திரு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு - திருவேளைக்காரன் வகுப்பு ஆன பய பத்தி வழிபாடு பெறு முத்தி அதுவாக நிகழ் பக்த ஜனவாரக்காரனும் ஆரம் அது உரித்த கனி காரணம் முதற்று அமைய நாருடன் உணக்கைபரி தீமைக்காரனும் ஆகமம் விளைத்த கில லோகமு நொடிப் பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக்காரனும் ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிய அநுபூதியடை வித்ததொரு பார்வைக்காரனும் ஆடலைவு பட்டமரர் நாடது பிழைக்க அமராவதி புரக்குமடல் ஆண்மைக்காரனும் ஆடகவி சித்ரகன கோபுர முகப்பில் அருணாபுரியில் நிற்கும் அடையாளக்காரனும் ஆயிர முகத்து நதி பாலனும் அத்தடிமை யானவர் தொடுத்த கவி மாலைக்காரனும் ஆறுமுக வித்தகனும் ஆறிரு புயத்தரசு மாதிமுடி வற்ற திருநாமக்காரனும் யான் எனதெனச் சருவும் ஈன சமயத்தவரும் யாரும் உணர்தற்கு அரிய நேர்மைக்காரனும் யாது நிலை யற்றலையும் ஏழு பிறவிக் கடலை ஏறவிடு நற்கருணை யோடக்காரனும் ஏரகம் இடைக்கழிசி இராமலை திருப்பழநி ஏரணி செருத்தணியில் வாசக்காரனும் ஏழையின் இரட்டை வினை யாயதொருடற் சிறை இராமல் விடுவித்தருள் நியாயக்காரனும் யாமளை மணக்கும் அகசாமளை மணிக்குயிலை யாய...
Om Namo Bhagavate Vāsudevāya