் நிறைந்தவளும்,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்


மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||..10.


ஸ்ரீ -திருமகளே !,

மனசஹ -மனத்தில் எழும்,

காமம் -ஆசைகளையும்,

ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும்,மகிழ்ச்சிகளையும்,

வாக்-வாக்கில்,

சத்யம் -உணமையையும்,

பசூனாம் -பசுக்களாலும்,

அன்னச்ய -உணவினாலும்,

அசீமகி,-அனுபவிக்க வேண்டும் .

மயி -எனக்கு,

கீர்த்தி -பெருமை,

ஸ்ரயதாம் -உண்டாகட்டும் .

திருமகளே !

தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும்,மகிழ்ச்சியையும்,வாக்கில் உண்மையையும்,

பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால்,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .

எனக்கு புகழ் உண்டாகட்டும் .


கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||..11


கர்தமே’ன. கர்த்தமரே (கர்தம முனிவரே ),

கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )

பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி,

மயி -எனக்கு,என்னிடம்,

சம்பவ -தோன்ற வேண்டும் .

பத்ம மாலினீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும்,

ஸ்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான,

மாதாம் -அன்னையும்

மே -என்,

குலே- என் குலத்தில்,

வாசய -தங்கச் செய்ய வேண்டும் .

கர்த்தமரே !

உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் .

தாமரை மாலை அணிந்தவளும்,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச்

செய்ய வேண்டும்.

சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன்)

ஆபஹ -தண்ணீர்,

ச்னிக்தானி ;சிறந்த உணவுப் பொருள்களை,

ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும் .

மே -எனது,

க்ருஹே -எனது இல்லத்தில்,

வசஹ -வசிக்க வேண்டும் .

ச -மேலும்,

தேவீம் -தேவியும்,

மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன,

ஸ்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை,

மே -என் .

குலே -குலத்தில்,

நிவாசய – எப்போழ்தும் வாழும்படி அருள வேண்டும் .


லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே ! நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் . நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் . தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .


ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||…13.


ஜாத வேத -அக்னியே !,

ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும்,

புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும்,

புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும்,

பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,

பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும்,

சந்திராம் -நிலவைப் போன்றவளும்,

ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான,

லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.


அக்னியே ! கருணை நிரம்பிய மனதை உடையவளும்,தாமரை மலரில் உறைபவளும்,உலகை ஊட்டி வளர்ப்பவளும், குங்குமத்தின் நிறத்தை உடையவளும்,தாமை மாலை அணிபவளும்,பொன் மயமானவளுமான திருமகளை, என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .


ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |

சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||..14


ஜாத வேத -அக்னியே!,

ய-யார்,

ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும்,

கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும்,

யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,

சுவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும்,

ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும்,

சூர்யாம் -பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும்,

ஹிரண்மயீம் -பொன் மயமானவளும்,

ஆன,

லக்ஷ்மீம் -மகாலக்ஷ்மீயை,

மே -என்னிடம்,

ஆவஹ -எழுந்து அருளச் செய்ய வேண்டும்.


அக்னியே! கருணை நிரம்பியவளும்,செயல் திறத்தில் கம்பீரமானவளும்,நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும்,அழகிய நிறத்தை உடையவளும்,பகலவன் போல் பிரகாசிப்பவளும்,பொன் மயமான லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ 

தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||..14.


ஜாத வேத -அக்னியே !,

யஸ்யாம் -யாரால்,

பிரபூதம் -அளவிட முடியா,

ஹிரண்யம் -பொன்னும்,

காவஹ -பசுக்களும்,

தாஸ்ய -பணிப் பெண்டிரும்,

அஸ்வான் -குதிரைகளும்,

புருஷான் -பணியாட்களும்,

அஹம் -நான்,

விந்தேயம்-பெறுவேனோ,

தாம் -அந்த,

லக்ஷ்மீம் -திருமகளை,

மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிற்குமாறு,

ஆவஹ -செய்தருள வேண்டும் .

அக்னி தேவனே !


யாரால் அளவிட முடியாத பொன்னும், பசுக்களும்,பணிப் பெண்டிரும்,குதிரைகளும் மற்றும்

பணியாட்களையும் நான் பெறுவேனோ,அந்த திருமகள்,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .


ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||


மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம், திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம்,

அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக . 

இதனின்று பலஸ்ருதி, ஆகவே பொருள் இங்கு தரப்படவில்லை.


ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||

அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |

ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |

தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |

அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||

ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |

னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |

சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||


ஶ்ரீ ஸூக்தம்

ஓம் || ஹிர’ண்யவர்ணாம்ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ மஆவ’ஹ ||


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம்புரு’ஷானஹம் ||


அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |

ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயேஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||


காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |

பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம்தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||


சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸாஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |

தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||


ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |

தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||


உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |

ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||


க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |

அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம்னிர்ணு’த மே க்றுஹாத் ||


கம்தத்வாராம் து’ராதர்ஷாம்னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |

ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம்தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||


மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |

பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயிஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||


கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயிஸம்ப’வ கர்தம |

ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||


ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானிசிக்லீத வ’ஸ மே க்றுஹே |

னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||


ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம்ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |

ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ மஆவ’ஹ ||


ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |

சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ மஆவ’ஹ ||


தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம்காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||


ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||


ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||


ஓம் ஶாம்திஃ ஶாம்திஃஶாம்திஃ’ ||


ஶ்ரீசுக்தம் - திருமகள் ஸ்ரீ ஸுக்தம் – தமிழ்த் தழுவல்


(வேதத்தில் வருகின்ற மிக முக்கியமானதும், இனிமையானதுமான மந்திரங்களில் ஸ்ரீ ஸுக்தமும் ஒன்று. திருமகளின் அருளைப் பெற்றுத் தருமாறு அக்கினியை வேண்டுவதாகத்தான் இதில் பெரும்பாலான மந்திரங்கள் இருக்கின்றன. 

எதற்காக அக்கினி வேண்டப்படுகிறான்? அக்கினிக்கு மஹா தூதன் என்று பெயர். இந்தப் படைப்பில் பல்வேறு உலகங்கள் உள்ளன. அதில் பல்வேறு உலகங்களிலும் மனத்தால் கூட நுழைய முடியாது. இந்த உலகங்கள் பற்றிய விவரங்கள் ‘பிரம்மாண்ட புராணம்’ என்னும் பழைய நூலில் காணப்படுகின்றன. அவற்றை என் குருநாதர் சற்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்கள், ‘The Structure of the Universe’ என்னும் அருமையான ஆங்கில நூலில் விவரித்திருக்கிறார். 

அக்கினியால் மட்டுமே எந்த உலகத்திற்கும் சென்றுவர முடியும். அக்கினியே நம்முடைய பிரார்த்தனைகளை ஏந்திக்கொண்டு, செல்லவேண்டிய இடங்களுக்குச் சென்று, பெறவேண்டிய ஆசிகளைப் பெற்றுக்கொண்டு நம்மிடம் கொண்டு தருகிறான்.

ஸ்ரீ ஸுக்தம், ‘வாக்’ என்னும் பெண்முனிவர் மூலம் வெளிப்பட்டது என்பார்கள். 

மேலோட்டமாகப் பார்த்தால், இது கோரிக்கைகள் நிறைந்த ஒரு பிரார்த்தனை போலத் தென்படுகிறது. திருமகளின் அருளை வேண்டிப் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்மணி, ஒரு கட்டத்தில் தானே இலக்குமியாகி, ‘நான் என் வீட்டிலிருந்து உனக்கு மூத்தவளானவளை விலக்குவேன்!’ என்று ஆவிர்ப்பு வந்தவள் போலச் சொல்கிறார். அடுத்த மந்திரத்தில் ஒரு பக்தையாக வேண்டுகிறார்! ஆச்சரியம் பெண்ணின் சக்தி!

பிரார்த்தனை, கோரிக்கை இவற்றைத் தாண்டி, இது முழுக்க முழுக்க ஆழ்ந்த யோக அனுபவத்தைச் சொல்கிறது. மீண்டும் மீண்டும் இதில் பொன்வண்ணமும், தாமரையும் வருகின்றன. அது நம் இதயக் கமலமாகிய அனாஹதத்தைத்தான் குறிக்கிறது. பொன்னாலான தாழ்வாரமாகத்தான் அங்கே தென்படுகிறது.

