Skip to main content

Posts

Showing posts from February, 2024

ஆனந்த ராமாயணம்

பெருமாள் துதி அண்டர் நம் துயரம் தீர அயோத்திமா நகரில் வந்து தண்டகாரணியம் சென்று சமுத்திர மீ வணையைக்கட்டி கொண்டுரா வணனைமாட்டக் கோதண்டங் கையிலேந்தி  புண்டரீககக் கண்ணன் ராமன் பொன்னடிக் கமலல் போற்றி  1 . பாலகாண்டம்  தேவர் குறை தீர்த்திடவே ராமா ராமா மூவரோடு அவதரித்தாய் ராமா ராமா தசரதர்க்குப் பாலகனாய் ராமா ராமா புஜபலத்தோடு ஜனித்தாய் ராமா ராமா கோசலைதன் கர்பத்தில் ராமா ராமா கூசாமலே நீ பிறந்தாய் ராமா ராமா தவமுனிக்கு உதவி செய்ய ராமா ராமா கவனமுடன் பின் சென்றாய் ராமா ராமா தாடகையை சங்கரித்தாய் ராமா ராமா பாடபுகழ் தானடைந்தாய் ராமா ராமா கல்லைப் பெண்ணாக்கு வித்தாய் ராமா ராமா வில் வளைக்க மிதிலை சென்றாய் ராமா ராமா ஜனகன்வர லாறு கேட்ட ராமா ராமா தனக்குப்பதில் முனியுரைக்க ராமா ராமா தனுசைக் கையிலெடுத்தாய் ராமா ராமா மனதில் கிலேசமுற்றாய் ராமா ராமா வில்முறிய சீதைக்கண்டு ராமா ராமா நல்மணஞ் செய்து கொண்டாய் ராமா ராமா மங்களங்கள் பாடவே ராமா ராமா தங்கனீர் மிதிலைதனில் ராமா ராமா பரசுராமர் வில்முறித்தீர் ராமா ராமா கரசனமா வயோத்தி சென்றீர் ராமா ராமா சீதையுடன் வாழ்ந்திருந்தீர் ராமா ராமா சிறப்பவே அயோத்தி நகர் ராம...