இதில்வரும் குதிரைகள் சுவாச நெறியையும், தேர்கள், ஒவ்வொரு சக்கரமாகச் செல்வதையும் குறிக்கின்றன. ஒரு யானைப் பிளிறல் இங்கே சொல்லப்படுகிறது. அது என்ன? யோகத்தில் அமர்ந்து, அனாஹதத்தில் நுழையும்போது, அந்தரங்கத்தில் ஓர் யானைப் பிளிறல் கேட்குமாம். உள்ளே கேட்கும் அந்த ஒலியில் காது செவிடாகிப் போன கதைகளும் உண்டு. பின்னர் கேட்கும் திறன் மீளுமாம். ஆனால், முக்கியம் என்னவென்றால், அந்தப் பிளிறலால் கர்மவினை அறவே தகர்க்கப்படுமாம். 

அந்த யானைப் பிளிறலுக்குப் பிறகே அந்தத் தங்கமகள் தென்படுகிறாள்!

இப்படி எத்தனையோ நுண்மைகள் கொண்ட ஸ்ரீ ஸுக்தத்தைப் பற்றி என் குருநாதர் என்னிடம் விளக்கியதுண்டு. இதை எளிமையாகத் தமிழாக்கம் செய்வேனென்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. இந்த நவராத்திரியில் இதுவும் நடந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.)

எங்கெங்கும் தூதுவனாய் ஏறியிறங் கும்தீயே

தங்கமய மாகத் தகதகக்கும் தேவியை


வெள்ளிப்பொன் மாலை விதம்விதமாய்த் தான்சூடி

வெள்ளிநில வாக நெகிழ்ந்து சிரிப்பவளை


பார்வையின் ஓரத்தே பாவம் தகர்ப்பவளை

ஆர்மனமும் கூவும் அலைமகளாய் வீற்றவளை


பொன்னே உருவாகப் பூத்த பொலிவழகை

என்னுள் எழுந்தருளச் செய்திடுவாய் அக்கினியே! (1)


யார்மூலம் செல்வமெல்லாம் நானும் பெறுவேனோ

பார்கவியை என்றுமென் பக்கத் திருக்கவிடு


சற்றும் விலகாமல் சார்ந்திருக்கச் செய்துவிடு

எற்றைக்கும் என் தேவி என்னோ டிருக்க! (2)


பரிகளோ துள்ள ரதங்கள் பறக்கக்

கரிகள் பிளிறக் ககனமகள் பின்வந்தாள்


என்மனம்நின் றாளும் திருமகளே வந்துவிடு

என்னுள்ளே நீமகிழ்வாய் எப்போதும் தங்கிவிடு (3)


புன்னகையே உன்வடிவம் பொன்மயமே உன்னில்லம்

என்றும் கருணையே நின்னியல்பே பொன்விழியே!


நீயே நிறைவு! நினைத்துதிப்பார் யாவர்க்கும்

நீயே நிறைவை மிகமகிழ்வாய்ப் பெய்திடுவாய்


வண்ணக் கமலத்துள் வண்ணக் கமலத்தோய்!

எண்ணற் கினிய திருவே இறைஞ்சுகின்றேன் (4)


நெஞ்சில் குளிரும் நிலவாய், ஒளிசிதறிக்

கஞ்ச மலரேந்திக் கஞ்சமலர் வீற்றவளாய்


தேவர் வணங்கிடும் தீயாய், மிகநெகிழ்ந்தே

ஆவலுடன் வந்தே அருள்பவளாய், ஈமென்னும்


நுண்ணொலியின் உள்ளிலங்கும் பெண்ணே! மனக்கினியோய்!

ஒண்பதம் வீழ்ந்தே ஒடுங்கியுனை வேண்டுகிறேன்


என்வறுமை ஏதெனினும் இன்றே விலகட்டும்

பொன்னேயென் நெஞ்சிலுன்றன் பூமுகமே மேவட்டும் (5)


பானுவின் பொன்னிறத்தோய்! பாவாய்நீ செய்தவத்தால்

கானகத்து மன்னன் கனகவில்வம் தோன்றி


மரங்களெல்லாம் தீங்கனிகள் மண்டின! ஞானம்

தரும்பழத்தைத் தந்தெம் அறியாமை நீக்காய்!


அறியாமை நீக்கி அமங்கலங்கள் போக்கிச்

செறிவும் தெளிவும் செழித்திடச் செய்திடுவாய் (6)


செல்வக் குபேரனும் கீர்த்தியின் தேவனும், என்

இல்லம் விரும்பி இனிதே வரச்செய்க!


நின்னருள் வீசுமிந்தப் பொன்னாட்டில் நான்பிறந்தேன்

நின்கருணை யாலெனக்குச் செல்வமெலாம் நல்கிடுக! (7)


“செல்வத் திருந்து விலகிய தவ்வையை

இல்லத் திருந்துநான் நின்று விலக்குகிறேன்”


ஏழ்மை பசிதாகம் எல்லாம் விலக்கியில்லம்

வாழ்வகை செய்தருள்வாய் வண்ணத் திருமகளே! (8)


நல்ல மணமுடையாய்! நல்லினிமை மிக்குடையாய்!

எல்லாம் நிறைந்தவள் நீ! வெல்லமுடி யாதவள் நீ!


எவ்வுயிர்க்கும் நீ தலைவி! இன்பத் திருமகளே!

இவ்வுயிர்க்கு முள்ளே இனிதிருக்க வேண்டுகிறேன்! (9)


என்விருப்பம் என்னெண்ணம் என்றும் அறநெறியில்

நின்றுநிறை வேறியுண்மை நீளட்டும் என்னாவில்


நன்னெறியால் சோறுண்டு நல்லின்பம் ஓங்கட்டும்

மன்னுலகில் நற்புகழே மண்டியெனைச் சேரட்டும் (10)


கர்த்தம! நீ பெற்ற கமலமகள், தன்னருளால்

உத்தம னாக்கியென்னுள் ஓங்கி வளரவேண்டும்!


தாமரைத்தார் சூடும் தலைவியென் தாயவள்!

ஆமென் குலத்தில் அமர்ந்தவள் காக்கவேண்டும்! (11)


செய்யாள் திருமகனாம் சிக்லீத மாமுனியே!

உய்வுதரும் தண்ணீர் உணவைப் பெருக்கட்டும்!


இல்லத்தில் நீங்கள் இருக்கவேண்டும்! உம்மன்னை

வல்லவள் எம்குலத்தில் வாழவேண்டும் என்னாளும்! (12)


தாமரை மண்டும் தடாகத்தில் வாழ்பவள்

ஆமனை வர்க்கும் அமுதூட்டிக் காப்பவள்


குங்குமவண் ணத்தாள் குளிர்க்கமலத் தண்கழுத்தாள்

பொங்கும் முழுமதியைப் போன்றவோர் பொன்னாள்!


கருணை மிகுந்தவளை, தங்கமனம் கொண்ட

திருமகளை, அக்கினியே! நீசொல்லிக் கூட்டிவா


என்னில் அவளை எழுந்தருளச் செய்திடுவாய்

பொன்னியை என்னுள் பொருந்திடச் சொல்வாய் (13)


கருணை நிரம்பியவள் காரியத்தில் தேர்ந்தாள்

தருமத்தைத் தான் நிறுவத் தங்கக்கோல் ஏந்தினாள்


பொன்னுருகி ஓடும் பொலிவு நிறத்தழகி

பொன்மாலை சூடிப் புதுக்கதிர்போல் தானொளிர்வாள்


பொன்னேங்கும் பொன்னாய்ப் புடைத்த திருமகளை

என்னெஞ்சில் வந்தே எழுந்தருள்வச் செய் தீயே! (14)


எண்ணற்ற பொன்னையும் ஏவலுக்குச் சேவகரும்

கண்ணுக் கினிய கறக்கும் பசுக்களும்


யாராலே நானடைவேன்? அந்தத் திருமகளைப்

பேர்சொல்லிக் கூட்டிவா பேராற்றல் அக்கினியே!


என்னையவள் சற்றும் விலகாமல், தேவியெனும்

பொன்னவளை என்னுள் பொருந்தியிருக் கச்செய்வாய் (15)


யாவும் அறிந்தவனே அக்கினியே! தேவியென்னுள்

மேவிக் களிக்கவே செய்.


சாஸ்தா விடுதிகள்

 சாஸ்தா விடுதிகள் மணிதாசர் விடுதிகள் 1​ அத்தாதி புத்திரனார் ​ஆதி குளத்தூரானும் வெற்றியுள்ள கோபுரமும் வெகுமையுள்ள பூ முகப்பும் ​சுற்றிவர பொற்...